search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை எம்.பி. ஆய்வு
    X

    ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணிகளை நவாஸ்கனி எம்.பி. ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை எம்.பி. ஆய்வு

    • ராமநாதபுரத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நவாஸ்கனி எம்.பி. ஆய்வு செய்தார்.
    • பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் உத்தர வுப்படி ராமநாதபுரத்தில் பழைய பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புதிய பேருந்து நிலையத்தில் சரி வர முறையாக பணிகள் நடைபெறவில்லை என்றும், கட்டுமான பணிக்கு பயன்ப டும் இரும்பு கம்பிகள் துருப் பிடித்து உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.யிடம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் முறையிட்டனர்.

    அதன் பேரில் பாராளு மன்ற உறுப்பினர் நவாஸ் கனி திடீரென புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். உடன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். பின்னர் நவாஸ் கனி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய விரிவாக்கம் செய் யப்பட்டது. தற்போது இது தரமாக கட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்தேன். தொடர்ந்து இனி நான் ஆய்வு செய்வேன். ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெ டுவிற்குள் முழுமையாக புதிய பேருந்து நிலைய கட்டிட பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர் என்றார்.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளான மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லா கான், மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் ரஹ்மான், ராமநாதபுரம் நகர் தலைவர் காசிம், செயலாளர் சிராஜ் தீன், செயலாளர் அஜ்மீர், மாநில ஊடகவியல் செயலா ளர் சபீர், எஸ்.டி.யூ. மாவட்ட பொருளாளர் மோகன், காங்கிரஸ் நகர்மன்ற உறுப் பினரும், மாவட்ட பொறுப்பு குழு தலைவருமான ராஜா ராம் பாண்டியன் (எ) கோபால்,

    காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, கம்யூனிஸ்ட் கட்சி வக்கீல் முருகபூபதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேஷ் செல்வராஜ், கலையரசன் குருவே சந்தா னம், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், பொறியாளர் சீனிவாசன், வட்டார தலைவர் சேது பாண்டி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்த திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×