search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty Collector"

    • யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை.
    • நீலகிரி கலெக்டர் தகவல் அளித்தார்.

    ஊட்டி

    மனித- யானைகள் மோதல்களை தடுக்க நிரந்தர தீா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்டங்கள் வகுத்துள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தாா்.

    இதுகுறித்து ஊட்டியில் நிருபர்களிடம் அவா் கூறியதாவது:-

    உணவு மற்றும் தண்ணீா் தேடி கேரளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஓவேலி வழித்தடம் வழியாக முதுமலை புலிகள் காப்பகம் சென்று கா்நாடக மாநிலம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி வரை ஆண்டு முழுவதும் யானைகள் இடம் பெயா்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு இடம்பெயரும் யானைகள் ஓவேலி பகுதியில் மனிதா்களை தாக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். எனவே இனி வரும் காலங்களில் இப்பகுதியில் யானைகள் தாக்கி மனிதா்கள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிா்வாகம், வனத் துறை மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது

    குறிப்பாக கேரளத்தில் இருந்து ஓவேலி பகுதிக்கு யானைகள் வருவதை கண்டறிய பாா்வுட், சுண்டி, நாயக்கன்பாறை, வட்டப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் 5 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அந்த முகாம்களில் கும்கி யானைகளை கொண்டு 40 வேட்டை தடுப்பு காவலா்கள் மற்றும் யானை விரட்டும் குழுவினரை பணியமா்த்தி 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவ டிக்கை எடுத்துள்ளது.அதேபோல தனியாா் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டி ருக்கும் நேரங்களில் தொழிலா ளா்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என தோட்ட உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வதை தவிா்த்து காலை 8:30 மணிக்கு மேல் பிற்பகல் 2:30 மணி வரை தனியாா் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்களை பணியமா்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல ஓவேலி பகுதியில் வெளிநாட்டு வன வில ங்கு ஆராய்ச்சி யாளா்களை கொண்டு கிராம பகுதியில் யானைகள் வருவதை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சப்படாத அளவுக்கு கிராமத்துக்குள் யானைகள் நுழைவதை தடுக்க ஓவேலி, கூடலூா், நாடுகணி வரை உள்ள வன எல்லைகளில் புதிதாக வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொ ள்ள ப்பட்டு வருகிறது. இ வ்வா று அவர் கூறினார்.

    வனத்துறை கள இயக்குநா் வெங்கடேஷ் கூறுகையில், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை தமிழக அரசின் முதன்மை வன பாதுகாவலா் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் யானை வழித் தடங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில் யானை வழித்தட ங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். ஓவேலி மற்றும் அத னை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதை கண்டறிய அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு தொடா் கண்காணிப்பு ப் பணிகள் மேற்கொ ள்ளப்படும் என்றாா்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது காட்டுயானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டதா? என்பது குறித்து கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறை மூலம் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அந்த சாலையில் ஒருசில வளைவுகள் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களை திருப்ப முடியாத நிலை இருந்தது. அந்த வளைவுகளை கண்டறிந்து விரிவுபடுத்தி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ராதாகிருஷ்ணன் பாலம் அருகே பழைய தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு, சாலையை விரிவுபடுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த இடம் வழியாக காட்டுயானைகள் சென்று வருவதால், அவை இடம் மாறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு யானை வழித்தடம் அழிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு இடையூறு இல்லாமல் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வலதுபுறம் பாறை இருப்பதால், வாகனஙகள் இடதுபுறம் ஒதுங்கி செல்லும்போது விபத்தில் சிக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வன், குன்னூர் வனச்சரகர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதுகுறித்து கோட்ட பொறியாளர் செல்வன் கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறிப்பிட்ட இடம் குறுகலாக இருந்ததால் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு வசதியாக சிறிது இடம் விடப்பட்டு, நிலையான இடத்தை ஏற்படுத்தி அகலப்படுத்துவது குறித்து நீலகிரி வன கோட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பிறகு யானைகள் கடக்க வழிவிட்டு சாலை அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது அங்கு சாலையை அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×