என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமயம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க கிரீடம் திருட்டு
Byமாலை மலர்14 May 2021 11:06 AM GMT (Updated: 14 May 2021 11:08 AM GMT)
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின்போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது இந்த ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஆலயத்தின் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்தபோது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருமயம் போலீசில் பாதிரியார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது இந்த ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஆலயத்தின் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்தபோது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருமயம் போலீசில் பாதிரியார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X