என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் தலைமையில் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் கர்ண மகாராஜா முன்னிலை வகித்தார்.கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார்.

    மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட பசுமை தாயகம் தலைவர் திருஞானம், கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் பாலா,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ்,மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் செரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து. மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைக்கும் பணியின்போது உயர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் நினைவாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமை தாங்கினர்.

    இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சஹாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு நீத்தார் நினைவாக வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீ தொண்டு வாரம் நேற்று முதல் ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள்,கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும் என்று நிலைய அலுவலர் கூறினார்.

    • கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்.

    பசும்பொன்

    கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேனேஜர் ராமச்சந்திரன் வரவேற்றார். 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் தேவையை உடனுக்குடன் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை துணிச்சலுடன் கேளுங்கள். அனைத்தும் செய்து கொடுக்கப்படும். அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலையில் அரசு அறிவித்துள்ள ரூ.294-ஐ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையாளர்: 100 நாள் வேலை திட்டத்தில் அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.அன்பரசு (பேரையூர்): வேளாண் காலங்களில் 100 நாள் வேலை நடத்தப்படுவதில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. ஆணையாளர்: 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண் பணிக்கு பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாக்குவெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.

    அபிராமம்

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.

    கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும்.
    • பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமேசுவரம் :

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே வைத்து பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் பஞ்சாங்கம் உள்ளிட்ட பஞ்சாங்கங்கள் வாசிக்கப்பட்டன. சஞ்சீவி பட்டர் வாசித்தார்.

    பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

    இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும். இந்தியா தனது சொந்த முயற்சியில் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பல அரிய சாதனைகளை படைக்கும். வங்கிகளில் திடீர் பண பற்றாக்குறை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும். பணவிரயம் ஏற்படும். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு பஞ்சமின்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பல தங்கப்பதக்கங்களை பெறுவர்.

    ஜவ்வாது, சதுரகிரி, மேகமலை, மூணாறு போன்ற பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு கம்பளி, நூல் ஆடை, ஆபரணங்கள் விலை உயரும். பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். கோழிகளுக்கு புதிய வகை நோய் உருவாகும். இதனால் கோழிகள் இறக்க நேரிடும். சந்தைகளில் கோழிகளின் விலை உயரும்.

    புதிய வகை விஷக்காய்ச்சல் அதிகமாக பரவும். அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களுக்கு பல நெருக்கடிகள் உண்டாகும். ரசாயன பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். சன்னியாசிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் பல தொல்லைகள் ஏற்படும்.

    மழை அதிகளவு பெய்து மழை நீரானது ஆற்று வழியாக கடலில் கலக்க நேரிடும். குறிப்பாக வட மாநிலங்கள் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும். பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். பல நிறுவனங்களை அரசாங்கம் தனியார்மயமாக்க நேரும். மின்சார பொருட்களின் விலை உச்சத்தை தொடும். பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்களும் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.. இந்த பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் கோவிலின் ஆய்வாளர் பிரபாகர், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • இளைஞர்கள் தங்களுக்குள் லட்சியத்தை வளர்க்க வேண்டும் துணைவேந்தர் பேசினார்.

    பரமக்குடி

    பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 20, 21 மற்றும் 22-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை தாங்கினார்.

    முதல் நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 600 மாணவர்களுக்கு பட்டங் களை அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ரவி வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    பட்டப்படிப்பு என்பது கடினமான பயணத்தின் முடிவல்ல, ஆனால் பிரகாச மான எதிர்காலத்திற்கான வாக்குறுதிகளுடன் கூடிய அழகான பயணத்தின் ஆரம்பம்.

    பெரிய உலகிற்கு அடி யெடுத்து வைக்கும் போது, சமுதாயம் மற்றும் தேசத்தின் நன்மைக்காக உழைக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் கள் தியாகத்தால் நீங்கள் பட்டதாரி ஆகி உள்ளீர்கள்.

    மனித வாழ்வில் அடை யும் நீண்ட செயல்பா ட்டின் முதல் படி இலக்கை நிர்ண யித்தல். இலக்கை நிர்ண யித்த பிறகு, இளைஞர்கள் தன்னம்பி க்கையின் நேர் மறையான லட்சியத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2-வது நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மத்திய கருவி மற்றும் சேவை ஆய்வக இயற்பியல் துறை யின் தலைவர் நெடுமாறன் கலந்து கொண்டு 1200 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    • நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

