என் மலர்
நீலகிரி
குன்னூர் பழவியல் நிலையத்தில் ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே பழவியல் நிலையம் உள்ளது. இங்கு ஜாம், பழரசம், ஊறுகாய், ஜெல்லி போன்றவை தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியிடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் விளையக்கூடிய ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்றவை மூலம் பழரசம் தயாரிக்கப்படுகிறது. ஜாதிக்காய், மால்மெட் ஆரஞ்சு, லெக்கோட் ஆகியவை மூலம் ஜாம் மற்றும் ஊறுகாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல் 2 மாதங்கள் பழவியல் நிலையத்தில் உற்பத்தி பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் பழவியல் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி பணி தொடங்கப்பட்டது. 300 கிலோ ஜாதிக்காய்கள் மூலம் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கப்பட்டது. தற்போது 500 கிலோ ஜாதிக்காய்கள் மூலம் ஊறுகாய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு தோட்டக்கலை பணியாளர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மும்முரமாக பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு பின்னர் பாட்டில்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் ரூ.110-க்கு விற்பனையாகிறது. ஜாதிக்காய் ஊறுகாய் ரத்தத்தில் படிந்து உள்ள கொழுப்பை குறைக்கவும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்று வலி, வாயு தொல்லை போன்ற உடல் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது.
குன்னூர் பழவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஊறுகாய், ஜெல்லி, ஜாம், பழரசம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையங்கள் உள்ள ரோஜா பூங்கா அருகில் மற்றும் சேரிங்கிராஸ் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வாங்கி பயனடையலாம். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழரசம் மூலம் குளிர்பானங்கள் தயாரித்து வினியோகிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் பழரசம், ஊறுகாய், ஜெல்லி போன்றவற்றின் விற்பனை மந்தமாக உள்ளது.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே பழவியல் நிலையம் உள்ளது. இங்கு ஜாம், பழரசம், ஊறுகாய், ஜெல்லி போன்றவை தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியிடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் விளையக்கூடிய ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், பேரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்றவை மூலம் பழரசம் தயாரிக்கப்படுகிறது. ஜாதிக்காய், மால்மெட் ஆரஞ்சு, லெக்கோட் ஆகியவை மூலம் ஜாம் மற்றும் ஊறுகாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல் 2 மாதங்கள் பழவியல் நிலையத்தில் உற்பத்தி பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் பழவியல் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி பணி தொடங்கப்பட்டது. 300 கிலோ ஜாதிக்காய்கள் மூலம் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கப்பட்டது. தற்போது 500 கிலோ ஜாதிக்காய்கள் மூலம் ஊறுகாய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு தோட்டக்கலை பணியாளர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மும்முரமாக பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு பின்னர் பாட்டில்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் ரூ.110-க்கு விற்பனையாகிறது. ஜாதிக்காய் ஊறுகாய் ரத்தத்தில் படிந்து உள்ள கொழுப்பை குறைக்கவும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்று வலி, வாயு தொல்லை போன்ற உடல் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது.
குன்னூர் பழவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஊறுகாய், ஜெல்லி, ஜாம், பழரசம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையங்கள் உள்ள ரோஜா பூங்கா அருகில் மற்றும் சேரிங்கிராஸ் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வாங்கி பயனடையலாம். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழரசம் மூலம் குளிர்பானங்கள் தயாரித்து வினியோகிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் பழரசம், ஊறுகாய், ஜெல்லி போன்றவற்றின் விற்பனை மந்தமாக உள்ளது.
ஊட்டி நகராட்சியில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்க காலதாமதமாகி வருவதால் வங்கி கடனை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதை வரைமுறைப்படுத்த மலை மேலிட பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டது. அதன்படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, குடியிருப்புக்கு என அனுமதி பெற்றுவிட்டு வணிக நோக்கில் கட்டிடத்தை பயன்படுத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஊட்டி நகராட்சியில் புதிய கட்டிடம் கட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு நகர திட்டமைப்பு அலுவலர் ஆய்வு செய்து, உரிய அனுமதி வழங்குவார். மேலும் கனிம மற்றும் சுங்க வளத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். சமீபத்தில் ஊரடங்கு உத்தரவால் ஊட்டியில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
அதன்பிறகு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து புதிய கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பலருக்கு கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. விண்ணப்பத்தின் அடிப்படையில் நகர திட்டமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். இருப்பினும் அனுமதி வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக கட்டிடம் கட்ட விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கிகளில் வீட்டு கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் வங்கிகளில் உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தவோ அல்லது வட்டி கட்டவோ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புதிய கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சியில் கட்டிட அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். கட்டிடம் கட்டுவதற்காக வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வீணாக வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது. அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணி நடந்தால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அனுமதி கிடைத்தால்தான் வெளி மாவட்டங்களில் இருந்து கட்டுமான பொருட்களை கொண்டு வர முடியும். எனவே உரிய நேரத்தில் கட்டிட அனுமதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊட்டியில் கட்டிட அனுமதி வழங்க கனிம மற்றும் சுங்க வளத்துறையில் அதிகாரிகள் இல்லாமல் இருந்தது. தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இனிவரும் காலங்களில் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. எனினும் ஆன்லைன் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆன்லைன் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அதன்படி கிடைத்த விவரப்படி கூட்டத்தில் 11 கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில் கூடலூர் தாலுகாவில் 70 ஹெக்டருக்கு பாகற்காய் விதைக்கு ஊக்கத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. பாகற்காய் விதை தேவைப்படும் விவசாயிகள் கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனரை நேரில் அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு குழாய், பம்புசெட், நீர் சேகரிப்பு குட்டை, கிணறு அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் மூலம் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் உயர்ரக காய்கறி சாகுபடி செய்ய பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறையின் மூலம் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விவரங்களை தெரிந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில், 500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி, பேரி, பிளம்ஸ் ஆகியவை மட்டுமின்றி, திராட்சை, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் போன்றவற்றை கொண்டு பழரசம் தயாராகிறது.
கொரோனா பாதிப்பால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 500 கிலோ ஜாதிக்காயில் ஊறுகாய் செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலை பணியாளர்கள், முக கவசம் அணிந்து ஊறுகாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுப்பதிலும் ஜாதிக்காய் பயன்படுகிறது. மேலும், வயிற்று வலி, வாயுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி, பேரி, பிளம்ஸ் ஆகியவை மட்டுமின்றி, திராட்சை, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் போன்றவற்றை கொண்டு பழரசம் தயாராகிறது.
கொரோனா பாதிப்பால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 500 கிலோ ஜாதிக்காயில் ஊறுகாய் செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலை பணியாளர்கள், முக கவசம் அணிந்து ஊறுகாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுப்பதிலும் ஜாதிக்காய் பயன்படுகிறது. மேலும், வயிற்று வலி, வாயுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமையை பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு 4 வாரத்துக்குள் விசாரணை நடத்தும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என்று வக்கீல் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை காலி செய்து கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கட்டிட உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். எனினும் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து 39 தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு யானை வழித்தடங்களை ஆக்கிரமிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்தது. மேலும் தங்கும் விடுதி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை அறிந்துகொள்ள விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரியில் யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது. யானை வழித்தடங்களில் 800 வீடுகள் உள்ளதாக ஏற்கனவே ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
யானை வழித்தட ஆக்கிரமிப்பில் உள்ள தங்கும் விடுதிகளை அகற்றுவது குறித்து அதன் உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை அறிந்துகொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 4 வாரங்களுக்குள் நீலகிரிக்கு வந்து, விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குழுவினர் விசாரணை நடத்திய பின்னரே மேலும் விவரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமையை பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மின்வினியோகம் பெறும் அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சின்க்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட் ஆகிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சேகர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரியில் தபால்துறை சார்பில் 3 இடங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 9-ந் தேதி உலக தபால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கிளை அஞ்சலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தபால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தபால் வாரத்தை முன்னிட்டு ஆதார் கேந்ரா சேவை தொடக்க நிகழ்ச்சி ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊட்டி பிரிக்ஸ் (சி.பி.எஸ். இ.) பள்ளி முதல்வர் சிவப்பிரகாஷ் ஆதார் கேந்ரா சேவையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 இடங்களில் ஆதார் கேந்ரா சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆதார் பதிவு செய்தல், முகவரி மாற்றம், புகைப்படம், பயோமெட்ரிக் புதுப்பித்தல், பெயர், பாலினம், பிறந்த தேதி புதுப்பித்தல், ஆதார் பதிவிறக்கம் போன்றவற்றுக்கு நேரடியாக வந்து பயன்பெறலாம்.புதியதாக ஆதார் கார்டு பெற சேவையை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதார் சேவை பெறலாம்.குன்னூர் தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இருந்து வந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதனால் ஊட்டியில் பாஸ்போர்ட் சேவை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தபால் வாரத்தையொட்டி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில் கோவை மண்டல அளவில் ஊட்டி பிரிக்ஸ் (சி.பி.எஸ்.இ.) பள்ளி மாணவர் ஜெய் ஆகாஷ் முதலிடம் பிடித்தார். அவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 9-ந் தேதி உலக தபால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கிளை அஞ்சலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தபால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தபால் வாரத்தை முன்னிட்டு ஆதார் கேந்ரா சேவை தொடக்க நிகழ்ச்சி ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊட்டி பிரிக்ஸ் (சி.பி.எஸ். இ.) பள்ளி முதல்வர் சிவப்பிரகாஷ் ஆதார் கேந்ரா சேவையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 இடங்களில் ஆதார் கேந்ரா சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆதார் பதிவு செய்தல், முகவரி மாற்றம், புகைப்படம், பயோமெட்ரிக் புதுப்பித்தல், பெயர், பாலினம், பிறந்த தேதி புதுப்பித்தல், ஆதார் பதிவிறக்கம் போன்றவற்றுக்கு நேரடியாக வந்து பயன்பெறலாம்.புதியதாக ஆதார் கார்டு பெற சேவையை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதார் சேவை பெறலாம்.குன்னூர் தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இருந்து வந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதனால் ஊட்டியில் பாஸ்போர்ட் சேவை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தபால் வாரத்தையொட்டி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடந்தது. இதில் ஜூனியர் பிரிவில் கோவை மண்டல அளவில் ஊட்டி பிரிக்ஸ் (சி.பி.எஸ்.இ.) பள்ளி மாணவர் ஜெய் ஆகாஷ் முதலிடம் பிடித்தார். அவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோத்தகிரி அருகே துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கடத்தி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள நடுஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுசியா (வயது 23). இவர் நேற்று காலையில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே இருசக்கர வாகனம் ஓட்டி பழகினார். பின்னர் அவர் காலை 11.30 மணிக்கு தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள பஸ்நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் இருந்தார். அந்த ஆட்டோ பஸ் நிலையம் வந்ததும், ஆட்டோவை ஓட்டி வந்த நபர், அனுசியாவிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் கட்டபெட்டு செல்வதாக கூறியதும், நாங்களும் அங்குதான் செல்கிறோம், வேண்டும் என்றால் ஆட்டோவில் வாருங்கள். கட்டணமாக ரூ.30 மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு பெண் இருப்பதால், அனுசியாவும் சம்மதித்து அந்த ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோ பிரதான சாலை வழியாக செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புற சாலையான ரேலியா அணை வழியாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அனுசியா, ஏன் இந்த வழியாக செல்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.
அதற்கு ஆட்டோ டிரைவர் எந்த பதிலும் கூறாததால், அனுசியா சத்தம் போட்டு உள்ளார். அதற்கு டிரைவர், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். எனினும் அவர் சத்தம் போட்டதால், டிரைவர் அனுசியாவை துப்பாக்கியால் தாக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் அந்த ஆட்டோவில் இருந்த பெண்ணும், டிரைவரும் சேர்ந்து அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த ஆட்டோ கட்டபெட்டு பஜார் பகுதியில் அனுசியாவை இறக்கிவிடாமல் வெஸ்ட் புரூக் வழியாக கூக்கல் தொரை பகுதிக்கு செல்லும் சாலையில் வேகமாக சென்றது. அங்குள்ள ஒசட்டி முனீஸ்வரர் கோவில் அருகே சென்றதும், ஆட்டோவை நிறுத்தி அனுசியா அணிந்திருந்த 2¼ பவுன் நகையை அவர்கள் பறித்தனர்.
