ஊட்டியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்கம்

அமைச்சர் ராமச்சந்திரன்- ஆ.ராசா எம்.பி. பங்கேற்பு 8 கி.மீ நடைபயணத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஊட்டியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்கம்
Published on

ஊட்டி,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடப்போம் நலம் பெறுவோம் என்னும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலையில் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் நோக்கமானது பொது மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தொற்றா நோய்கள் குறித்து காரணிகள், தொற்றா நோய்களை தடுப்பதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏற்கனவே தொற்றா நோய் உள்ளவர்கள் உடல் நிலையை சீராக வைக்கவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நடைபயணம் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் தொடங்கி, எமரால்டு ஹைட்ஸ் கலைக்கல்லூரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை, எச்.பி.எப். வழியாக இந்து நகர் குடியிருப்பு வரை சென்று மீண்டும் அதே வழியாக மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது.

சுமார் 8 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகராட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com