என் மலர்
நீலகிரி
- மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணைவேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார்.
- மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாநாடு தொடங்கியவுடன் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், பாரதியார் பாடல் இசைக்கப்பட்டு மாநாடு தொடங்கப்பட்டது.
மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணைவேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதுதவிர மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினார்.
பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வரராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றியதுடன், துணைவேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு நாளையும் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வந்துவிட்டார். ஊட்டி ராஜ்பவனில் வருகிற 9-ந் தேதி வரை தங்கியிருக்கும் கவர்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, முக்கிய கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி ஊட்டியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.
கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சம் பேரும், ஏப்ரல், மே என கோடை சீசனில் மொத்தம் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.
தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். பின்னல் பெரிய புல்வெளி மைதானத்தை குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்ற படி ஊட்டி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்தனர்.
- கேரள பதிவு எண் கொண்ட கார் ஊட்டியில் இருந்து கூடலூர் வந்தது.
- இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கூடலூர்
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். பி
ன்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லும் போது வாகனங்களை ஓட்டிச் செல்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் கூடலூர் நகரில் விபத்துக்குள்ளாகி வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் ஊட்டியில் இருந்து கூடலூர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் இரும்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு புகுந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரிய சூண்டியில் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
- மேற்கூரைகள் முழுமையாக சேதம் அடைந்தது.
கூடலூர்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியில் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த சண்முகேஸ்வரன் என்பவரது வீட்டை காட்டு யானை முற்றுகையிட்டது.
பின்னர் வீட்டின் அருகே இருந்த கூடாரத்தை காட்டு யானை உடைத்து தள்ளியது. இதில் அதன் மேற்கூரைகள் முழுமையாக சேதம் அடைந்தது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்த சண்முகேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியேறி உறவினர் வீட்டில் தங்கினர். தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது.
- தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை கிராமத்தில் நீலகிரி ஆதிவாசி நல சங்கம் சார்பில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் இல்லாமல் குறைந்த விலையில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதனை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பத்தில் தயாரான நீர் சுத்திகரிப்பு கருவிக்கான நண்ணீர் கிராம திட்டம்-2.0 வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைப்பாடி, தேக்குபாடி, கார்குடி, லைட்பாடி ஆகிய 4 கிராமங்களில் 350 வீடுகள் உள்ளன. அங்கு இதுவரை 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
இங்கு வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு இவர்களின் உயரம், எடை ஆகியை கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவையான சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனை பழங்குடி மகக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மசினக்குடி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.
அடுத்தபடியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நன்னீர் 1.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்திய பணிகள் குறித்த புகைப்படத்தை பார்வையிட்ட கலெக்டர் நன்னீர் கிராம திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வெங்கடேஷ், கூடலூர் வனஅதிகாரி கொம்மு ஒம்காரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணாதுரை, குமார், நாவா தலைவர் சண்முகம், செயலாளர் ஆல்வாஷ், திட்ட அதிகாரி பூவிழி (நன்னீர் கிராமம்) நாவா பொருளாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது.
- பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை
அரவேணு,
கோத்தகிரி தாலுகா, நடுஹட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டெட்டி கிராமத்தில் அம்பேத்கர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பழைய பைப் லைன்களை மாற்றுவதற்காக, புதிய பைப் குழாய்கள் கொண்டுவரப்பட்டது.
ஆனால் அங்கு பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. எனவே அந்த பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது. இதற்கிடையே பழைய பைப் லைன்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே அங்கு உள்ள வீடுகளுக்கு புதிய தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தி தர முடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்கள் பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பாக தினம்தோறும் காலை,மாலையில் என நகராட்சி குப்பை வாகனங்களில் வந்து குப்ைப பெற்று செல்கின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் வாகனங்களில் எங்கெங்கிருந்தோ வந்து மூட்டை, மூட்டையாக குப்பைகளை தினம்தோறும் வீசி செல்கின்றனர்.
பிளாஸ்டிக் மற்றும் வாழை இலைகள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் இதுபோல் சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது.
- டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.
அரவேனு,
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாளையொட்டி பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றதுடன், கோவிலில் முருகக் கடவுளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கொண்டாட்டங்கள் தடபுடல்படும்.
வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம். இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. அப்போது டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது கோவிலில்,ஐந்து முக விளக்கு ஏற்றி, அதில் 5 வித எண்ணை ஊற்றி, 5 வகை புஷ்பம் சமர்ப்பித்து, சுவாமிக்கு 5 வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் ளை படைத்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது.
இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
- இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
ஊட்டி,
ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆனால் தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மற்றும் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கினர்.
அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
தற்போது பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள் எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
- தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் பக்காசூரன் மலைக் கிராமம் உள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவ, மாணவிகளில் பலர் குன்னூரில் படிக்கின்றனர்.
கிராமத்தினரும் அடிக்கடி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பக்காசூரன் கிராமத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் மக்கள், பல கிலோ மீட்டா் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
எனவே பக்காசூரன் மலைகிராமத்துக்கு அரசு பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சாலை அமைக்கப்பட்டது.
இருப்பினும் அங்கு பஸ் சேவை தொடங்கவில்லை.. இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.
இதனை தொடர்ந்து பக்காசூரன் மலைக்கு பஸ் சேவை தொடங்குவது என்று போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.
இதன்படி அங்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்காசூரன் கிராமத்துக்கு தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா. உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பொதுக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.
- யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.
சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து செல்வது வாடிக்கை.
சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இந்த பகுதிக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.
அவர்கள் காட்சி முனை பகுதியில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி, தவளை மலை காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் இதன் அருகே உள்ள யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர்.
மரங்களின் நடுவில் ஊடுறுவி வரும் சூரிய கதிர்களின் வெளிச்சத்தில் வானுயரந்து நிற்றும் மரங்களின் பின்னனியில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
- பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரியை அடுத்த ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டன்னி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.
இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி கடந்த 30-ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
சம்பவத்தன்று இறந்த மாணவியின் சகோதரி மற்றும் பெற்றோர் வீட்டின் பீரோவில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தனர்.
அப்போது மாணவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான நந்தகுமார்(32) என்பவருடன் அதிக முறை பேசியிருப்பது ரெியவந்தது. இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியும், வீட்டின் அருகே வசிக்கும் நந்தகுமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமாகி விட்டார். இதையடுத்து மாணவி, வாலிபரை தொடர்பு கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் அந்த வாலிபர், நீ வேறு ஜாதி, நான் வேறு ஜாதி. உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார். மாணவி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாணவிக்கு அந்த வாலிபர் அனுப்பி உள்ளார்.
திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜசேகரன், வி.ஏ.ஓ., அஜய் கான், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில், தொட்டன்னி பகுதியில் புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த நந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






