என் மலர்
புதுக்கோட்டை
- தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது
- கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், கலெக்டருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை, கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், மாவட்ட கலெக்டர் கவிதா ராமுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைவாகவும், நல்ல முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ் தெரிவித்தார்.
- போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது
- மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மவுண்ட சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது ஆண்டு விழா போட்டியின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைப்பெ ற்றது.டீன் முனைவர் எஸ்.ராபின்சன் வரவேற்பு ரையாற்றினார். கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஒலிம்பிக் கொடியையும், இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தேசிய கொடியையும் ஏற்றினர். இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார்.
தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஆண்டுவிழா போட்டியை தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் ஜோதியை நான்கு ஹவுஸ் கேப்டன்கள் மற்றும் எமரால்டு குழுவினர் ஏந்திச் சென்று, ஒலிம்பிக் ஜோதி பீடத்தில் வைத்தனர்.மின்னியில் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் டி.திவ்ய பிரசாத் வரவேற்புரையாற்றினார். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார்.
இயக்குநர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் முனைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவர் முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல கட்டங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டமைப்பு பொறியியல் துறை தலைவர் ராதா நன்றியுரை ஆற்றினார்.
- கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது.
- நாட்டாணி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
மணமேல்குடி தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரணபுஷ் அம்பிகை சமேத ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- கருப்பர் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
- பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் வழிபட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காசாம்பு நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்களும் மண்டகப் படிதாரர்களால் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முக்கிய நிகழ்வான மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கறம்பக்குடி தட்டாவூரணி தென்நகர் அக்ரஹாரம் குலகாரன் தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது இல்லங்களில் குடங்களை வைத்து அதில் தென்னம்பாளைகளை வைத்து அலங்கரித்து தலையில் சுமந்தபடி கறம்பக்குடி சீனி கடை மூக்கில் உள்ள முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் அருள்மிகு காசாம்பு நீலமேனி கருப்பர் கோவிலில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் தலைமையில் செய்திருந்தனர்.
- சாந்தநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- சித்திரை மாத பிரதோஷததையொட்டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதன்படி சாந்தநாதசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைப் போல, திருக்கோ கர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் ஆலயங்க ளிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் ஆலயம், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
- இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
- முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீ்ஸ்காரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். பாதுகாப்பு பணியின் போது காளை முட்டியதில் படுகாயமடைந்து பரிதாபமாக அவர் இறந்தார்.
இதையடுத்து உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்திய நிர்வாகத்தை கண்டித்தும், இறந்தவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இறந்த போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து விரைந்து வந்த வந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர ஆவணம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் தமிழக முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது
- கந்தர்வகோட்டையில் கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி, மெய்குடி பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
ஆண்டிற்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் படி இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இது போன்ற கூட்டங்கள் வாயிலாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கும் திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வதுடன் இதன் மூலம் பயன் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, |பேருந்து, கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கோரி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. சின்னத்துரை, வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, திலகவதி, வட்டாட்சியர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் |பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
- அடுப்பில் இருந்து தீ அவர் மீது பரவியது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வம்பன் காலனியை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 65). சம்பவத்தன்று இவர், வீட்டில் வெந்நீர் போட்ட போது ஸ்டவ் அடுப்பில் இருந்து தீ அவர் மீது பரவியது. இதில் உடலில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ரெத்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
- இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.
விராலிமலை:
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர், காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இதில் தனிக்கவனம் செலுத்துவதோடு, அதனை பராமரிக்க பணியாட்களை நியமித்து அவ்வப்போது அந்த காளைகளுடன் பழகியும் வருகிறார்.
இந்த காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிபட்டியில் கடந்த 2-ந்தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் டாக்டர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த தடுப்பு கட்டையில் தலைமோதி அந்த இடத்திலேயே காளை சுருண்டு விழுந்தது. தன்னுடைய வளர்ப்பு காளை களத்தில் நின்று விளையாடுவதை நேரில் காண வந்திருந்த டாக்டர் விஜயபாஸ்கர், காளை காயமடைந்து விழுந்ததை பார்த்ததும் பதறிப்போனார். அதன் மீது தண்ணீர் தெளித் தும் பயனில்லை.
