என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து, உயிர் பலிகளும் அதிகரித்துள்ளதால் கடந்த 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அனைத்து பூ கமிஷன் கடைகளையும் மூட கமி‌ஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்து கடைகளை அடைத்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு, குலமங்கலம், பனங்குளம், பெரியாளூர், நெய்வத்தளி, மழையூர், சம்பட்டிவிடுதி, திருவரங்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.

    இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டன் வரை மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, அரளி, பிச்சி, செண்டி உள்ளிட்ட பல்வேறு மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் மிகப்பெரிய கமி‌ஷன் கடைகளைக் கொண்ட கீரமங்கலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியில் உள்ள கமி‌ஷன் கடைகளுக்கு விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.

    இதனை புதுக்கோட்டை, தஞ்சை திருச்சி, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் பூக்களின் விலை மிகவும் குறைந்து, ஒரு கிலோ ரூ.5 வரை குறைவாக விற்பனை ஆனது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகூட கிடைக்காமல் தவித்து வந்தனர். மேலும் பூக்கள் விற்பனை ஆகாமல் ஒரு நாளைக்கு சுமார் 3 டன் வரை குப்பையில் கொட்டி வந்தனர்.

    இந்த நிலையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து, உயிர் பலிகளும் அதிகரித்துள்ளதால் கடந்த 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அனைத்து பூ கமிஷன் கடைகளையும் மூட கமி‌ஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்து கடைகளை அடைத்தனர்.

    இது குறித்து பூ விவசாயிகள் கூறுகையில், இந்த கமி‌ஷன் கடை அடைப்பால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 டன்கள் வரை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக கஜா புயல் தொடங்கி கொரோனா என தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால், அரசு உரிய இழப்பூடு வழங்கினால் விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்றார். 

    காவல்துறை, தன்னார்வலர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் இப்போராட்டக் களத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த பிளக்ஸ் பேனர் அனைவராலும் வர வேற்கப்பட்டுள்ளது.

    ஆலங்குடி:

    கொரோனாவின் 2-வது அலை பரவலால் தமிழகம் தத்தளித்து வருகிறது. பொதுமக்கள் அச்சத்தைப் போக்க தமிழகத்தில் பல்வேறு முன்னேற்பாடு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாடல்கள் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிகழ்த்தி காட்டப்படுகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கண்ணீர் அஞ்சலி பேனர் அச்சடிக்கப்பட்டு, உங்கள் படம் இதில் இடம் பெறாமல் இருக்க, உங்கள் பெயர் வராமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைபிடிப்போம், இப்படிக்கு, கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள்- கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்.

    அலட்சியம் வேண்டாம், அவஸ்தையும் வேண்டாம், பாதுகாப்புடன் இருங்கள். என்றும் கொரோனா விழிப்புணர்வு பணியில் ராயல் பிளக்ஸ் ஆலங்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் இரண்டாவது அலையில் சிக்கி விடக்கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா இரண்டாவது பரவலால் பெரும் தொற்று ஏற்பட்டு நகரில் பேரூராட்சி முழுவதும் பலத்த பாதுகாப்புடன் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது பேரூராட்சி வருவாய்த்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் இப்போராட்டக் களத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த பிளக்ஸ் பேனர் அனைவராலும் வர வேற்கப்பட்டுள்ளது. 

    வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களிடம் இ-பதிவு உள்ளதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
    நன்னிலம்:

    கொரோனா 2-வது அலை பரவல் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என அரசு அறிவித்தது.

    அதன்படி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முறையாக இ-பதிவு செய்துள்ளனரா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதையொட்டி மாநில, மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பதிவு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தினர். இ-பதிவு இல்லாதவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    கூத்தாநல்லூர், வலங்கைமானில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கூத்தாநல்லூர்:

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகளவில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 10-ந் ேததி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.

    ஊரடங்கு விதிகளின்படி மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஜவுளி, நகை உள்ளிட்ட வணிக நிறுவனங்களை திறக்க கூடாது. பால், மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னைஅபிராமி மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று லெட்சுமாங்குடி 4 வழிச் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி கூறுகையில், ‘அரசு அறிவிப்பின்படி ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஊரடங்கு அமலில் இருப்பதால் கூத்தாநல்லூர் போலீஸ் சரக பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.

    கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் அண்ணாசிலை பகுதி, கோவில்வெண்ணி சோதனைச்சாவடி, நீடாமங்கலம் பெரியார் சிலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு பணி நடந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் வழிமறித்து எச்சரித்தனர். மோட்டார் சைக்கிளில் 2-க்கும் மேற்பட்டவர்கள் வந்தால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    மன்னார்குடி நகரில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 16 இடங்களில் சாலை தடுப்புகளை அமைத்து உள்ளனர். மோட்டார் சைக்கிள், காரில் வந்தவர்களை போலீசார் வழிமறித்து அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். தடுப்புகள் அமைக்கப்பட்ட இடங்களை மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர்.

    வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி, அரித்துவாரமங்கலம், ஆவூர் கோவிந்தகுடி உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது தேவையின்றி வெளியே வந்தவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

    பேரளம் கடைத்தெருவில் நேற்று எந்த காரணமுமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், 15 நிமிடங்கள் நிற்க வைத்து கொரோனா பரவும் நேரத்தில் வெளியே சுற்ற கூடாது என அறிவுறுத்தினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். புதிதாக 234 பேருக்கு தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 234 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 227 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 444 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 242 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்த 68 வயது முதியவர், 49 வயது ஆண் ஒருவர் திருச்சியில் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 பேரும் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு தெருவில் 4 பேர் மற்றும் அதற்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால் தடுப்புகள் வைத்து கட்டுப்பாட்டு பகுதிகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று புதுக்கோட்டை பெரியார் நகரில் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இதேபோல காமராஜபுரம், மேல 2-ம் வீதி உள்பட 6 இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்தந்த பகுதிகளில் பிளிச்சீங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளித்தனர்.

    அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பெண்கள், 6 ஆண்கள் அடங்குவர்.கல்லூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
    ஆதனக்கோட்டை அருகே ஊரடங்கிலும் விவசாய பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    ஆதனக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் விவசாய தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கடலைக்கொடி பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உழவுதொழிலுக்கு ஊரடங்கு போட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிடும். கொரோனாவால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தாலும், கொரோனா நோயாளிகளை குணப்படுத்த மருத்துவர்கள் இரவு, பகல் பாராது உழைத்து வருகின்றனர்.

    அதேபோல் விவசாயிகளும் வெயில், மழை பாராது அனைத்து தரப்பினருக்கும் உணவு அளிப்பதற்காக உழைத்துக்கொண்டுள்ளனர். உலகில் எது இல்லாவிட்டாலும் விவசாயமும், மருத்துவமும் இல்லாமல் வாழவே முடியாது என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் விவசாயிகளின் உழைப்பு உணர்த்துகிறது.
    அன்னவாசல் பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அன்னவாசல் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
    அன்னவாசல்:

    அன்னவாசல் பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அன்னவாசல் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர். பின்னர் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முககவசங்களை போலீசார் வழங்கினர்.
    கறம்பக்குடி பகுதியில் தடையை மீறியும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் கடையை திறந்து வியாபாரம் செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் கறம்பக்குடி பகுதியில் முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடையை மீறியும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் கடையை திறந்து வியாபாரம் செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முடிதிருத்தும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பி அறந்தாங்கியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், அஸ்வதி என்ற மகளும், அபிலேஷ் என்ற மகளும் உள்ளனர். முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாத்தூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று சூரியூர், பேராம்பூர், மலம்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது விராலிமலை தாலுகா வளதாடிப்பட்டி அருகே உள்ள காட்டாற்றுப்பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய பாக்குடி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் சுந்தரமூர்த்தி (வயது26) என்பவரை கைது செய்தனர். அதேபோல மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ஆவூர், மதயானைபட்டி, கலிமங்களம், வில்லாரோடை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கலிமங்களம் வழியாக வந்த ஒரு மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் கோரையாற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது, இதையடுத்து அரை யூனிட் மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய கலிமங்களம் கிராமத்தை சேர்ந்த வெள்ளக்கண்ணு மகன் நவீன்ராஜ் (27) என்பவரை கைது செய்தனர்.
    கீரனூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த மேலதேமுத்துபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 66). இவர் 5 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 342 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,731 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரே நாளில் 342 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 543 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் 1,731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 171 ஆக உள்ளது.

    அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 40 வயது ஆண், புதுநிலைபட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, 34 வயது பெண், சமுத்திராப்பட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது ஆண், நாட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண், 36 வயது பெண், கீழாநிலை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 84 வயது ஆண், 55 வயது பெண், 44 வயது ஆண், கல்லூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது ஆண், 45 வயது ஆண், 39 வயது ஆண் 19 வயது ஆண், வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயது ஆண், சிங்காத்தகுறிச்சி கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண், ஆகிய 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட சம்பட்டிவிடுதியைச் சேர்ந்த 24 வயது ஆண் மற்றும் 8 வயது சிறுவன், சோத்துப்பாளையைச் சேர்ந்த 50 வயது ஆண், குப்பையன்பட்டியைச் சேர்ந்த 27 வயது பெண், புத்தாம்பூரைச் சேர்ந்த 30 வயது ஆண், முள்ளூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் மற்றும் 54 வயது பெண், திருமலைராயசமுத்திரத்தை சேர்ந்த 45 வயது ஆண், ராசாபட்டியைச் சேர்ந்த 35 வயது ஆண், ராஜாராணி நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர், பாரிநகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளிலும் தனிமைபடுத்திக்கொண்டுள்ளனர்.
    ×