search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

    செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    • செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக செவிலி யர்களை பொது தளத்திலும், தொலைபேசி உரையாடல்க ளிலும் செவிலியர்களின் தரத்தை குறைக்கும் வகையி லும், ஒட்டுமொத்த செவிலி யர்களை தரக்குறைவாகவும், செவிலியர்கள் சேவையை கொச்சைப்படுத்தும் விதமா கவும் பேசி வருவதாக புகார் எழுந்தது.

    இந்த செயலில் கிராம சுகாதார செவிலியர்கள் சங் கத்தின் மாநில தலைவர் இந்திரா ஈடுபடுவதாக கூறி அவரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடை பெற்றது. ஆர்ப்பாட் டத்தை ராமநாதபுரம் மாவட்ட அரசு செவிலியர்கள் கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

    போராட்டத்தில் கிராம சுகாதார செவிலியர் இந் திரா மீது துறை ரீதியான நடவ டிக்கை மற்றும் சட்ட ரீதியான அவதூறு நடவ டிக்கை எடுக்க கோரி செவி லியர்கள் கண்டன முழக்கங் கள் எழுப்பினர். நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணி புரியும் செவிலியர்கள் மற் றும் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×