அத்துடன் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மீண்டும் அவரை துப்பாக்கியால் தாக்கியதுடன், கழுத்தை நெரித்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். அப்போது அந்த வழியாக வந்த கூக்கல் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அவருடன் சென்றவர்கள், அந்த ஆட்டோவை மறித்து அதற்குள் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது ஆட்டோ டிரைவர் மற்றும் அதற்குள் இருந்த பெண், அனுசியாவை துப்பாக்கி முனையில் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு, ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அனுசியாவை மீட்டதுடன், ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த சார்லஸ் (32), மவுண்ட் பிளசன்ட் பகுதியை சேர்ந்த ஆன்டனி குரூஸ் மனைவி அனிஷா (25) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சார்லஸ் மற்றும் அனிஷா 2 பேரும் சேர்ந்து கிராமங்களுக்கு சென்று டீத்தூள் மற்றும் முட்டைகளை விற்பனை செய்து வருவதும், அனுசியா மட்டும் பஸ்நிலையத்தில் தனியாக நின்றதால், அவரை கடத்தி நகை மற்றும் பணம் பறிக்க நினைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அத்துடன் காயம் அடைந்த அனுசியா சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சார்லஸ் மற்றும் அனிஷா வேறு யாரிடமும் இதுபோன்று நகை பறித்து உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களிடம் இருந்து ஏர்கன் ரக துப்பாக்கி, ஈயக்குண்டுகள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2¼ பவுன் நகையும் மீட்கப்பட்டது. இதற்கிடையே, அனுசியாவை துப்பாக்கி முனையில் கடத்திய தகவல் அறிந்து கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் பலர் திரண்டு, இளம்பெண்ணை கடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள நடுஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுசியா (வயது 23). இவர் நேற்று காலையில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே இருசக்கர வாகனம் ஓட்டி பழகினார். பின்னர் அவர் காலை 11.30 மணிக்கு தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள பஸ்நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் இருந்தார். அந்த ஆட்டோ பஸ் நிலையம் வந்ததும், ஆட்டோவை ஓட்டி வந்த நபர், அனுசியாவிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் கட்டபெட்டு செல்வதாக கூறியதும், நாங்களும் அங்குதான் செல்கிறோம், வேண்டும் என்றால் ஆட்டோவில் வாருங்கள். கட்டணமாக ரூ.30 மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு பெண் இருப்பதால், அனுசியாவும் சம்மதித்து அந்த ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோ பிரதான சாலை வழியாக செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புற சாலையான ரேலியா அணை வழியாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அனுசியா, ஏன் இந்த வழியாக செல்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.
அதற்கு ஆட்டோ டிரைவர் எந்த பதிலும் கூறாததால், அனுசியா சத்தம் போட்டு உள்ளார். அதற்கு டிரைவர், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். எனினும் அவர் சத்தம் போட்டதால், டிரைவர் அனுசியாவை துப்பாக்கியால் தாக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் அந்த ஆட்டோவில் இருந்த பெண்ணும், டிரைவரும் சேர்ந்து அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த ஆட்டோ கட்டபெட்டு பஜார் பகுதியில் அனுசியாவை இறக்கிவிடாமல் வெஸ்ட் புரூக் வழியாக கூக்கல் தொரை பகுதிக்கு செல்லும் சாலையில் வேகமாக சென்றது. அங்குள்ள ஒசட்டி முனீஸ்வரர் கோவில் அருகே சென்றதும், ஆட்டோவை நிறுத்தி அனுசியா அணிந்திருந்த 2¼ பவுன் நகையை அவர்கள் பறித்தனர்.
