search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    X

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

    • ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சம் பேரும், ஏப்ரல், மே என கோடை சீசனில் மொத்தம் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். பின்னல் பெரிய புல்வெளி மைதானத்தை குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்ற படி ஊட்டி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்தனர்.

    Next Story
    ×