என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின்போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது இந்த ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஆலயத்தின் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்தபோது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து திருமயம் போலீசில் பாதிரியார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கோவில்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை. இதனால் பூக்களுக்கான தேவை குறைந்து வாங்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி தாலுகாவில் உள்ள கறம்பக்குடி தென்னகர், தட்டாவூரணி, மஞ்சுவிடுதி, திருமணஞ்சேரி, சூரக்காடு, வெட்டன் விடுதி, மழையூர், துவார், கொண்டையம்பட்டி, அம்புக்கோவில், ரெகுநாதபுரம், செங்கமேடு, மருதன் கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    சாமந்தி, செண்டி, கோழி கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் அதிகம் சாகுபடி செய்வது வழக்கம். திருவிழா மற்றும் முகூர்த்த காலங்களில் பூக்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்றவகையில் கறம்பக்குடி பகுதியில் பூக்கள் சாகுபடியும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில்கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கோவில்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை. இதனால் பூக்களுக்கான தேவை குறைந்து வாங்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. அறுவடைக்கு தயாராக உள்ள பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் பூக்கள் செடியிலேயே கருகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து கறம்பக்குடியில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், பராமரிப்பு செலவு குறைவு, தண்ணீர் அதிகம் தேவை இல்லைபோன்ற காரணங்களால், பூக்கள் சாகுபடி செய்வதில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பூக்கள் நல்ல விற்பனையாகும் வேளையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூக்கள் விற்பனை முற்றிலும் நின்றுவிட்டது.

    கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி என்பதால் வியாபாரிகள் பூக்களை வாங்குவதில்லை. இதனால் பூக்களை குப்பையில் வீசி செல்லும் நிலை உள்ளது. எனவே பூக்கள் பறிக்கும் செலவாவது மிச்சமாகும் என்ற நிலையில் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டோம். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
    கொரோனாவால் இறந்தவர் உடலை மருத்துவமனையில் பிளாஸ்டிக் பையில் சுற்றி தொற்று பரவாமல் இருக்க சுகாதார ஊழியர்களே அடக்கம் செய்வார்கள். தற்போது நாங்கள் கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயது வாலிபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    நுரையீரல் பாதிப்புடன் மூச்சு திணறலும் ஏற்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்கு அங்கே மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லாததால் உறவினர்கள் சடலத்தை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமான குழி தோண்டி அடக்கம் செய்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, கொரோனாவால் இறந்தவர் உடலை மருத்துவமனையில் பிளாஸ்டிக் பையில் சுற்றி தொற்று பரவாமல் இருக்க சுகாதார ஊழியர்களே அடக்கம் செய்வார்கள். தற்போது நாங்கள் கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் புதுக்கோட்டை கடைவீதியில் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதை பார்வையிட்டார்.
    புதுக்கோட்டை:

    முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் புதுக்கோட்டை கடைவீதியில் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதை பார்வையிட்டார். முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு கூறினார். இலவசமாக முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முழு ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்குமாறும், அனுமதிக்கப்பட்ட கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார். மேலும் நகராட்சி சார்பில் 11 வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள், கொரோனா விழிப்புணர்வுகள் தொடர்பாக ஒலிபரப்பப்பட்டன. இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் பரக்கத், சந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்தநிலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை :

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்தநிலையில் அ.தி.மு.க.வை தலைமை ஏற்க சசிகலா வரவேண்டும் என புதுக்கோட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ஜெயலலிதா, சசிகலா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:- கழகத்தை காத்திட வாரீர்! வாரீர்!! புரட்சி தலைவர் உருவாக்கிய புரட்சி தலைவி அம்மா கட்டிக்காத்த கழகத்தை காத்திட தியாக தலைவி சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்... அ.தி.மு.க. தொண்டர்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டிகள் புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்தநிலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் ஒரு நாளக்கு 3 டன் அளவிற்கு குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    கீரமங்கலம்:

    கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு, பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் மழையூர், சம்மட்டிவிடுதி, வம்பன், திருவரங்குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, செண்டி, பிச்சி உள்பட அனைத்து வகை பூக்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பூக்கள் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ.500, ரூ.1000 விற்க வேண்டிய மல்லிகை, முல்லை பூக்கள் கிலோ ரூ.50, ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கால் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் சுமார் 3 டன் அளவிற்கு பூக்கள் தேக்கமடைந்து குப்பைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இதனால் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இது போன்ற காலங்களில் விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
    திருமயம் அருகே கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. கூலித் தொழிலாளி. இவரது மகள் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து திருமயம் போலீசில் சின்னையா கொடுத்த புகாரின்பேரில், திருமயம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். புதிதாக 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 111 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால், இறப்பு எண்ணிக்கை 166 ஆக அதிகரித்தது.

    அரிமளம் ஒன்றியம் ராயவரம் கிராமத்தை சேர்ந்த 37 வயது பெண், கடியாபட்டி அருகே உள்ள காணத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண், பனங்குடி கிராமத்தை சேர்ந்த 38 வயது ஆண், கடியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 55 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 41 வயது ஆண், மேல்நிலை வயல் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த 37 வயது ஆண் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பழனியப்பா நகரை சேர்ந்த 40 வயது ஆண், திருமலைராயசமுத்திரத்தை சேர்ந்த 44 வயது ஆண், சண்முகா நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகிய 3 பேருக்கு கொேரானா தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் கடைப்பிடிக்க வேண்டி நடைமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மளிகை, பலசரக்குகள், காய்கறி கடைகள் ஏ.சி. வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். மளிகை, பலசரக்குகள், காய்கறி கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும், பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மீன், இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையே இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி. பயணி ரெயில், மெட்ரோ ரெயில், அரசு, தனியார் பஸ், வாடகை டாக்சியில் 50 சதவீதம் பேர் பயணிக்க அனுமதி. இறுதி ஊர்வலம், அதை சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்கு பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. முழு ஊரடங்கு நாள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி என கூறினர்.

