என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிப்ப தற்காக 8300175888 என்ற தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் இந்த தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தினார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 83001 75888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனுதார ருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.

    மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 1098, பேரிடர் மேலாண்மை சார்பில் 1077, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 181, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ராமநாதபுரம் பா.ஜனதா சார்பில் 104-வது “மன் கி பாத்” நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் உள்ள பா.ஜனதா நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    ராமநாதபுரம்

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வழி யாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த உரை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன் 100-வது அத்தியாயம் நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நடந்தது.இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி 104-வது "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்ட முழுவதும் 170 இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் உள்ள பா.ஜனதா நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமோ ஆப் தேசிய ஒருங்கி ணைப்பாளர் சைலேஷ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "மன் கி பாத்" நிகழ்ச்சி குறித்து விளக்கவுரையாற்றினார்.

    மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சிவசங்கர், அரசு தொடர்பு முனியசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன், முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீநாத், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்கு மார், நகர் தலைவர் கார்த்திக், நகர் பொதுச் செயலாளர் பாக்யராஜ் மற்றும் பிரபு நவநீதன் உள்ளிட்ட ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள், உறுப்பினர்கள் கொண்டனர்.

    • கமுதி பகுதியில் காலை உணவு திட்டம் தொடக்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட115 மையங்களில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கமுதி அருகே என்.கரிசல் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.வாலசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன், மேலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி ஜெயராஜ், தலைமையாசிரியை சிவஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருப்பர் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
    • பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி கிராமம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா, மற்றும் கந்தூரி விழாவில் இந்துக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    அதனடிப்படையில் கரிசல்பட்டியில் வஞ்சினி கருப்பர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த நிலையில் வருடாபிஷேக சிறப்பு பூஜையும் வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது.

    வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழா அன்னதானத்தை முன்னிட்டு கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து கிராம மக்கள் அழைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பட்டு உள்ளிட்ட இந்துக்களின் வழிபாட்டு சீர்வரிசை எடுத்து வந்து மதநல்லிணக்க திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஜமாத்தார்களுக்கு ஊர் மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்வு இந்த பகுதி பாரம்பரியத்தையும் சகோதரத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல் சிங்கம்புணரி அருகே நாகமங்கலத்தில் தாருல் ஹைராத் மதரஸத்துன் நிஸ்வான் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.

    இதில் பங்கேற்ற இந்துக்கள் மந்தையம்மன் கோவிலிலில் இருந்து பள்ளிவாசலுக்கு இனிப்புகள், பழங்களுடன் ஊர்வலமாக சீர் வரிசை கொண்டு வந்தனர்.

    புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    • முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்றுள்ளது.
    • தினமும் காலை உணவு சாப்பிடுவதால் அவர்களின் கற்றலின் திறன் அதிகரிக்கும்.

    ராமநாதபுரம்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை வரவேற் றுள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி மதுரை அரசுப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் காலையிலேயே வீட்டிலி் இருந்து புறப்பட்டு விடுவ தால், பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, கிராம புறங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் அதிகாலை யில் விவசாயம் போன்ற வேலைகளுக்கு செல்வதால், அந்த பெற்றோர்களின் குழந்தைகள் காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்-அமைச்சரால் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தால் பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதால் அவர்களின் கற்றலின் திறன் அதிகரிக்கும்.மேலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடின்றி இருப்பார்கள்.

    17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவு திட்டத்தை மாநிலத்தலைவர் தியாகராஜன் தலைமையிலான தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கடந்த 14-ந் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப் புல்லாணி ஒன்றியம் உதய–நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டா–லின் நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் எஸ்.பி.ஜெயமுரு–கன் வரவேற்றார்.

    நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த் திக், உத்திரகோச–மங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன் சிலர்கள் ஆதித்தன், கார்த் திகேஸ்வரி கொத்தலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் (மேற்கு), நாகேஸ்வரன் (கிழக்கு) உட்பட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட் டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்க–ளிடம் பிடிபடாத காளை–களின் உரிமையாளர்க–ளுக் கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–களும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

    • சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 24மணிநேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரா.விஜி (எ) விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 24மணிநேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ரா.விஜி (எ) விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வரவேற்றார். செயலாளர்கள் செல்லப்பா, கி.சோமசுந்தர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சீனி முகமது நன்றி தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • கீழக்கரையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காலை உணவு விரிவாக்க திட்டம் புதிய கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா திட்டத்தை தொடங்கி வைத்தார். மறவர் தெரு, முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை செஹானஸ் ஆபிதா தொடங்கி வைத்தார்.

    நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பாதுஷா, சக்கினா பேகம், காயத்ரி, ஜெயலெட்சுமி, சூர்ய கலா, சித்திக், பைரோஸ் பாத்திமா, சேக் உசேன், பவித்ரா, கீழக்கரை நகர் தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், பொருளாளர் சித்திக், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, பொறியாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் பாபா மெட்ரிக் பள்ளியில் சந்திரயான் கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் நர்சரி ப்ரைமரி பள்ளியில் மாணவர்களுக்கு சந்திரயான் 3 பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவிற்கு நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் கபிலன் மற்றும் நிர்வாகி மீனாட்சி முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதிய மருத்துவ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள், அதிதீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை உள்ளிட்ட புதிய மருத்துவ சேவைகள் தொடக்க விழா நடந்தது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சுப்ரமணியன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.க்கள் கருமாணிக்கம், முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசை வீரன், ராமநாதபுரம் நகர் சபை தலைவர் கார்மேகம், துணை

    தலைவர்பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நகராட்சி உறுப்பினருமான ஜஹாங்கீர், போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில் குமார், மருத்துவர்கள் மலையரசு, மனோஜ்குமார், ஆனந்த் சொக்கலிங்கம் உள்பட பலர் கொண்டனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • கீழத்தூவல் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தாயி திருநாவுக்கரசு அனை வரையும் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் ஊராட்சி, மேலத்தூவல் கிராமத்தில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர்க்கு காலை உணவு திட்டத்தை தாசில்தார் சடையாண்டி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகபிரியா ராஜேஸ், ஆனையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழத்தூவல் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தாயி திருநாவுக்கரசு அனை வரையும் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவி களுக்கு காலை உணவு இனிப்புடன் வழங்கப்பட்டன. காலை உணவு தொடக்க விழாவில் ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமி முத்துராமலிங்கம் வட்டார கல்வி அலுவலர் இந்திராகாந்தி மேலத்தூவல் தொடக் கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி, கீழத்தூவல் ஊராட்சி செயலர் முனியசாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ×