என் மலர்
நீலகிரி
- சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டி உள்ளது.
- சுற்றுலா விடுதிகள் புத்தாண்டுக்கு முன்பாகவே முன்பதிவுசெய்யப்பட்டு விட்டன.
ஊட்டி:
உலகம் முழுவதும் இன்றிரவு 12 மணிக்கு 2025 புத்தாண்டு பிறக்கிறது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டி உள்ளது.
அதிலும் குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய பகுதிகளில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.
நாளை புத்தாண்டு என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவை புத்தாண்டுக்கு முன்பாகவே முன்பதிவுசெய்யப்பட்டு விட்டன. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் அங்குள்ள விடுதிகளின் அறைகள் நிரம்பி வழிகின்றன.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு வந்திருந்து அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதனிடையே நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது களைகட்டி காணப்படுகின்றன. மேலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைரெயிலில் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் அங்குள்ள வியாபார கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தேயிலை விவசாயத்தில் 63 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தொழிற்சாலைகளும், 110 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த பாதிப்புகளில் இருந்து, தேயிலை செடிகளை பாதுகாக்க தேயிலை எஸ்டேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி, அதனை பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால் சிறு விவசாயிகள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் முன்னெச்சிக்கை நடவடிக்கையாக தேயிலை அறுவடை செய்கின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு,குறு விவசாயிகள் தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள தேயிலையை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் உறைபனி அதிகளவில் விழத் தொடங்கி விடும். அவ்வாறு விழுந்தால் தேயிலை செடிகள் பாதிக்கப்படும். குறிப்பாக தாழ்வான பகுதியில் உள்ள செடிகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே முன்கூட்டியே தேயிலை செடிகளில் உள்ள இலைகளை நாங்கள் அறுவடை செய்து வருகிறோம்.
அறுவடைக்கு பின்னர் உடனடியாக செடிகளை கவாத்து செய்து முறையாக பராமரித்தால் மட்டுமே அடுத்த 3 மாதத்துக்கு பின்னர் மகசூல் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கி உள்ளோம்.
உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அப்போது அவர்கள் மலையடிவார பகுதியில் இருக்கும் வனங்களுக்கு சென்று அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடிப் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற பகுதிகளில் ரிசார்ட்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டையொட்டி பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கேம்ப் பயர் மற்றும் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தவும் வனத்துறையினர் இந்தாண்டும் வழக்கம்போல தடை விதித்து உள்ளனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண் கூறியதாவது:-
பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் சுற்றுலா விடுதிகளில் வருகிற 31-ந்தேதி இரவு மற்றும் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல அதிக சத்தத்துடன் கூடிய நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலங்குகளுக்கு உணவு கொடுக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
மசினகுடி-முதுமலை சாலைகளில் இரவு 9 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்லக்கூடாது. மேலும் வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். தற்போது பனியின் காரணமாக புற்கள் காய்ந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டினால் எளிதில் வனங்களுக்கு பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே இதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் வனஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் நிரம்பி வழிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலமான நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருவதால் புத்தாண்டை கொண்டாடவும், இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் ஏராளமானோர் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது ஊட்டியில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவுகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் நிரம்பி வழிகிறது.
இரவில் கடும் குளிர் வாட்டி வதைப்பதல், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சுவர்ட்டர் மற்றும் சால்வைகளை அதிகளவில் வாங்குகிறார்கள். இதனால் வெம்மை ஆடை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் உள்ள ஊட்டி-கூடலூர் சாலை, குன்னூர், கோத்தகிரி சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளான தலைகுந்தா, எச்.பி.எப், பிங்கர் போஸ்ட், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகளால் திட்டமிட்டபடி, சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உறைபனி படர்ந்து, அந்த பகுதியே வெண்மை ஆடை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. அங்கு சுற்றுலா வரும் பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.
- யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
- புல்லட் யானை முகாமிட்டு இருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக புல்லட் ராஜா என்ற காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் 48-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து 75 பணியாளர்கள் கொண்ட வனப்பணியாளர்கள் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
ஆனாலும் யானையின் அட்டாகசம் தொடர்ந்து அதிகரித்தது. இதை தொடர்ந்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தது.