    இதில் இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி, (அன்னவாசல்) மாதேஸ்வரன், இலுப்பூர் உதவி ஆய்வாளர் ரெக்ஸ் ஸ்டாலின், (அன்னவாசல்) குணாசேகரன் உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை, அனைத்து வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், ஆய்வாளர்களுக்கான கொரோனா ஊரடங்கு குறித்த கூட்டம் நடந்தது.

    ஆவுடையார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தாசில்தார் ஜபருல்லா மற்றும் போலீசார், சுகாதார துறையினர், ஆவுடையார் கோவில் அனைத்து வர்த்தக சங்கம், ஆவுடையார்கோவில் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரிடத்திலும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கில் அரசின் வழிகாட்டு முறைகளை பற்றிய விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது.

    காரையூர் அரசமலையில் பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடை உரிமையாளர்கள், கோவில் நிர்வாகிகள், தேவாலய நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசின் உத்தரவை கடைப்பிடிக்க கோரி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் பாண்டி, மரியசெல்வம், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், காரையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னையா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    விராலிமலை தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார் தலைமை தாங்கினார். இதில் கொடும்பாளுர் வட்டார மருத்துவ அலுவலர் லோகேஸ்வரன், விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து வியாபர சங்க நிர்வாகிகளிடமும் தற்போதைய அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா குறித்த விழிப்புணர்வு வழிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் எனவும் மேலும் கடைக்கு வரும் பொதுமக்களிடம் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பேசினர். கூட்டத்தில் விராலிமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, விராலிமலை, மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி, அன்பழகன், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அரசு அறிவித்து உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், 12 மணி முதல் 3 மணி வரை, 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று பிரிவாக பிரித்து பார்சல் சேவை மட்டும் நடத்திக் கொள்ளலாம் எனவும் காவல் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டாட்சியர் புவியரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அரசமணி, நலதேவன் மருத்துவ அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரை ஆற்றினார்கள்.

    பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள், வர்த்தகர் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து மத வழிபாட்டு தல நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள உத்தரவுகளை பொன்னமராவதி தாலுகாவில் முழுமையாக அனைவரும் பின்பற்றி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வட்டாட்சியர் ஜெயபாரதி கேட்டுக்கொண்டார்.

    ஆலங்குடியில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி தலைமை தாங்கி வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    தாசில்தார் கருப்பையா முன்னிலை வகித்தார். இதில் உதவி சப்-கலெக்டர் ஹஸரத் பேகம் மற்றும் அதிகாரிகள், போலீசார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

     கந்தர்வக்கோட்டை
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    சின்னத்துரைசிபிஐ எம்69710
    ஜெயபாரதி உதயக்குமார்அதிமுக56989
    லெனின் பழனியாண்டிஅ.ம.மு.க.12840
    ரமீலா மோகன்ராஜ்நாம் தமிழர்12661
     விராலிமலை
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    டாக்டர்.விஜயபாஸ்கர்அதிமுக102179
    பழனியப்பன்திமுக78581
    கார்த்திக் பிரபாகரன் அ.ம.மு.க.1228
    சரவணன்ம.நீ.ம559
    அழகுமீனா நாம் தமிழர்7035
     புதுக்கோட்டை
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    டாக்டர் முத்துராஜா திமுக85802
    கார்த்திக் தொண்டைமான் அதிமுக72801
    சுப்பிரமணியன் தேமுதிக1873
    மூர்த்திம.நீ.ம3948
    சசிக்குமார்நாம் தமிழர்11503
      திருமயம்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    ரகுபதிதிமுக71349
    பி.கே.வைரமுத்துஅதிமுக69967
    முனிராஜ்அ.ம.மு.க.1503
    திருமேனிம.நீ.ம1356
    சிவராமன் நாம் தமிழர்11061
     ஆலங்குடி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    சிவ.வீ.மெய்யநாதன்திமுக 87935
    தர்ம.தங்கவேல்அதிமுக62088
    விடங்கர் அ.ம.மு.க.2924
    வைரவன்ம.நீ.ம1230
    திருச்செல்வம்நாம் தமிழர்15477
     அறந்தாங்கி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    ராமச்சந்திரன்காங்கிரஸ்81835
    ராஜநாயகம்அதிமுக50942
    சிவசண்முகம் அ.ம.மு.க.4699
    சேக் முகமதுதமஜக966
    ஹூமாயுன்கபிர்நாம் தமிழர்18460
    ஊரணி அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிப்பட்டி அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கட்டிடத் தொழிலாளியான இவர் நேற்று மாலை மணப்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உசிலை ஊரணி அருகே சென்றபோது எதிரே மணப்பாறையில் இருந்து மேலத்தானியம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி ஒன்றியம், ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செண்பகம். இவரது மகள் ராஜாத்தி (வயது 26). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராஜாத்தி தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×