என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமேசுவரம் மீனவர்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுப டுத்தப்பட்டு வருகிறது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர் கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகிறார்கள். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்ப டகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப் பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இலங்கை கடற்படையின ரின் இந்த அராஜக நடவ டிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகு களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தை அறிவித்துள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் முழுவதுமாக முடங்கிய தோடு, கோடிக்கணக்கில் வர்த்தகமும் பாதிக்கப்பட் டுள்ளது.

    இந்தநிலையில் மூன்றா வது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே மீனவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் தபால் அலுவ லகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் என்.ஜே.போஸ், ஜேசுராஜா, சகாயம் எமரிட், நடேச நாட்டார், ஆல்வின் பிரான் சிஸ், அந்தோணி பிரசாத், பாக்கியநாதன் மற்றும் நிர் வாகிகள் கலந்துகொண்ட னர்.

    • செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக செவிலி யர்களை பொது தளத்திலும், தொலைபேசி உரையாடல்க ளிலும் செவிலியர்களின் தரத்தை குறைக்கும் வகையி லும், ஒட்டுமொத்த செவிலி யர்களை தரக்குறைவாகவும், செவிலியர்கள் சேவையை கொச்சைப்படுத்தும் விதமா கவும் பேசி வருவதாக புகார் எழுந்தது.

    இந்த செயலில் கிராம சுகாதார செவிலியர்கள் சங் கத்தின் மாநில தலைவர் இந்திரா ஈடுபடுவதாக கூறி அவரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடை பெற்றது. ஆர்ப்பாட் டத்தை ராமநாதபுரம் மாவட்ட அரசு செவிலியர்கள் கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

    போராட்டத்தில் கிராம சுகாதார செவிலியர் இந் திரா மீது துறை ரீதியான நடவ டிக்கை மற்றும் சட்ட ரீதியான அவதூறு நடவ டிக்கை எடுக்க கோரி செவி லியர்கள் கண்டன முழக்கங் கள் எழுப்பினர். நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணி புரியும் செவிலியர்கள் மற் றும் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உணவு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழக மக்கள் முன்னேற் றக் கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக அதன் பொதுச்செயலாள ரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக தலைவருமான டாக்டர் ஜா.பிரிசில்லா பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செய லாளர் முனியசாமி தலை மையில் தேவிபட்டி னம் அருகே தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மனவளர்ச்சி குன்றி யோர் இல்லத்தில் கேக் வெட்டி காலை உணவு வழங்கப்பட்டது.

    மாவட்ட தலைவர் ராஜ சேகர், மாவட்ட பொருளா ளர் கேசவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்பாண்டியன், ராமநா தபுரம் ஒன்றிய செயலாளர் மாரிதாஸ், ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலை வகித்த னர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் துரைராஜா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சதீஷ்குமார்,

    திருவாடானை ஒன்றிய செயலாளர் சேவியர், மாவட்ட மாணவரணி செய லாளர் விக்னேஷ்வரன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சதீஷ் பாண்டியன், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜண்டா பாண்டியராஜன், வெங்கடேஷ், ராமநாதபுரம் ஒன்றிய இணைச் செயலா ளர் தினேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி சுரேஷ் ஒன்றிய தலைவர் கமலேஷ், ராமநாதபுரம் நகர பொறுப் பாளர் மகேஷ்குமார், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இணைச் செயலாளர் துரை தேவேந்திரன், ஒன்றிய தொழி லாளர் அணி மகா லிங்கம், ஆட்டோ கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் சேமிக்கும் குடிநீரை மூடி வைத்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
    • சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக வீடுகளில் குடி நீரை கேன்கள், திறந்த நிலை டிரம்களில் பொது மக்கள் பிடித்து சேமித்து வருகின்ற னர். இதில் உருவாகும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந் தப் பகுதியில் சுகாதா ரத்து றையினர் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகின்றனர்.

    திறந்த வெளியில் தண் ணீரை சேமிக்க கூடாது, சேமிக்கப்படும் தண்ணீர் டிரம்களை மூடி பாதுகாப் பாக வைக்க வேண்டும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகாமல் தடுக்க வேண்டும் என்று வீடு, வீடாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறையால் வீடுகளில் சேமிக்கப்படும் குடிநீரால் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய பகுதிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகிறோம்.