அத்துடன் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மீண்டும் அவரை துப்பாக்கியால் தாக்கியதுடன், கழுத்தை நெரித்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். அப்போது அந்த வழியாக வந்த கூக்கல் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அவருடன் சென்றவர்கள், அந்த ஆட்டோவை மறித்து அதற்குள் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது ஆட்டோ டிரைவர் மற்றும் அதற்குள் இருந்த பெண், அனுசியாவை துப்பாக்கி முனையில் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு, ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அனுசியாவை மீட்டதுடன், ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த சார்லஸ் (32), மவுண்ட் பிளசன்ட் பகுதியை சேர்ந்த ஆன்டனி குரூஸ் மனைவி அனிஷா (25) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சார்லஸ் மற்றும் அனிஷா 2 பேரும் சேர்ந்து கிராமங்களுக்கு சென்று டீத்தூள் மற்றும் முட்டைகளை விற்பனை செய்து வருவதும், அனுசியா மட்டும் பஸ்நிலையத்தில் தனியாக நின்றதால், அவரை கடத்தி நகை மற்றும் பணம் பறிக்க நினைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அத்துடன் காயம் அடைந்த அனுசியா சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சார்லஸ் மற்றும் அனிஷா வேறு யாரிடமும் இதுபோன்று நகை பறித்து உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களிடம் இருந்து ஏர்கன் ரக துப்பாக்கி, ஈயக்குண்டுகள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2¼ பவுன் நகையும் மீட்கப்பட்டது. இதற்கிடையே, அனுசியாவை துப்பாக்கி முனையில் கடத்திய தகவல் அறிந்து கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் பலர் திரண்டு, இளம்பெண்ணை கடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூரில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை செய்தவரும் பிடிபட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமீப நாட்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தெரிகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக வீடுகளில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதுடன், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து குன்னூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வீடுகள் முன்பு பூந்தொட்டிகளில் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்புமணி (வயது 40) , சிவா (40) ஆகிய 2 பேரை கைது செய்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வினோத் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரையும் போலீசார் குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் அருகே ஒரு கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமீப நாட்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தெரிகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக வீடுகளில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதுடன், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து குன்னூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வீடுகள் முன்பு பூந்தொட்டிகளில் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்புமணி (வயது 40) , சிவா (40) ஆகிய 2 பேரை கைது செய்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வினோத் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரையும் போலீசார் குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் அருகே ஒரு கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கின்போது கிடைத்த நேரத்தில் காலி பாட்டில்களில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்த ஊட்டி கல்லூரி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
ஊட்டி:
ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறது. ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தாலும், சிலர் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்து வருகின்றனர். ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், கிடைத்த நேரத்தை தூக்கி எறியப்படும் காலிபாட்டில்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து, அதற்கான பாராட்டை கலெக்டரிடம் பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஊட்டி பட்பயரை சேர்ந்தவர் தீபா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது விடுமுறை அளிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பினார். வீட்டில் சும்மா இருக்காமல் மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்ற தனது எண்ணங்களாலும், வண்ணங்களாலும் காலி பாட்டில்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்தார். 150 பாட்டில்களுக்கு மேல் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் ஒரு அமைப்புக்கு விண்ணப்பித்தார். அந்த அமைப்பு நேரடியாக வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து ரியல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் பெயரை இடம் பெற செய்தது. தனக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாணவி தீபா நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் அந்த மாணவியை பாராட்டி ஊக்குவித்தார்.
ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறது. ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தாலும், சிலர் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்து வருகின்றனர். ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், கிடைத்த நேரத்தை தூக்கி எறியப்படும் காலிபாட்டில்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து, அதற்கான பாராட்டை கலெக்டரிடம் பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஊட்டி பட்பயரை சேர்ந்தவர் தீபா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது விடுமுறை அளிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பினார். வீட்டில் சும்மா இருக்காமல் மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்ற தனது எண்ணங்களாலும், வண்ணங்களாலும் காலி பாட்டில்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்தார். 150 பாட்டில்களுக்கு மேல் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் ஒரு அமைப்புக்கு விண்ணப்பித்தார். அந்த அமைப்பு நேரடியாக வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து ரியல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் பெயரை இடம் பெற செய்தது. தனக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாணவி தீபா நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் அந்த மாணவியை பாராட்டி ஊக்குவித்தார்.






