என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Master Plan"

    பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகிறது.

    உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ஜே. இன்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரிப்பில் செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மாஸ்டர் பிளான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்தப் படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகவுள்ளது.

    இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலை சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்ல இருக்கிறது.

    இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன், –நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. இயற்கை சூழலும் கிராமப்புற பின்னணியும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் 'மாஸ்டர் பிளான்' திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • மாவட்ட திட்டக்குழுவில் குறைந்தபட்சம் 2 சிவில் பொறியாளர்கள் இடம்பெற வலியுறுத்தல்
    • ஒற்றை சாளர இணையத்தில் தேவையற்ற செயல்முறைகளை நிராகரிக்க தீர்மானம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அனைத்து சிவில் என்ஜினீயா் அசோசியேஷன் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவா் ராஜேஷ்தமிழரசன் தலைமையில் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூா் நகராட்சிகளின் ஆணையா் ஏகராஜ் கலந்துகொண்டு பொறியாளர்களுக்கு அங்கீகார சான்றிதழ்களை வழங்கினாா்.

    தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான நிர்வாகிகளாக தேர்வாகி உள்ள தலைவர் கிறிஸ்டோபர் திலக்குமார், செயலர் மாதேஷ்ராஜன், பொருளாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் பத்மநாபன், இணை செயலாளர் பிரதீப் ஆகியோருக்கு மாநிலத் தலைவர் ராஜேஷ் தமிழரசன் கவுரவப் பட்டையுடன் சங்கக்கொடியை ஒப்படைத்தார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், மாவட்ட திட்டக் குழுவில் குறைந்தபட்சம் 2 சிவில் பொறியாளர்களை இடம்பெற செய்ய வேண்டும்,

    குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மாஸ்டர் பிளானில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    ஒற்றை சாளர இணையத்தில் தேவையற்ற குழப்பமான நகல் செயல்முறைகளை நிராகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×