என் மலர்
சேலம்
- ஒரு மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழிப்பறியில் தொடர்புடைய காரைக்குடி அருகே கோட்டை யூர் அடுத்த வேளாண்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (32), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விஸ்வாரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோர் வேறொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் இரு வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்டு அனுமதி அளித்ததன் பேரில் சூரமங்கலம் போலீசார் பாண்டியன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது.
- சாலையை புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் மற்றும் வேன், கார்கள் உள்பட தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
பரபரப்பாக இருக்கும்
வாழப்பாடியில் பஸ் நிலையம், பெரும்பாலான அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், கடைவீதி, தினசரி சந்தை, பயணியர் மாளிகை, தபால்நிலையம், வேளாண் விற்பனை நிலையம், போலீஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை பிரதான கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இந்த இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
சாலை புதுப்பிப்பு
சேலம்- –சென்னை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் போது வாழப்பாடியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த கடலூர் சாலையை விரிவுபடுத்தாமல் முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ. தூரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
இருப்பினும், கடலூர் சாலையில் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுக்கு மேலாக குண்டும் குழியுமாக பழுதடைந்து கிடந்த இச்சாலையை புதுப்பிக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான 4 கி.மீ தூரம் கடலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை கடந்த மாத இறுதியில் புதுப்பித்தது. இச்சாலையை மாநில நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது.
வேக தடைகள் அமைக்க கோரிக்கை
சாலையை புதுப்பிப்பதற்காக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம், கடைவீதி, மன்னாயக்கன்பட்டி பிரிவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பேளூர் பிரிவு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரையிலான கடலூர் சாலையில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் சீராக செல்ல சாலை தடுப்புகள் அமைக்கவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
- அணையில் 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வந்த 31 கன அடி தண்ணீர் உபரிநீராக கரியக்கோவில் ஆற்றில் திறக்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
விளை நிலங்கள்
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.
ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 2000 ஏக்கர் ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகிறது.
சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு பெய்த பருவ மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி 50.52 அடியை எட்டியது.
அணையில் 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வந்த 31 கன அடி தண்ணீர் உபரிநீராக கரியக்கோவில் ஆற்றில் திறக்கப்பட்டது.
இதையடுத்து வாய்க்கால் பாசன மற்றும் ஆற்றப்படுகை கிராம விவசாயத்திற்காக நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அணையில் இருந்து பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாதம் இறுதியில் அணையின் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது.
இதனிடையே தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை. தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் மாறாக சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்தது. தற்போது அணையில் நீர்மட்டம் 18.37 அடி உள்ளது.
காத்திருக்கும் விவசாயிகள்
27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் குட்டை போல தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கவலையடைந்துள்ள கரியகோவில் அணை மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது.
- கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பூலாம்பட்டி செல்லும் மேட்டூர் அணையின் 16 கண் உபரிநீர் போக்கி கால்வாயின் கரையோரத்தில் நேற்று மாலை திடீரென தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. கால்வாயின் கரையோரம் இருந்த கோரை புற்கள் மற்றும் கழிவுகள் இந்த தீயில் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், நடந்து சென்ற மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காவிரி கரையோர பகுதிகளில் ரசாயன கழிவுகள் கொட்டுவதால் இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாசக்கோளாறு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், நகர மன்றத் துணைத் தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிப்படை தேவைகள்
கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேதாச்சலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்து வெளியேறினார்.
5-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும்.
இந்த கைலாசநாதர் ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அதிசய எண்கோண வடிவ தெப்பக்குளமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
சுற்றுலா தலம்
அதேபோல் தாரமங்கலம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள தாரமங்கலம் ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி தமிழக அரசின் காவிரி உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு உபரி நீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாத காரணத்தினால் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி, தூர்வாரி தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடுகள் செய்து நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏரியை சுற்றுலா தலமாக்கும் முயற்சிக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தனர்.
சுகாதார பணிகள்
14-வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் பேசும்போது, மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்தமாறு கோரிக்கை விடுத்தார்.
4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய பரிசீலனை செய்து குறைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
- மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்புதூர் ஊராட்சியில் வீராச்சியூர், பூமருத்துவர், கண்ணப்பாடி, கோவில்பாடி, சுரக்காப்பட்டி, கொலகூர், கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் இன்று காலை கணவாய்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், கணவாய்புதூர் பகுதியில் இருந்து கண்ணப்பாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு சுமார் 7 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில் சாலை முழுவதும் பழுதடைந்து உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கணவாய் புதூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர். இந்த பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
எனவே சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
- கர்நாடக அரசு பெயரளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
- இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1004 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
கர்நாடக அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய உரிய தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
கர்நாடக அரசு பெயரளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
இதனால் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்தது.
நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து 1,514 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 34.42 அடியாகவும், நீர் இருப்பு 9.3 டி.எம்.சி. ஆகவும் இருந்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 3 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு 2,500 கன அடி குறைத்து வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1004 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 33.58 அடியாக உள்ளது. 9.02 டி.எம்.சி. தண்ணீர் அணையில் உள்ளது.
நீர் திறப்பு தொடர்ச்சியாக 4 ஆயிரம் கன அடி நீடித்தால் இன்னும் 2 வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
- தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.
தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றன.ர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
- இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் ஏரியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் வரவேற்றார். அரிமா வட்டார தலைவர் ஜவஹர், டாக்டர் பொன்னம்பலம், பொருளாளர் கலைஞர்புகழ், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தேன்மொழி சண்முகம், ஊராட்சி செயலாளர் குமரேசன், தலைமையாசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் ரமேஸ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மக்கள் நலப் பணியாளர் தனபால், கிராம உதவியாளர் கணேசன் மற்றும் அம்மாசி ஆகியோர் கொண்ட குழுவினர் 2ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். முடிவில் பிரவீன் நன்றி கூறினார்.
- வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.
- 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.
இந்நதியின் குறுக்கே 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
பாசன வசதி
இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பா ளையம், சந்தர பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
கடந்தாண்டு இறுதியில் ஆனைமடுவு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பருவ மழையால் நிகழ்வாண்டு ஜனவரி மாதம் அணையின் நீர்மட்டம் 53.71 அடியாக உயர்ந்தது. அணையில் 149 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இதனால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென நேரடி ஆற்றுப்பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் அணை வாய்க்கால் பாசன புதிய ஆயக்கட்டு விவசாயிகளும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் திறப்பு
இதனையடுத்து அணையில் இருந்து மே மற்றும் ஜூன் மாதத்தில் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஜூலை மாதத்தில் அணையின் நீர்மட்டம் 30.83 அடியாக சரிந்து 46.64 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே கிடந்தது.
தொடர்ந்து 2 மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 26 அடியாக சரிந்து 36 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
விவசாயிகள் கவலை
எதிர் வரும் மாதங்களில் போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் தான் அணை பாசனத்தை நம்பி கரையோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு மற்றும் தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வழக்கம் போல, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிகழ்வாண்டும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை பெய்யும். எனவே, அணையின் நீர்மட்டம் 2 மாதங்களில் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பொறியாளர்கள், விவசாயிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- சேலம் லயன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
- இன்று தரப்படும் புகார் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் லயன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில் சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி சரகங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீது அதிருப்தியில் உள்ளவர்களை நேரில் வரவழைத்து, விசாரணை மேற்கொண்டு எதிர் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தி உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று தரப்படும் புகார் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டார். இந்த பெட்டிஷன் மேளாவில் ஏராளமான மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.
தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றனர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






