வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப் புல்லாணி ஒன்றியம் உதய–நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டா–லின் நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் எஸ்.பி.ஜெயமுரு–கன் வரவேற்றார்.

நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த் திக், உத்திரகோச–மங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன் சிலர்கள் ஆதித்தன், கார்த் திகேஸ்வரி கொத்தலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் (மேற்கு), நாகேஸ்வரன் (கிழக்கு) உட்பட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட் டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்க–ளிடம் பிடிபடாத காளை–களின் உரிமையாளர்க–ளுக் கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–களும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com