என் மலர்
நீலகிரி
- 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உதகை:
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலிசார் கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஆய்வத்தில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்ய நிலையில் Recover செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் மூடி முத்திரையிட்ட கவரில் இன்று காலை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- திரண்டிருந்த யிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகரின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக படுகரின மக்களின் கிராமங்களிலேயே பெரிய கிராமமாக ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமம் விளங்குகிறது.
இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடபட்ட நிலையில் பவுர்ணமி நாளன்று நஞ்சநாடு கிராமத்தில் லக்கிஷா ஹப்பா என்ற பெயரில் தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகரின மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் நஞ்சநாடு கிராமத்திற்கு வந்து குவிந்தனர்.
இதனையடுத்து மாலை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது பாரம்பரிய உடையான வெண்மை நிற ஆடைகளை பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அணிந்து தொட்டமனை எனப்படும் தங்களது மூததையர்கள் வசித்த வீட்டின் முன் குவிந்தனர்.
அந்த இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து சிறிய கொடி மரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இளைஞர்கள் நடனமாடியவாறு ஊர் பெரியவர்கள் மற்றும் பூஜாரி ஆகியோரை தொட்டமனையிலிருந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் அமர்ந்து இருந்த நிலையில் சிறப்பு அலங்காரத்துடன் இருந்த பிரமாண்ட கொடி மரத்திற்கு பூஜை செய்து 60 அடி உயரத்தில் தீபம் ஏற்றபட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கோவிந்தா.. கோவிந்தா... என்ற கோஷமிட்டு வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் கொடி கம்பத்தை சுற்றி பெரிய வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
- பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
- தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி எல்கேஜி படிக்கும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
அதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கிபோது டயரில் சிக்கி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் உடலை மீட்ட கோத்தகிரி போலீசார், தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை தேடி வருகின்றனர்.
- கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் மஞ்சமலை சாலையில் பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச்சென்ற நான்கு கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த நான்கு கரடிகளும் அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அதன்பிறகே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல், பெயர்நீக்கல் பணிகளை பார்வையிட்டனர்
- பணிகளை சரியான முறையில் செய்வது குறித்து உரிய ஆலோசனை
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வாக்குச்சாவடி மையங்களில் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி ஜி.டி. ஆர். பள்ளி, அரவேணு சக்கத்த அரசு பள்ளி, கீழ்கோத்தகிரி அரசு பள்ளி போன்ற அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல் மற்றும் பெயர் நீக்குதல் சேர்த்தல் முகாம் நடந்தது.
இதில் ஏராளமான பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை யும் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்குதலில் ஈடுபட்டனர்.
இதனை குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், கோத்தகிரி கோமதி ஆகியோர் அனைத்து வாக்குச்சாவடிகளையும் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான வேலைகள் சரியான முறையில் செயல்படுவது குறித்தும் ஆலோசனை வழங்கினர்.
- மூடுபனியுடன் கடும்குளிர் கொட்டுகிறது
- பொதுமக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அங்கு தற்போது சாரல் மட்டுமே பெய்கிறது. மேலும் ஊட்டியில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் கடுங்குளிர் காணப்படுகிறது.
எனவே ஊட்டியில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை கார ணமாக பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்கு உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளி களின் கூட்டம் அதிகளவில் காணப்படு கிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் பொதுமக்க ளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளித்தொல்லை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்ப ட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் மாறுபட்ட காலநிலையால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்து கொள்ள குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதுதவிர காதுகளில் குளிர் காற்று புகாதவகையில் தொப்பி அல்லது மப்ளர் ஆகியவற்றை பயனபடுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பொதுமக்கள் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்
ஊட்டி,
ஊட்டி எல்கில் பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு உலக புகழ் பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, 40 அடி உயரத்தில் முருகப்பெருமான் வெளிப்புறத்தில் கம்பீரமாக வேலூன்றி காட்சி அளிக்கிறார்.
மேலும் இந்த கோவிலில் முருகப்பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் வகையில் 108 படிகள் ஆகியவை உள்ளன.
கார்த்திகேயன் பிறந்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.
அதன்படி இந்த திருத்தலம் கார்த்திகை தீபத்திருநாளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற தலம் ஆகும்.
ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மாலை நேரத்தில் திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளை நடத்தினர்.
- குன்னூரில் தொடர்மழை எதிரொலி
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.
ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.
- அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து நடவடிக்கை
- தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
அருவங்காடு,
குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதில் மண் மற்றும் மரங்கள் விழுந்தும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர் இதனிடையே குன்னூர் தீயணைப்புத் துறையினர் ஒன்றிணைந்து தனித்தனி குழுவாக பிரிந்து மீட்பு பணிகளில் நேரம் காலம் பாராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மலைப்பாதை மட்டு மல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இடர்பாடு களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இதில் இன்று அதிகாலை 1 மணி அளவில் குன்னூர் பகுதியில் உள்ள புருக்லேண்ட்ஸ் பகுதியில் ராட்சத மரம் மின் கம்பி மீது சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
அந்த இருட்டு நிறைந்த நேரத்திலும் தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை அகற்றினர். இதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் மாறி மாறி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- பந்தலூரில் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறை மும்முரம்
- வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனா்.
இதனால் அவர்கள் ஊருக்குள் திரியும் கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து பந்தலூா் வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் ரிச்மண்ட் பகுதியில் கூண்டு வைத்து கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
- நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
- ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.
தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.
நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
- பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
- பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அருவங்காடு:
குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.
பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.






