என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 2-ந் தேதி காலை காப்பு கட்டுதலும், மாலை முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, பின்னா் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
Next Story






