என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • முருகனுக்கு பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் சிக்கலில் சிங்கார வேலவர் கோவில் அமை ந்துள்ளது. முருகப்பெருமான் அன்னை வேல் நெடுங்க ண்ணிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு புகழ்மிக்க இந்த கோவிலில் கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி தேரில் முருகப்பெ ருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெ ருமானுக்கு பால், பன்னீர், தேன், விபூதி,பஞ்சா மிர்தம் உள்ளி ட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளி ஆலய உட்பிரகா ரம் வலம் வந்தார். அதனை தொடர்ந்து மகா தீபாரா தனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

    • என்.எஸ்.எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் தூய்மை பசுமையை வலியுறுத்தி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தினை சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து தூய்மை பசுமையை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் என்.எஸ். எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் தேசிய பசுமை படை வழங்கிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேசன், தலைமை ஆசிரியர் கஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன் சூழல் ஒருங்கிணைப்பாளர் இமயசிவன், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் புஷ்பராஜ் , கண்ணன், சங்கர் மற்றும் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
    • மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடி யக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.

    இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இன்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பி னார்.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    • உற்பத்தி செலவு அதிகமாவதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
    • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு, குரவப்பு லம், தாணிக்கோட்டகம், செம்போடை, பிராந்தி யங்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பப்படும்.

    அவ்வாறு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தற்போது வாட்டர் கலர்கள் கொண்டு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகமாகதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கும், 10 அடி சிலை ரூ. 20 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

    இதுகுறித்து சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில்:-

    இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்திருப்பதால் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பும், கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது என்றனர்.

    • மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.
    • 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், கடினல்வ யல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆயக்கா ரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், தகட்டூர் ராமகோவிந்த ன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி ஆசிரியர் சுப்பிரம ணியன் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    கடினல்வயல் உதவி தலைமையாசிரியர் சிவகுருநாதன். இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர் மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.

    ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட். இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    தகட்டூர் ராமகோவி ந்தன்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியை மீண்டும் ஒரு மாணவனோடு தொடங்கி தற்போது 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் சுப்பிர மணியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.விருது பெறும் 3 ஆசிரியர்களையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தி னர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெறும் ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    தொடர்ந்து, கடந்த 2-ந் தேதி காலை காப்பு கட்டுதலும், மாலை முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, பின்னா் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • கனகவல்லி அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கனகவல்லி (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில், வழக்கம்போல் நேற்று கனகவல்லி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் ஆற்றில் இறங்கி இறால் மற்றும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.

    இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஆவணி ஞாயிறு ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பார்கள் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது.
    • கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம் ,கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசை ப்படகுகளில் மீனவர்க ள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகா லையிலேயே ஆயிரக்க ணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, ஆவணி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் என்பதாலும், மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஏராளமான பெண்கள் விரதம் இருப்பார்கள் என்பதாலும் விற்பனை மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    வஞ்சரம் 1 கிலோ ரூ 550-600, வௌவால் 1 கிலோ ரூ1000-1050, பாறை 1 கிலோ ரூ 350-400, சீலா 1 கிலோ ரூ300-350, விள மீன் 1 கிலோ ரூ 250-300, சங்கரா 1 கிலோ ரூ 200-250, நெத்திலி 1 கிலோ ரூ 100-120க்கு விற்பனை யானது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் விலை சற்று குறைந்து ள்ளதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தற்பொழுது வேளாங்க ண்ணி ஆண்டு திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு வந்துள்ள பக்தர்களும், மீன் வாங்க அக்கரைப்பேட்டையில் உள்ள மீன் பிடித்து துறைமுகத்திற்கு வந்துள்ளதால் மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் கலைகட்டி உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்ததால் உள்ளூர் வியாபாரிகளே தற்பொழுது அதிக அளவில் கூடியுள்ளனர்.வழக்கமாக 6.30 மணிக்கு எல்லாம் ஞாயிற்றுக்கிழமை ஏலம் முடியும் நிலையில் இன்று 9 மணி வரை நீடித்தது என மீனவர்கள் தெரிவித்து ள்ளனர். ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது மீனவர்கள் 4 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாகவும் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் விற்பனை இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வள்ளுவன் தோப்பில் சீராள மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ஆம் தேதி வெள்ளிக் கிழமை காப்பு கட்டுதல்,பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர்,இளநீர்,சந்தனம், திறுநீர், தேன்,திரவியம்,மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், தீபாரா தனையும் நடைபெற்றது.தொடர்ந்து காய்கறி மற்றும் கனி அலங்கார பூஜை நடைபெற்று பின்னர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து இன்று சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதில் திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடத்த கூடாது என திருப்பணி குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
    • அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாகை சாலையில் ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டபட்ட வேதாமிர்த ஏரி எனும் தீர்த்த குளம் உள்ளது.

    இந்த ஏரியை 7.30 கோடியில் தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்க ப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் நடுவில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரு மான ஓ.எஸ்.மணியன் தன் சொந்த செலவில் தடாக ஸ்ரீ நந்திகேஸ்வரர் கோவில் அமைத்து தற்போது வரும் 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

    நேற்று 2ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்க பட்டது. இந்த நிலையில் விழாவிற்கு வரும் பக்தா்களை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வை க்க கூடாது உடன் அகற்ற வேண்டுமென அறநிலை யத்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்ததால் பிளக்ஸ்போ ர்டுகள் அகற்றபட்டன. நேற்று அறநிலை துறையினர் தாடகநந்தி ஸ்வார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வாங்கவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்த கூடாது என திருப்பணி குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.

    இதையொட்டி வேதாரண்யம் தாலுகா அலு வலகத்தில் பேச்சுவா ர்த்தை வருவாய் கோட்டா ட்சியர் பேபி தலைமையில் நடைபெற்றது பேச்சுவா ர்த்தையில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் அறிவழக ன் டி.எஸ்.பி சுபாஷ் சந்திரபோஸ் நகராட்சி கமிஷ னரவெங்கட லெட்சுமணன் மற்றும்ச ட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், வழக்கறிஞர்கள் சுப்பையன் கிரிதரன் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர். பேச்சு வார்த்தை க்கு பின்பு அனுமதி பெற்று கும்பா பிஷேகம்நடத்த வேண்டும் என தெரிவிக்க பட்டது இதனால் இன்று காலைஏரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி தென்பிடாகை மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 24). கூலித்தொழிலாளி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

    இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த தண்டபாணி நேற்று முன்தினம் காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக

    ல் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
    • சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்.

    இவரது மனைவி உமாபதி (வயது 45).

    இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த வீட்டில் மின்விசிறி போடுவதற்கு சுவிட்ஜ் அமைக்கப்பட்டது.

    அப்போது புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ஸ் போர்டில் பிளக்கை சொறுகினார்.

    இதில் மின்சாரம் தாக்கி உமாபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×