என் மலர்
ராமநாதபுரம்
- கடலாடி அருகே பசுமாடுகள் இறந்தன.
- இளஞ்செம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஒரு வானேந்தல் ஊராட்சி தேவர் குறிச்சிகிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவர் பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்ட மாடுகள் வீடு திரும்பவில்லை.
அப்போது கடலாடி பொதிகுளம் சாலையில் வயல் காட்டில் 2 மாடுகள் இறந்து கிடந்தன. மாடு தண்ணீர் குடித்ததில் விஷம் கலந்து இருக்கலாம் என்ற கோணத்தில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் அழகர்சாமி புகார் செய்தார். இளஞ்செம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவிகளின் நலன் கருதி சீர்மரபினர் மாணவிகள் விடுதி தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தேவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் புதிதாக விடுதி கட்டிடம் கட்ட கடந்த 9-ந் தேதி அரசாணை வெளியானது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
- தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு கடந்த மாதம் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களு க்கான தீர்வுகளை துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களுக்கான மீன்பிடி அடையாள அட்டை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இனி அந்தந்த பகுதி உதவி இயக்கு னர்கள் மூலம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்க ளுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மகாத்மா என்ற கார்த்திக் என்ற மீனவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். அவரது தாயார் கலைய ரசிக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்க ப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக் கான ஆணை யினை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
தி.மு.க. மாவட்ட செயலா ளரும், சட்டமன்ற உறுப்பி னருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் 286 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகர செயலாளர் முத்து ஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால், ஒன்றிய கவுன்சி லர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.
- கீழக்கரை வடக்கு தெருவில் மஸ்ஜித் கருணை பள்ளி திறக்கப்பட்டது..
- சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு பாத்தியப்பட்ட மஸ்ஜித் கருணை பள்ளி கட்டிடத்தை வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபூபக்கர் சித்தீக் தாயார் ஜைய்னுல் அரபு நினைவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் கட்டப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முகம்மது தலைமையில், வடக்குத்தெரு ஜமாத் துணைத் தலைவரும் ராமநாதபுரம் மெர்லின் சீட் கவர் உரிமையாளருமான செல்ல வாப்பா (எ)அப்துல் ஹமீது, துணை செயலாளர் கவிஞர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றி னார். வடக்குத்தெரு ஜமாஅத் மஸ்ஜித் மன்பஈ பள்ளி தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆலிம், ஜமால் ஆலிம், ஜகுபர் சாதிக், மஸ்ஜித் கருணை பள்ளி இமாம் புர்கான் ஆலிம், தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி முன்னாள் சேர்மன் பஷீர் அகமது, கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்த்தான் சம்சூல் கபீர், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், கீழக்கரை நகர் மன்ற உறுப் பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கீழக்கரை நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி கமிஷ னர் செல்வராஜ் கூறியதா வது:-
கீழக்கரை நகராட்சியில் பொது மக்களுக்கு தேவை யான பல்வேறு அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வரி செலுத்த அறிவிப்பு கொடுத்தும், பணியா ளர்களும் நேரடியாக சென்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் அதிக பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தி னால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு வரியை அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பகிரங்கமாக பொது வெளியில் மக்களின் பார்வைக்கும் வைக்கப்படும். மேலும் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே திட்ட பணிகள் மேற்கொள்ள முடியும்.
எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் நகராட்சி யில் செலுத்த முன்வர வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்த லாம்.தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது.
- அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது.
வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இந்த முகாம் நடைபெறுகிறது.
ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றாத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்,
மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்ைல.
- 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது.
அபிராமம்
நாடு சுதந்திரம் அடைந்தபின் முதன் முதலாக 1952-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த முதுகுளத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அபிராமம் அருகே உள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது சொந்த ஊரான பாப்பனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளாக சரியான சாலை வசதி செய்து தரவில்லை என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
1952-ம் ஆண்டு பாப்பனம் கிராமம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது சாலை வசதி செய்ய புறம்போக்கு நிலம் ஊர்ஜிதம் செய்து 1958ம் ஆண்டு செட்டில்மெண்ட் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலைகள் அமைக்க தடை ஏற்பட்டது.
தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாப்பனம் பகுதி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் வந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை பாப்பனம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அரசு அதனை சீரமைத்து தரவில்லை. மக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்களே பழுதாகி காணப்பட்ட சாலையை செப்பனிட்டு சரி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாப்பனம் கிராமத்தில் சாலை வசதிகள் முழுமையாக செய்துதரவில்லை. இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது பாப்பனம் ஊராட்சியில் 450 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள 1550 மீட்டர் நீளமுள்ள சாலையில் தார்சாலை அமைக்க அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை அமைத்துக்கொள்ள அபிராமம் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இதன்மூலம் பாப்பனம் முதல் அபிராமம் வரை உள்ள சாலையை போர்க்கால நடவடிக்கை எடுத்து தார்சாலையாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பிற தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.
- தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி தெற்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளை (20-ந் தேதி) மற்றும் நாளை மறுதினம் தமிழக-புதுவை கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளிலும், 22-ந் தேதி தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் 22-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழக மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதிச்சீட்டு இன்று வழங்கப்படவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சே்ாந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் பாம்பன் பகுதியில் 1,500 விசைப்படகுகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மீன்பிடிக்க செல்லாததன் காரணமாக நாளொன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
- அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் வலியுறுத்தினார்.
- தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ள ப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய பணிகள் தற்போது தொடங்கியு ள்ளதை முன்னிட்டு தேவை யான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது. அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பயனா ளிகளுக்கு முழுமையாக கிடைத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
- சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது.
ராமநாதபுரம்
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது. நேற்று மாலை பட்டினங்காத்தான் இ.சி.ஆர். சாலையில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் நடைபயணம் மேற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஊரக வளர்ச்சித் துறை சோமசுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு விடுதிகள் காப்பாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மணிமொழி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வருவாய்த்துறை சீனி முகம்மது உள்பட பலர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பத்திரப் பதிவுத்துறை சுரேஷ், கருவூலத்துறை கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத்துறை சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை, உரம், கூலி உயர்வால் கரிமூட்டம் தொழிலுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.
- பெரும்பாலான விவசாயிகள் இதை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலாகவும் செய்து வருகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் இடுபொருள், உரம் விலை உயர்வால் விவசாயத்துக்கு அடுத்ததாக வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாக விளங்குகிறது கரி மூட்டம். இது விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். இத்தொழிலுக்கு பிரதான மூலப்பொருளாக காட்டு கருவேல மரங்கள் பயன்டுகின்றன.
இது குறித்து விவசாயி விஜயன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவா டானை வட்டம் தமிழகத்தின் இரண்டாவது நெல் களஞ்சியமாக விளங்குகிறது. இங்கு சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.அத்தோடு அபிராமம், பரமக்குடி, முதுகுளத்தூர் , போகலூர், நயினார்கோவில், கடலாடி, சாயல்குடி கமுதி, ஆர்.எஸ்.மங்களம், திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் விவசாயம் பயிரிடப்படுகிறது.
ஆனால் விவசாயத்தில் போதிய லாபம் இல்லை. மேலும் விதை நெல், உரம், விவசாய கூலி உயர்வு காரணமாக விவசாயம் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக பலர் விவசாயத்தை கைவிட்டு கரிமூட்டம் ேபாடும் தொழிலுக்கு மாறி வருகின்றனர். மாவட்டத்தின் வறட்சியான சூழ்நிலையிலும் வளரக்கூடிய காட்டு கருவேல மரங்களை வெட்டி விறகு களை சேம்பர், காளவாசல் போன்ற செங்கல் தயாரிக்கும் சூளைக்கும் மேலும் சின்ன விறகுகள் தூர்கட்டைகளை அடுக்கி மூட்டம் போட்டு கரிகளை மூட்டையாக கோயமுத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு சாயப்பட்டறை களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதிக லாபம் கிடைக்கிறது இதனால் விவசாயத்திற்கு பதிலாக மாற்று தொழிலாக கரிமூட்ட தொழில் செய்யவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கரிமூட்ட தொழில் செய்யும் செல்வராஜ் கூறும்போது, விவசாயப்பணிகள் இல்லாத காலங்களில் கரிமூட்டம் போட்டு வருமானத்தை ஈட்டி வருகிறோம். ஏழ்மை நிலையிலும் விவசாயிகள் கருவேல மரங்களை வெட்டி விறகுகளாகவே பிற மாவட்ட, மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். கரிமூட்டம் போடுவதற்கு உடல் உழைப்பே மூலதனம். எனவே விவசாயிகள் கரிமூட்ட தொழிலை வாழ்வதாராமாக கொண்டுள்ளனர். தரிசு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வெட்டி விறகுகளை அடுக்கி கரிமூட்டம் போடுகின்றனர். அதன்மூலம் உருவாகும் கரிகளை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங் களுக்கும் விற்பனைக்காக அனுப்புகின்றனர். இதனால் கோடைகாலங்களில் செய்து வந்த கரி மூட்ட தொழிலை மழை காலங்களிலும் செய்து தற்போது விவசாயத்திற்கு மாற்று தொழிலாகவும் விவசாயிகளுக்கு இது வாழ்வாதாமாக உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் இதை ஒரு விவசாயம் சார்ந்த தொழிலாகவும் செய்து வருகின்றனர். விறகுகளை ஒரு டன் ரூ.3000 முதல் 4000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கரிமூட்டம் போடுகிறோம். அதிலிருந்து 15 முதல் 20 மூட்டைகள் வரை கிடைக்கும் கரிகளை மூட்டை ரூ.1000 வரை விற்பனை செய்கிறோம். இதனால் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயத்தைவிட இப்பகுதி மக்கள் கரிமூட்ட தொழிலை செய்து வருகிறோம் என்றார்.
விவசாயமும், விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பு என்று இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து மத்திய-மாநில அரசுகள் சொல்லி வந்தாலும் விவசாயம் சார்ந்த எந்த உருப்படியான திட்டங்களும் நிரந்தரமாக இல்லை. அதே போல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்பது இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது. அதிக அளவில் விவசாயிகளும் விவசாயமும் நிறைந்த தமிழகத்தில்தான் விவசாயத்திற்கு மாற்றாக காட்டு கருவேல விறகுகளை வெட்டி கரிமூட்டத்தொழில் செய்கிறார்கள் என்பது வேதனையான விசயமாகும்.
வருடம் தவறாமல் விதைக்கும், உரத்திற்கும் விலையேற்றம் வருகிறதே தவிர அதை வாங்கி வேளாண்மை செய்து விவசாயி விற்கும் பொருளுக்கு மட்டும் விலையேற்றம் வருவதில்லை.






