என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • 2023–-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு, சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஒசூர் அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 2023–-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு, சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதில், மாவட்டம் ஒன்றுக்கு, 3-6 பயனாளிகள் அல்லது குறைந்த பட்சம், 3 பயனாளிகளை தேர்வு செய்து, இத்திட்டதை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதி உள்ள பய னாளிகள், தங்கள் குடியி ருப்புக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்த கத்திற்கு சென்று விண்ணப் பம் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பம் அளிக்க கடைசிநாள், ஜூன் 12-ந் தேதி ஆகும். பயனாளி திட்ட செலவினத்தில், 50 சதவீதம் அல்லது உச்சபட்ச வரையறை களை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 625-க்கு எஞ்சி யுள்ள திட்ட செலவினத்தை, சொந்த செலவு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும்.

    நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவை யான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகர ணங்கள் வாங்கும் செலவு, 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகிய வற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் மாநில அரசால் மானியமாக வழங்கப்படும்.

    ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஒசூர் அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில், 30 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர். பொதுமக்கள் கொடுத்த 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து ஜூன் 2-ந் தேதி ஜமாபந்தி முடிவதற்குள் தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வி.ஏ.ஓ.,க்களிடம் உள்ள கிராம புலப்பட தகவல் பதிவேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயிரிடப்பட்ட பயிர்களில் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையணை பதிவேடு, பிறப்பு ,இறப்பு பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    இதில் தாசில்தார் கலைச்செல்வி வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    • முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.
    • அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா திடுமல் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 47), விவசாயி.

    இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரரான விஸ்வநாதன் - பூங்கொடி தம்பதிக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

    அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் கிருஷ்ணவேணி பலத்த காயமடைந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஸ்வநாதனை தீவிரமாக தேடி வருகின்றார்.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 48லட்சத்து 7 ஆயிரத்து 709-க்கு விற்பனை யானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றி யம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 52.32½ குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 924 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.15-க்கும், சராசரி விலையாக ரூ.21.15-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 7ஆயிரத்து 430-க்கு விற்பனையானது.

    அதேபோல் 181.32½குவிண்டால் எடை கொண்ட 407-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.39-க்கும், சராசரி விலையாக ரூ.79. 89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.92-க்கும், சராசரி விலையாக ரூ.71.60-க்கும் என மொத்தம் ரூ.13லட்சத்து21 ஆயிரத்து 43-க்கு விற்பனையானது.

    அதேபோல் 243.09 குவிண்டால் எடை கொண்ட 325 மூட்டை எள் விற்ப னைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சவிலையாக ரூ.145.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.134.42-க்கும், சராசரி விலையாக ரூ.142.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.135.99-க்கும், சராசரி விலையாக ரூ.143.99-க்கும் என மொத்தம் ரூ.33லட்சத்து 79ஆயிரத்து 236-க்கு விற்ப னையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 48லட்சத்து 7 ஆயிரத்து 709-க்கு விற்பனை யானது.

    • சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
    • அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி நிருபர்களிடம் கூறியதாது:-

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுக்க உள்ள பகுதிகளான வளையப்பட்டி, லத்துவாடி, பரளி, ஆண்டாபுரம் ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம்.

    ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளதாக தகவல் உள்ளது. இதனால் ஆயிரக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கிணறுகள் பாதிக்கப்படும். நிலம் எடுக்கும்போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். எனினும் இதுவரை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.

    பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பற்றி எதுவும் சொல்ல வில்லை. இதனால் விவசாயி கள் அச்சத்தில் உள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதில் ஆட்சே பனை இல்லை. இதில் விவசா யிகளுக்கு சொந்தமான நிலம் எடுப்பதில் தான் ஆட்சேபனை யாக உள்ளது.

    விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டுமென்ப தற்காக ஆய்வு செய்தோம். சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    தற்போது நிலம் கையகப்படுத்த உள்ள இடத்தின் அருகே, ஏற்கனவே சிட்கோவிற்கு எடுக்கப்பட்ட நிலம் கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எந்த பயன்பாட்டிற்கும் நிலம் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல் நகராட்சி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் தூசூர் ஏரியில் கலக்கச் செய்கிறது. இதனால் ஆயிரக்கணககான விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில் இண்டகரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படும்.

    இதற்கான தகுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பிளஸ் 2-ல், 2022-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    இப்படிப்பிற்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற்றால், ஆண்டு சம்பளமாக ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் சம்பள உயர்வும் பெறலாம்.

    இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • இக் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பிற பகுதிகள் மிகவும் பழுதடைந்து, மழை காலங்களில் மழைநீர் ஊராட்சி மன்ற அலுவலகத் திற்குள் புகுந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

    தற்போது வரை அதே கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பிற பகுதிகள் மிகவும் பழுதடைந்து, மழை காலங்களில் மழைநீர் ஊராட்சி மன்ற அலுவலகத் திற்குள் புகுந்தது.

    இதனால் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த கம்ப்யூட்டர் சாதனங்கள் பழுதடைந்தது. பல்வேறு ஆவணங்களும் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. இதனால் அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பழுதடைந்த மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரை தயாரிப்பு ஆலைகளில் 2 நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மொத்தம் 21 வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) அருண் மற்றும் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் கொண்ட குழு வினர், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரை தயாரிப்பு ஆலைகளில் 2 நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மொத்தம் 21 வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கை செய்தனர். இதில் வெல்ல ஆலைகளில் வெல்லபாகு தயாரிக்கும் இடம், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமாக உள்ளனரா, சக்கரை இருப்பு, வேதிப் பொருள்கள் இருப்பு ஆகியவற்றை தணிக்கை செய்தனர்.

    ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு கலப்படம் செய்யப்பட்டு நாட்டுச் சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு தரச் சட்டம் 2006- ன் படி உணவு பாதுகாப்பு துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 38 ஆயிரத்து 310 கிலோ வெல்லம், நாட்டுச்சக்கரை மற்றும் 3 ஆயிரத்து 725 கிலோ சர்க்கரை மற்றும் வேதிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    உணவு பாதுகாப்பு அலு வலர்கள் தணிக்கையின் போது 13 வெல்ல ஆலை களில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சம்பந்தப்பட்ட வெல்ல ஆலைகளின் உரிமையா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெரு மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.
    • திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்க ளும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.

    கடும் வெயிலின் காரணமாக இவை காய்ந்திருந்த நிலையில், திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட சின்னசோ ளிபாளையம் பகுதிக்கு விரைந்து வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்ப டுத்தி, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பிaனும் தோட்டத்தில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின.

    • நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

    பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

    மேலும், நியாய விலை கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது.
    • இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    இந்நிலையில் அந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களை மலைத் தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து சின்ன மருதூர் காலனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலாயுதம்பாளை யம் தீயணைப்புத் துறை யினரிடம் புகார் மனு கொடுத்து மலைத் தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிளுவ மரத்தில் கூடுகட்டி இருந்த ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ×