என் மலர்
நீலகிரி
- புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற நுகர்வோர் அமைப்பு வேண்டுகோள்
- அயோடின் உப்பின் அளவு குறித்து ஆய்வு செய்யவும் கோரிக்கை
அரவேணு,
புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்தது. பொருளாளர் மரியம்மா, துணைதலைவர் செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது ஆண்டறிக்கை வாசித்தார்.
தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4-ஜி அலைகற்றை வசதி செய்து தரவேண்டும், மாவட்ட அளவில் உள்ள ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் உப்பில் அயோடின் அளவு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும், கோத்தகிரி நகரில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவை இந்த பகுதியில் உள்ள புதர்களில் மறைந்து நின்று தாக்குகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
எனவே கோத்தகிரி பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
நிகழ்ச்சியில் இணை செயலாளர் கண்மணி, கூடுதல் செயலாளர் பீட்டர், ஆலோசகர் பிரவின், செய்தி தொடர்பாளர் முகமதுஇஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் திரசா, ரோஸ்லின், ராதிகா, யசோதா, செல்வி, விக்டோரியா, ஷாஜகான், லெனின்மார்க்ஸ், விபின்குமார், விஜயா, தமிழ்செல்வி, ஏசுராணி, பிரேம்செபாஸ்டியன், சதீஷ், கார்த்திக், ஞானபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் வினோபாபாப் நன்றி கூறினார்.
- தள்ளுவண்டி கடை திறப்பு விழாவில் கோட்டாட்சியர் பங்கேற்பு
- மற்ற திருநங்கைகளுக்கும் உதவ வேண்டும் என கோரிக்கை
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஓட்டுபட்டறை பகுதியை சேர்ந்த திருநங்கை லட்சுமி, சுயதொழில் ஆரம்பிக்க கடனுதவி கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். தொடர்ந்து அவருக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் சார்பில், ரூ.50 ஆயிரம் மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டது.
இதன்மூலம் அவர் தற்போது தள்ளுவண்டியில் சுயதொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.முன்னதாக திருநங்கையின் தள்ளுவண்டி கடை திறப்பு விழாவில் குன்னூர் கோட்டாட்சியர் பூசனகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து திருநங்கை லட்சுமி கூறியதாவது:-
எனக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. எனவே நான் அரசிடம் கடனுதவி கோரி விண்ணப்பித்தேன். அவர்கள் என் மனுவை பரிசீலித்து முதன்முறையாக மானியத்துடன் கடனுதவி வழங்கினர்.
இதன்மூலம் நான் தள்ளுவண்டி கடையை துவங்கி நடத்தி வருகிறேன்.திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்து அரசு உதவி செய்தது மகிழ்ச்சி தருகிறது.நீலகிரி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிகளவில் உள்ளனர். எனவே அவர்களுக்கும் சுயதொழில் துவங்க அரசு தேவையான ஆலோசனைகள் மட்டுமின்றி மானியத்துடன் கடனுதவியும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பாதிப்பு
- குடியிருப்புகளில் சாய்ந்ததால் வீடுகள் சேதம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஒருசில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் முறிந்து நடுரோட்டில் கிடக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நீலகி ரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் குரும்பாடி, வண்ணா ரப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புரூக் லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடங்களுக்குச் சென்று மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி வருகின்றனா்.
இதற்கிடையே லேம்ஸ் ராக், அட்டடி ஆகிய பகுதி களில் உள்ள 2 குடியிருப்புகள் மீது ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இத னால் அங்கு உள்ள வீடுகள் சேதம் அடைந்தன.
எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
- மாவட்ட திட்டக்குழுவில் குறைந்தபட்சம் 2 சிவில் பொறியாளர்கள் இடம்பெற வலியுறுத்தல்
- ஒற்றை சாளர இணையத்தில் தேவையற்ற செயல்முறைகளை நிராகரிக்க தீர்மானம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அனைத்து சிவில் என்ஜினீயா் அசோசியேஷன் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவா் ராஜேஷ்தமிழரசன் தலைமையில் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூா் நகராட்சிகளின் ஆணையா் ஏகராஜ் கலந்துகொண்டு பொறியாளர்களுக்கு அங்கீகார சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான நிர்வாகிகளாக தேர்வாகி உள்ள தலைவர் கிறிஸ்டோபர் திலக்குமார், செயலர் மாதேஷ்ராஜன், பொருளாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் பத்மநாபன், இணை செயலாளர் பிரதீப் ஆகியோருக்கு மாநிலத் தலைவர் ராஜேஷ் தமிழரசன் கவுரவப் பட்டையுடன் சங்கக்கொடியை ஒப்படைத்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், மாவட்ட திட்டக் குழுவில் குறைந்தபட்சம் 2 சிவில் பொறியாளர்களை இடம்பெற செய்ய வேண்டும்,
குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மாஸ்டர் பிளானில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஒற்றை சாளர இணையத்தில் தேவையற்ற குழப்பமான நகல் செயல்முறைகளை நிராகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.
- இன்று காலை வீட்டில் இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 108 அவசர ஆம்புலன்ஸ் அவசர சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
நேற்றிரவு இந்த மையத்தில் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது ஒருபோன் அழைப்பு வந்தது.
பணியில் இருந்த நபர் போனை எடுத்து பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியான ஊழியர், அவரிடம் நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, அங்கிருந்த ஊழியர் சம்பவம் குறித்து ஊட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும் சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடங்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
சோதனையில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு சென்று போன் வந்த நம்பரை வைத்து அது யாருடையது? எங்கிருந்து வந்தது என விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போனில் கூறியது ஊட்டி அருகே உள்ள தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்தது.
