என் மலர்
ராமநாதபுரம்
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தவமுருகன், சேதுராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேல கிடாரத்தைச் சோந்தரவர் மலைராஜன் (50),லாரி டிரைவர். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியை ஓட்டி வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து லாரியை மடக்கியது.
பின்னர் லாரி டிரைவர் மலைராஜன் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ரூ. 2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கீழசெல்வனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து கடலாடியை சேர்ந்த சண்முகநாதன் (27), சண்முகய்யா பாண்டி யன்(27), கே.காளீஸ்வரன் (25), பி.காளீஸ்வரன்(23) ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய தவமுருகன், சேதுராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது.
- இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர்.
ராமேசுவரம்:
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள கடல் பரப்பில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டி அடிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாமல் போவது மட்டுமின்றி, லட்சக்கணக்கில் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் வெகுநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிலையில் நேற்று எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 524 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களின் 8 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த படங்களில் ஏறிய இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரையும் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி கம்பு மற்றும் கற்களால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியது குறித்து சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து மத்திய மற்றும் மாநில உளவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
- அக்னிதீர்த்த கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
ராமேசுவரம்:
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக கருதப்படுவது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில். இதனால் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.
ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி வழிபட்டு செல்வார்கள்.
இதனால் ராமேசுவரம் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதிலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்படும்.
விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதனால் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகள், அக்னிதீர்த்த கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
- திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம்
முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.
அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.
- குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
- ராமநாதபுரத்தில் தேசிய மாநாடு இன்று மாலை தொடங்குகிறது,
- வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் காமராஜர் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற பெயரில் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் நிறுவனத் தலைவரும், கேரள முன்னாள் அமைச்சருமான நீல லோகிததாசன் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில் 46-வது தேசிய மாநாடு ராமநாதபுரத்தில் இன்று மாலை (16-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்றைய அரசியலுக்கு காமராஜரின் அரசியல் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் நடவடிக்கைகள் அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், காமராஜரின் புகழை பரப்புதல் மற்றும் கல்வி மருத்துவ முகாம், மருத்துவ சேவை மற்றும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே காமராஜரின் புகழை பரப்பும் நோக்கத்திலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியா தேசிய செயலாளர் சேதுராமன், மாநாட்டு ஏற்பாட்டு குழு செயலாளர் நற்றமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் குகன், ஒருங்கிணைப்பாளர் சம்சுல் கபீர், இணைச் செயலாளர் அப்துல் பாசித், முருகேசன், அபுதாகிர், முஜம்மில், மருதுபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- கமுதி அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- இதில் பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறை களிலும் திட்டங்களை குறித்து பயன் பெறலாம். தனிநபர் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றன. உதவிகள் வழங்கப்பட்டன. உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி வட்டாட்சியர் சிக்கந்தர் பவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாசுதேவன், நீராவி ஊராட்சி மன்ற தலைவர் வாழ்ராஜ், துணைத் தலைவர் ஏ.பி.நாகராஜன், ஊராட்சி ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால் மண்டல துணை தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரத்தில் வீதி உலா வந்த சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அதன்படி இன்று (16-ந் தேதி) அஷ்டமி பூப்பிரத ஷணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடந்தன. 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருப்பள்ளி, கால சாந்தி பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின் பக்தர்களுக்கு படியளக்கும் நிகர்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு ராமநாதசாமி பிரியாவிடையுடனும், பர்வதவர்த்தினி அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அஷ்டமி வீதி உலாவை முன்னிட்டு கோவிலில் இன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடை சாத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோவிலுக்கு சென்று அடைந்தவுடன் கோவில் திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடை பெற்றது.
காலையில் நடை சாத்தப்பட்டிருந்ததால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் ரத வீதி, அக்னிதீர்த்த கடற்கரையில் காத்திருந்தனர்.
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மண்டல பூஜை நடந்தது.
- மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-ந் தேதி நடந்தது.
இதையடுத்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. 48 -வது மண்டல பூஜை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநா யகர் சிலைகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடந்தன.
அக்டோபர் மாதம் நடந்த தேவர்குருபூஜையின் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய வெள்ளி கவசத்தை அவரது மகன் ஜெயபிரதீப், அ.தி.மு.க. எம்.பி. ஆர்.தர்மர் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவித்தார். அப்போது அவருக்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வினோதினி சீனிவாசகம் சார்பில் 2 அடி வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்க ப்பட்ட தேவரின் வெள்ளி கவசத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
- பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள்யால் மாணவர்கள்-பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர்.
அபிராமம்
அபிராமம் பகுதியில் பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் மனநோயாளிகள் சுற்றி திரிகின்றனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.
பஸ் நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் மனநோயாளிகள் நடந்து கொள்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.
இதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடுகளில் சுற்றி திரிந்த மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்த்தனர். அந்த திட்டம் தொடர்ந்து பின்பற்றபடவில்லை. இதனால் தற்போது மனநோயாளிகள் மீண்டும் வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.
ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் தங்க இடமின்றி தெருவீதிகளில் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் மனநோயாளிகள் தெரு வீதிகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மனநலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் யூனியன் கூட்டம் நடந்தது.
- கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்தார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா. கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர் பார்வதி பேசுகையில், மேலக் கிடாரம் கிராமத்தில் கண்மாய் கரையை சேதப் படுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் கண்மாய் கரையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.
கவுன்சிலர் மாய கிருஷ்ணன் பேசுகையில், ஓரிவயலுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை சரி செய்ய நிதி ஒதுக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஜெயச்ச ந்திரன் பேசுகையில், மீனங்குடி, கருங்குளம் கடுகு சந்தை ஆகிய ஊராட்சிகளில் உள்ள தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனங்குடி கிராமத்தில் இருந்து அம்மன் கோவில் செல்லும் சாலையை மெட்டல் சாலையாக அமைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் அம்மாவாசி:- சிக்கல் பாண்டியன் ஊரணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி:- வாலிநோக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் பிச்சை:- ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலில்:- ஒப்பிலான் கிராமத்தில் இருந்து செல்லும் கடற்கரை சாலை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையூர் கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வசந்தா கதிரேசன்:- மாரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் ராஜே ந்திரன்:- வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உசவன் குளம் கிராமத்தில் இருந்து வாலிநோக்கம் செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர்புரம் சாலை முதல் ராஜாக்கள் பாளையம் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.
- ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
- குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 90 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.
நகரில் குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை பிரச்சினை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சரிவர பணி செய்யாததால் நகரில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிமாகி வருகிறது.
நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கவுன்சி லர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை கண்டு கொள்வதில்லை. நகராட்சி யில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ள அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு குற்றச்சாட்டு களை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
நகர்மன்ற தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினை சரிசெய்யப்படும். நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்படும்.
நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்நிலையம் இடிக்கப் பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.
இங்கு கூடுதலாக கடைகள், பார்க்கிங் வசதி அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் நகர் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கவும், ரூ.8.7 கோடி செலவில் வாறுகால் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது, என்றார்.