    பரிசோதனைகளை உரிய முறையில் நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனை களில் கார்டுகளில் டெங்கு பரிசோதனை செய்யக் கூடாது. காய்ச்சல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • ராமர் தீர்த்த குளத்தை தூர் வரவேண்டும்.
    • பாசிகளை அகற்றி தூர்வார பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்ன கத்து காசி என்று போற்றப் படும் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித ஸ்தல மாகவும் விளங்குகிறது. ஸ்ரீராமர், சீதை, அனுமன் உள்ளிட்ட தெய்வங்கள் சிவ லிங்கம் செய்து பூஜை செய்த இடமாகும். இதனால் இந் தியா அளவில் முக்கியத்து வம் வாய்ந்த கோவிலாக உள்ளது.

    எனவே தமிழகம் மட்டு மின்றி வடமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியும், கோவிலில் உள்ள 22 தீத்த மாடியும் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபடுகிறார்கள்.

    இக்கோவிலுக்கு சொந்த மான ராமர் தீர்த்தம், லெட்சு மண தீர்த்தம் நகரின் முக்கிய பகுதியில் உள்ளது. இதில், இதில் ராமர் தீர்த்த குளத்தில் நாள் தோறும் ஏராளமான வடமாநில பக்தர்கள், தமிழ் நாடு பக்தர்கள் தீர்த்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் தீர்த்த குளம் பாசி அடந்து மிகவும் மோச மாக காணப்படுகிறது. இத னால் துர்நாற்றம் வீசி வரு கிறதுய. மேலும் தொற்று நோய் பரவிவிடும் என்ற அச்சத்தில் பக்தர்கள் தீர்த்த குளத்தை பயன்படுத்தவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே ராமர் தீர்த்த குளத்தை தூர்வாரி தூய் மைப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை உட னடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • ராமநாதபுரத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நவாஸ்கனி எம்.பி. ஆய்வு செய்தார்.
    • பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் உத்தர வுப்படி ராமநாதபுரத்தில் பழைய பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புதிய பேருந்து நிலையத்தில் சரி வர முறையாக பணிகள் நடைபெறவில்லை என்றும், கட்டுமான பணிக்கு பயன்ப டும் இரும்பு கம்பிகள் துருப் பிடித்து உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.யிடம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் முறையிட்டனர்.

    அதன் பேரில் பாராளு மன்ற உறுப்பினர் நவாஸ் கனி திடீரென புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். உடன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். பின்னர் நவாஸ் கனி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய விரிவாக்கம் செய் யப்பட்டது. தற்போது இது தரமாக கட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்தேன். தொடர்ந்து இனி நான் ஆய்வு செய்வேன். ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெ டுவிற்குள் முழுமையாக புதிய பேருந்து நிலைய கட்டிட பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர் என்றார்.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளான மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லா கான், மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் ரஹ்மான், ராமநாதபுரம் நகர் தலைவர் காசிம், செயலாளர் சிராஜ் தீன், செயலாளர் அஜ்மீர், மாநில ஊடகவியல் செயலா ளர் சபீர், எஸ்.டி.யூ. மாவட்ட பொருளாளர் மோகன், காங்கிரஸ் நகர்மன்ற உறுப் பினரும், மாவட்ட பொறுப்பு குழு தலைவருமான ராஜா ராம் பாண்டியன் (எ) கோபால்,

    காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, கம்யூனிஸ்ட் கட்சி வக்கீல் முருகபூபதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேஷ் செல்வராஜ், கலையரசன் குருவே சந்தா னம், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், பொறியாளர் சீனிவாசன், வட்டார தலைவர் சேது பாண்டி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்த திரளாக கலந்து கொண்டனர்.

    • மானாவாரி பயிர்களில் மகசூலை அதிகரிக்க விதை கடினப்படுத்துதல் முக்கியமானது.
    • இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மானாவாரியில் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவாரி பயிர்க ளில் மகசூலை அதிகரித்திட விதை கடினப்படுத்துதல் என்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.

    விதை கடினப்படுத்துதல் என்பது விதையினை சில மணி நேரங்கள் நீரில் ஊற வைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்ப தத்திற்கு உலர வைத்தல் ஆகும். நீருடன் சில மருந்து களை கலந்து ஊறவைத்து விதைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட் சியை தாங்கி வளர்வதுடன் மிகக் குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

    நெல், கம்பு, பருத்தி விதைகளை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் குளோரை டினை 1 லிட்டர் தண்ணீ ரில் கரைக்க வேண் டும். இக்கரைசலில் 550 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப் பதம் வரும் வரை நிழலில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

    சோளம்

    சோளம் விதையை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 18 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை நிழலில் வைத்த பின் விதைக்க வேண்டும்.