அதன்படி நேற்று மாலை, சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டு இருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பரண் மீது இருந்தவாறு புல்லட் யானை மீது மயக்க ஊசியை செலுத்தினார். இதில் யானை மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடமாடியது.
தொடர்ந்து விஜய், சீனிவாசன் என்ற கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் யானையை பிடித்த வனத்துறையினர், லாரி கொண்டு வந்து யானையை அதில் ஏற்றினர்.
பின்னர் யானை அங்கிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று காலை டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு யானை வந்தது. அங்கு யானைகள் முகாமில் வைத்து யானையை பராமரிக்க உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்ட வந்த புல்லட் ராஜா யாைன பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
ஊருக்குள் புகும் கரடி ரேசன் கடைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு கூடங்களை சேதப்படுத்தி அங்குள்ள பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் கிளண்டல் நான்சச் மற்றும் கிளன் மோர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் கரடி அங்குள்ள குடியிருப்பு மற்றும் பள்ளிகளின் ஜன்னல் கதவுகளையும் சேதப்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர அச்சப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்வோர் ஒருவித அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகிறார்கள். தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.
அதன்படி கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளான டைகர் ஹில், டென்ட் ஹில், நான்சச் ஆகிய 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கரடிக்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது தெரியாத வகையில் முழுவதுமாக மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளை கொண்டு மூடி வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலமாகவே கரடியை கண்காணித்து வருகிறோம். கூண்டின் அருகே வரும் கரடி அதில் உள்ள பழங்களை மட்டும் ருசித்து விட்டு லாவகமாக கூண்டில் சிக்காமல் தப்பி ஓடிவிடுகிறது. தொடர்ந்து வனஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
- பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும்.
- குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்ப்பனி விழும். நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும்.
ஆனால் இந்த முறை கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த வாரம் வரை மிதமான மழை காணப்ப ட்டது. இதனால் பனியின் தாக்கம் மிகவும் குறைந்தது டன், நீர்பனி விழுவதும் தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீலகிரியில் நீர்பனி கொட்டி தொடங்கியது. ஒருவார காலமாக நீர்பனி கொட்டி வருகிறது.
நீர்பனி கொட்டி வரக்கூடிய அதே வேளையில் கடந்த 2 தினங்களாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைபனி கொட்டியது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன் மார்கன், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டியது. அங்குள்ள புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தது.
செடி, கொடிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வாகனங்களிலும் உறைபனி படர்ந்து காணப்பட்டது. வாகனத்தின் உரிமையாளர்கள் வண்டியின் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றி தங்களது வாகனத்தை இயக்கினர்.
உறைபனி கொட்டும் அதே வேளையில் கடும் குளிரும் நிலவியது. குளி ரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகள் முன்பும், வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
அத்தியவாசிய தேவைகளுக்காகவும், தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்களும் சுவட்டர் அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் முதியவர்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனி காணப்பட்டது.
பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும் நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் அதிகமாக இருக்கிறது.
பைக்காரா, கிளன்மார்கன், தொட்ட பெட்டா போன்ற பகுதிக ளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகரித்து ள்ள நிலையில் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது.
ஊட்டியில் நேற்று நகர பகுதியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
- 28-ந்தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
- ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கு தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று, வருகிற 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை, 28, 30 மற்றும் வரும் ஜனவரி 1-ந் தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வருகிற 28-ந் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் ஊட்டி நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ரெயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணித்தனர். சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- பந்தலூர் பகுதியில் கூடுதல் தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்தில் சேரங்கோடு டேன்டீ, சின்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, அய்யன்கொல்லி, மூலைக்கடை, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளையும், விளைநிலங்களையும் புல்லட் என்ற ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் கண்ணில் பட்ட வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துகிறது. இப்படி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
புல்லட் யானையை வனத்துறையினர் 75 வனப்பணியாளர்கள் மூலம் 5 குழுக்களாக பிரிந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கின்றனர். கும்கி யானைகள் உதவியுடனும் அடிக்கடி ரோந்து சென்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். புல்லட் யானை இருக்கும் இடத்தை கண்டறிந்து, அந்த யானை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு போன்ற யானைகள் முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிளன்ராக் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் புல்லட் யானையை சேரம்பாடி டேன்டீ தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் கூடுதல் தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
அத்துடன் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க மதம் பிடித்த யானைகளின் சாணத்தை கரைத்து வீட்டு முன்பு தெளிக்கவும், மிளகாய் தூளை வேப்ப எண்ணெயில் கலந்து துணிகளில் நனைத்து அதனை வீடுகள் முன்பு கட்டவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து வனத்துறையினர் சேரம்பாடி டேன்டீ பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் கடைகள் முன்புள்ள கதவுகளில் மிளகாய் கரைசலில் ஊற வைத்த துணிகளை தோரணங்களாக கட்டி வருகின்றனர்.