    ராமநாதபுரம்

    பனைக்குளத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை ஒருங்கினைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை தலைவர் சாதுல்லாக்கான், மாவட்ட உதவி செயலாளர் பனைக்குளம் முகம்மது இக்பால், மாவட்ட உதவி செயலாளர் ஆசீக் உசேன், மாநில மாணவரனி ஈரோடு முஹம்மது பாருக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கினைப்பாளர் சுல்தான் சலாவுதீன், பனைக்குளம் கிருஷ்ணாபுரம் கணேசன் தலைமையி்ல் ஐந்து நபர்கள்,சோகையன் தோப்பு சேர்ந்த இரண்டு நபர்களும்,பொன்குளம் ஆதிராஜ் , சக்திமுருகன் பனைக்குளம் துணை செயலாளர் சீமான் என்ற சாகுல் ஹமீது, பனைக்குளம் பொருளாளர் சபிக் ரஹ்மான், பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை, முஸ்லீம் நிர்வாக சபை,ஐக்கிய முஸ்லிம் சங்கம் வாலிப முஸ்லிம் சங்கத்தை சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்

    • கமுதி யூனியனில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
    • யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடந்தது.

    பசும்பொன்

    கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகளை துணிச்சலுடன் தெரிவிக்க லாம். முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.294 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மணிமேகலை (ஆணையாளர்): 100 நாள் வேலை திட்டத்தில அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.

    அன்பரசு (பேரையூர்): வேளாண்மை காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்):- 2.5 ஏக்கரில் நெல் விவசாயம் செய்தேன் களை எடுக்க முடியவில்லை.மணிமேகலை (ஆணை யாளர்):- 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண்மை பணிக்கு பயன்படுத்த ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. பாக்கு வெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
    • படகுகள் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாதங்களில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தடை விதித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று 14-ந் தேதி நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் மாதம் 14-ந் தேதி வரை இந்த தடை நீடிக்கும். மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகள் இழுவை படகுகள் ஆகியவை துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூர மிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.

    மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள 2 மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். பெரும்பாலான மீனவர்கள் குடும்ப சூழல் கருதி மாற்று வேலைகளுக்கும் செல்வது உண்டு.

    மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதியில் நேற்று மீன் பிடிக்க சென்று கரைக்குத் திரும்பிய ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மீனவர்கள் துறைமுக கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து மீன்பிடி படகுகளில் பயன்படுத்தி வந்த மீன்பிடி சாதனங்களை இறக்கி பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் என ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோ கப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    அதன் பொருட்டு 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னில் கல்லூரியில் இந்த ஆண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தந்து வளாகத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக் சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வரும், வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளாகுமான ஷேக் தாவூது 2023 ஆண்டுக்குரிய வேலை வாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த வளாகத் தேர்வுகள் மூலம் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 605 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இங்கு பயிலும் எந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, மெரைன் என்ஜினீயரிங், கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் எந்திரவியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக், கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.கல்லூரி துறைத் தலை வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஷேக் தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது.
    • காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழக்கரை 

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

    கவுன்சிலர் பைரோஸ்கான்:- பெரியபட்டினம் சாலைகள் அனைத்தும் பழு தடைந்து உள்ளது. அதை புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நிழற்குடை அமைக்க இடத்தை சரி செய்து தர வேண்டும். பெரிய பட்டினம் சுடுகாட்டிற்கு பாதை இல்லை என பலமுறை நான் கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் வடக்கு குடியிருப்பில் மயானம் அமைத்துத் தர வேண் டும்.

    கவுன்சிலர் கலாராணி:- தாதனேந்தல் பகுதியில் சம்பு கட்டி பயனின்றி உள்ளது. ஆனால் காவிரி கூட்டுக்குடிநீர் ஊர் மக்களுக்கு கிடைக்கவில்லை.

    பி.டி.ஓ:- காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவுன்சிலர் காங்கிரஸ் திருமுருகன்:- ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரேஷன் கடை கட்ட ஆலங்குளம் பகுதியில் நீதி பெற்றும் அங்குள்ள சமுதாய கட்டிடம் பாழ டைந்து உள்ளது. அதன் அருகில் தான் கட்ட வேண்டும். எனவே சமுதாய கட்டிடத்தை இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பி.டி.ஓ. ராஜேந்திரன்:- உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் நாகநாதன்:- ரெகுநாதபுரத்தில் அரசு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பி.டி.ஓக்கள் பதிலளித்தனர்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் சிவலிங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக கூறி கேள்வி கேட்டதால் கடந்த கூட்டத்தில் சேர்மன் ஒருமையில் பேசியதாக கூறி இந்த கூட்டத்தில் அவரது இருக்கையில் அமராமல் செய்தியாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

    • போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
    • ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது காய்ச்சல் பரவி வருவதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் இன்று காலை திடீரென பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொழிலாளர் வைப்புத் தொகை முறையாக கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் செவிலியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியர்கள் இல்லாததால் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.

    ×