    உளுந்து, பாசிப்பயறு

    உளுந்து, பாசிப்பயறு விதைகளை கடினப்படுத்த 1 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 கிராம் மாங்கனீசு சல்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரை சலில் 350 மில்லி லிட்டர் எடுத்து அதில் 1 கிலோ விதையினை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைக்க பயன்படுத்தும் விதையின் அளவை பொறுத்து கரைசலின் அளவினை கூட்டிக் கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது.
    • சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவிபட்டினம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மதுரை 4-ம் தொழிற்சங்கத்தின் தலைவர் ராஜா கே.பி.எம் நாகேந்திர சேதுபதி, கிருஷ்ணா இண்டர் நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், தலைமை ஆசிரியர் முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட னர். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, எம்.ஜி. பப்ளிக் பள்ளி தாளாளர் ஹர்சவர்தன், விளையாட்டு ஆசிரியர் சுந்தரராஜன், துணை வட்டாட்சியர்(ஓய்வு) கருப்பையா, கிராமிய கலைக்குழு வீரவேல், ஒயி லாட்ட கலைக்குழு தலைவர் வரதராஜ், ராமநாதபுரம் மாவட்ட சிலம்பு ஆசிரியர் நலச்சங்க தலைவர் பொரு ளாளர் வருசை கனி,

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்கம் செயலாளர் கண்ணன், பொருளாளர் செந்தில்குமார், உலக சாதனை நிர்வாகிகள் வினோத், பரணிதரன், பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 18 மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு கட்டைக்காலில் நின்று இரட்டை கம்புகளுடன் 2 மணி நேரம் 15 நிமிடமும், ஐஸ் கட்டி மேல் நின்று 2 கம்புகளுடன் 3 மணி நேரமும், 6 பானைகள் மேல் நின்று ஒற்றைக்கம்பு சிலம்பமும், மான் கொம்பு வீச்சு, கண்ணை கட்டிக் கொண்டு இரட்டை சுருள்வாள் சுற்றுவதும், ஆணி மேல் நின்று ஒற்றை தீப்பந்தத்துடன் 3 மணி நேரம் சுற்றுவதையும் செய்து காட்டினர். இது உலக சாதனையாக அமைந்தது.

    ஏற்பாடுகளை இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளர், மாஸ்டர் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் தலைவர் கின்னஸ் உலக சாதனை யாளர் என்.ஹேமநாதன் செய்திருந்தார்.

    சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் பகுதிக்கு கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே வாரச் சந்தை ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய வாரச்சந்தையின் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்த னர். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் வரவேற்றார்.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதிய வாரச் சந்தையை திறந்து வைத்தார். விழாவில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் மாவீரன், வேலுச் சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி துணைத் தலைவர் வயணப் பெரு மாள் ஆகியோர் கலந்து கொண்டனா்.

    பின்னர் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 பெண்க ளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், முதுகுளத்தூர் பகுதியில் கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பார்த்திபனூர் பைபாஸ் சாலை பணிகள் முடிவ டைந்து விட்டன. கமுதி- சாயல்குடி பகுதியில் மில் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வள்ரச்சித் துறை அலுவலர்கள் சசிகலா, லாவண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
    • வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் அடிக்கடி சிங்கள கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 14-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் மற்றும் அவர்களின் 5 விசைப்படகுகளை எல்லை தண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (18-ந்தேதி) பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதற்கிடையே நேற்று ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல் வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நவம்பர் 1-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கமுதியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

    கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார்.

    விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ், எம்.பி. நவாஸ் கனி, மாவீரன் வேலுசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வாசு தேவன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், மணலூர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாணி ஊரணியை பொதுமக்கள் தூர்வாரினர்.
    • தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த வாணி கிராமத்தில் மன்னர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாணி ஊரணி பெரிய பரப்பளவை கொண்டதால் அதனை தூர்வார அதிகளவில் நிதி செலவினம் ஆகும். இதனால் தூர்வாறும் பணி தாமதமானது.

    இதுகுறித்து தற்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் சக்கரக்கோட்டை ஊராட்சி மூலம் ரூ.2 லட்சம் நிதி வழங்க பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் செ.யாழினி புஷ்பவள்ளி நிதியை அனைத்து சமுதாய மக்களிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து வாணி கிராம ஜமாத்தார்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றி ணைந்து வாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை திரட்டினர்.

    அதனை தொடர்ந்து ஊரணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொதுமக்களின் சீரிய முயற்சியால் தூர்வா ரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வை யிட்டு பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களால் பிரார்த் தனை செய்யப்பட்டது.

    ×