அத்துடன் வீட்டின் முன்பு மதம் பிடித்த யானை சாணத்தை கரைத்து தெளிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மதம்பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும்.
இதனால் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின் சாணத்தை சேகரித்து பல பகுதிகளில் தெளித்து வருகிறோம். யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது.
வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டியுள்ளோம். இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வனத்துறையின் இந்த முயற்சி பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- குழுவினர் தற்போது 5 பிரிவுகளாக பிரிந்து காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
- ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேரங்கோடு டேன் டீ, சின்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, சேரம்பாடி டேன் டீ உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை (புல்லட் ராஜா) அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த யானை கடந்த சில நாட்களில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தி உள்ளது. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துவது என்று புல்லட் ராஜாவின் தொல்லை நீடித்து வருகிறது.
தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டும் பணிக்காக 75 ஊழியர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் தற்போது 5 பிரிவுகளாக பிரிந்து காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டிரோன் கேமரா மூலமாகவும் புல்லட் ராஜா பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து, கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் வனத்துறையினர் முயற்சிக்கு இதுவரை பலன் கிட்டவில்லை.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமககள், வனத்தில் இருந்து வெளியே வரும் புல்லட் ராஜா தொடர்ந்து எங்கள் பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. எனவே அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு யானை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் வனத்துறை உயர்மட்ட குழுவினர் ஆய்வுக்கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம், 3 நாட்கள் அவகாசம் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே வனத்தில் இருந்து வெளியேறிய புல்லட் ராஜா யானை இரவு சேரம்பாடி டேன்டீ சரகம்-1 பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளிகள் சுமதி, சாந்தி, கருப்பாயி ஆகிய 3 பேரின் குடியிருப்புகளை தாக்கி சேதம் செய்தது. மேலும் துப்பிக்கையால் வீட்டில் உள்ள டி.வி., கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வெளியே இழுத்து போட்டு சேதப்படுத்தியது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் பின்பக்கம் வழியாக சென்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சேரங்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் 5-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் காணப்படும்.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.
தற்போது மழை குறைந்துள்ளதால் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் அதிகாலை வரை கடும் குளிரும் நிலவுகிறது.
குறிப்பாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் உறைபனியால் ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.
இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி காணப்பட்டது.
உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள், வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.
ஊட்டியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால் தற்போது மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சால்வியா உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருப்பதற்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சாக்லெட்டுகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
- 40 வகையான சாக்லெட் வகைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
ஊட்டி:
ஹோம் மேட் எனப்படும் வீடுகளில் செய்யப்படும் சாக்லெட் என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது ஊட்டிதான். அதற்கான சீதோஷ்ண காலநிலை இங்கு நிலவுவதால் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கோகோ விதைகள் வரவழைக்கபட்டு அரைத்து, அவற்றுடன் கோகோ பட்டர் மற்றும் கரும்பு சர்க்கரை சேர்த்து ஹோம் மேட் சாக்லெட் தயாரிக்கப்படுகிறது.
இந்த சாக்லெட்டுகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் சாக்லெட் தயாரிப்பாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் வகையில் 15 நாள் சாக்லெட் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தைம், யூகலிப்டஸ், ரோஸ்மேரி, ஊட்டி வர்க்கி, தேயிலைத்தூள், காபி போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட 40 வகையான சாக்லெட் வகைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
மேலும் மேனிகுயின் எனப்படும் பொம்மைகளும், பெண்கள் அணியும் ஆபரணங்களும் சாக்லெட் மூலம் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.