இன்று காலை ஊட்டி தாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்ததால் 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கல்வியுடன் பல்வேறு கலைகளையும் கற்றுத்தர பெற்றோர் கோரிக்கை
- பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தல்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் கலைதிருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
தொடர்ந்து கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஊட்டியில் நடத்தப்பட்டது. இதில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் மு. அருணா, ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், ஊட்டி நகர மன்றதலைவர் வானீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக நீலகிரி கலை திருவிழாவுக்கு வந்திருந்த மாணவ-மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:-
மாணவ-மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமையை வெளிப்படுத்த, இந்த கலைவிழா சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மாணவ மாணவியர் மத்தியில் புதைந்துள்ள பல்வேறு திறமைகளை அடையாளம் காண முடியும்.
மேலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க, பள்ளிகளில் பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமை மேலும் வளரும்; சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் பிள்ளைகளுக்கு திறமைக்குறைவு என்ற மேலோட்டமான பார்வையை இந்த கலைவிழா தவிடுபொடி ஆக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியுடன் பல்வேறு கலைகளையும் பள்ளி நிர்வாகம் கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கார்சிலி முதல் குண்டடா வரை ரூ.93 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்
- நேரு பூங்காவில் விரிவாக்க பணிகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்
அரவேணு,
தமிழக பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.42 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அங்கு பதிக்கப்பட உள்ள குடிநீர் குழாய்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சக்தி மலையில் குடிநீர் தொட்டி அமைவிடத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து கோத்தகிரியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் நேரு பூங்காவுக்கு சென்ற பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா, அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு உள்ள கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் அங்காடியை பார்வையிட்டார். அப்போது அங்கு தெளிப்பு உரங்கள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட கார்சிலி முதல் குண்டடா வரை ரூ.93 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பேரூராட்சிகள் இயக்குநர் திரன்குறாலா, கோத்தகிரியில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் திறம்பட செய்ய வேண்டும், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் கோத்தகிரி நேரு பூங்காவில் இன்னும் விரிவாக்க பணிகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பேரூராட்சி இணை இயக்குனர் இப்ராஹிம்ஷா, பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் ராமச்சந்திரன்- ஆ.ராசா எம்.பி. பங்கேற்பு
- 8 கி.மீ நடைபயணத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஊட்டி,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடப்போம் நலம் பெறுவோம் என்னும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலையில் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் நோக்கமானது பொது மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தொற்றா நோய்கள் குறித்து காரணிகள், தொற்றா நோய்களை தடுப்பதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏற்கனவே தொற்றா நோய் உள்ளவர்கள் உடல் நிலையை சீராக வைக்கவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நடைபயணம் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் தொடங்கி, எமரால்டு ஹைட்ஸ் கலைக்கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, எச்.பி.எப். வழியாக இந்து நகர் குடியிருப்பு வரை சென்று மீண்டும் அதே வழியாக மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது.
சுமார் 8 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகராட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
- குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
- தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நாளை வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.
நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
கோத்தகிரி பகுதியில் விடிய, விடிய பெய்த மழைக்கு கீழ்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.
இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை அருகே 5 இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மண்சரிவுகளும் ஏற்பட்டது.
பர்லியார்-கல்லாறு சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் பெயர்ந்து சாலையில் விழுந்தது.
தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரங்களை வெட்டி அகற்றி, மண்சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
பந்தலூர் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் எருமாடு அருகே ஆண்டவன் சிறாவில் உள்ள வீரேந்திரன் எனபவரின் வீடு சேதம் அடைந்தது.
பந்தலூர் பகுதியில் பெய்யும் தொடர்மழைக்கு பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகவே சென்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து மிதந்து கொண்டிருந்தன. பொதுமக்கள் பத்திரமாக தேவையான பொருட்களை உயரத்தில் வைத்து கொண்டனர்.
இன்னும் பல இடங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
முழங்கால் அளவையும் தாண்டி தண்ணீர் சென்றதால் மக்களால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை உருவானது.
மேட்டுப்பாளையம் நகராட்சி 20-வது வார்டு மாதையன் லே-அவுட், அன்பு சீரணி நகர், நகராட்சி அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
குறிப்பாக மாதையன் லே அவுட் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. காட்டாறு போல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் குடியிருப்புக்கு அருகேயும் குளம் போல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சி 6-வது வார்டில் வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காரமடை நில வருவாய் அலுவலர் ரேணுகாதேவி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.
- ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.
விடிய, விடிய பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் முழுவதும் மூடியபடி கிடந்தது.
கல்லாறு-அடர்லி பாதையிலும் மண்சரிவும், மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட தயாராக இருந்தது.
தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்து இன்றும், நாளையும் என 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்தது
- சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளது
கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. பின்னர் அங்குள்ள தனியார் விடு திக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு இருந்த வாத்து ஒன்றை கவ்வி சென்றது.
இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் குறித்து அறிவுறுத்தல்
- கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு
அருவங்காடு,
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் கோட்டாட்சியர் பூஷனகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது வாக்களிக்க தகுதி உடையவர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்க வேண்டும், மேலும் வாக்காளர் பெயர்திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மனு செய்து சரிசெய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் சிறப்புபிரிவு அதிகாரி கோபி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