கேலரியில் இருந்து இறங்கி வந்த அவர் அசைவற்று மயங்கிய நிலையில் கிடந்த காளையை தடவிக்கொடுத்தார். எப்படியும் காளை எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த காளை உயர் சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை போல் பார்த்துக்கொண்ட டாக்டர் விஜயபாஸ்கர் சொந்த ஊரில் இருந்து 2 முறை காளையை பார்க்க ஒரத்தநாடு சென்றார். நேற்றும் காளைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருப்பு கொம்பன் காளை இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கரின் புகழ்பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கல்லில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரண்டு காளைகளும் வாடிவாசலில் மோதி இறந்ததால் டாக்டர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே இறந்த கருப்பு கொம்பன் காளைக்கு டாக்டர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
- மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.
மஞ்சுவிரட்டில் களைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் தப்பி ஓட முயற்சித்தன. அப்போது, புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த நபரை மீட்க சென்ற மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.
இந்நிலையில், மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பலியான சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
- பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
விராலிமலை,
அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 2012-ம் ஆண்டு 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பாடங்களை நடத்த அப்போது ரூ.5ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டுக்கு உள்ள 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அரசாணையில் இல்லை.ஆனால் கோடைகால விடுமுறைக்கு மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. 2012-ம் ஆண்டு மே மாதம் வழங்காததால், இப்படியே 2020-ம் ஆண்டுவரை 9 முறை மறுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ரூ.2,300 சம்பள உயர்வு கொடுத்து ரூ.10ஆயிரம் சம்பளமாக ஆக்கியபோது, இனி மே மாதம் சம்பளம் கிடையாது என திருத்தி புதிய ஆணையை பிறப்பித்து விட்டார்கள். இதனால் இனி மே மாதம் சம்பளம் கிடைக்காதபடி தற்போது இந்த வேலையில் தொடர்கிற, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை ஆகிவிட்டது.இதையடுத்து 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசும் மே மாத சம்பளம் வழங்காமல் விட்டுவிட்டது. தி.மு.க. வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் இரண்டு ஆண்டு முடிந்தும்கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.இதனால் 2021, 2022 இரண்டு ஆண்டு மே மாதங்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை. இப்படியே 11 ஆண்டு மே மாதம் சம்பளம் கிடைக்காமல் போய்விட்டது.ஒரு மாதம் சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அது எந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும். 2023-ம் ஆண்டு மே மாதம் சம்பளமாவது கருணையுடன் வழங்குங்கள் என கோரிக்கை வைத்துள்ளதை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.கோரிக்கை வைத்தால் அதை முதல்வர் நிறைவேற்றுவார் என மக்கள் என் மேல் நம்பிக்கை வைத்து உள்ளதாக முதல்வரே குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதி தான் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை ஆகும். இதனை நினைவூட்டி முதல்வருக்கு லட்சக்கணக்கில் கோரிக்கை மனு அனுப்புகிறோம். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள். மே மாதம் சம்பளம் வழங்க ஆணையிடுங்கள்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- நகை, பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்
- புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54), கட்டிட பொறியாளர். இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு (75) உணவு வழங்க சென்றார். அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைத்து வேந்தன்பட்டி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா கள்ளங்காலப்பட்டியை சேர்ந்த சின்னையா மகன் சக்திவேல் (33), தேவகோட்டை தாலுகா உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி ஆகியோரை பணத்திற்காகவும், நகைக்காகவும் திட்டம் தீட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டை, கையுறை ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நேரடியாக வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறைக்கு வேந்தன்பட்டி பொதுமக்கள் நன்றி கூறினர்.






