என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. 

    இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 பள்ளி வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆணைப்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படியும் தஞ்சை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி அனுமதி சீட்டு தகுதிச் சான்று இன்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்களையும், அனுமதிக்கு புறம்பாக புதிய நபர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களில் சோதனை நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு 2 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சோதனையில் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    செண்பகராயநல்லூரில் ரெயில் சுரங்கபாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வழியில் செண்பக ராயநல்லூர் சனிசந்தை &மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்லவேண்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. 

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப் பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. 

    இதனை கண்டித்து கரியாப் பட்டினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ராஜசிம்மன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கரியாப்பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கப் படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
    நாகை அக்கரைப்பேட்டையில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்ட கடல் அட்டைகள், கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பழைய கட்டிடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆனந்தம் (வயது 51) என்பவர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் நேரடி பார்வையில் நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த வடிவேல், இளங்கோவன், வெங்கடேஷ் மற்றும் முதன்மை காவலர்கள் சுந்தரேசன், ஏங்கெல்ஸ், சசிகுமார், பாலு ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடை உள்ள சுறா மீனின் இறக்கைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரை ஆகியவற்றையும் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்பு பொருட்களை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    வேதாரண்யம் அருகே சாலை ஓரம் அம்மன் சிலையை யாரா வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்  தூண்டி காரன் கோவில் எதிரே சாலையின் தென்புறம் உள்ள குதிரை சிலையின் கீழே சுமார் அரை அடி உயரம் கொண்ட வெண்கலத்தினால் ஆன மாரியம்மன் சிலை ஒன்று இருந்தது. 

    இந்த அம்மன் சிலையை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என தெரியவில்லை. வேதாரண்யம் இன்ஸ்பெக்டர்  சுப்ரியா  விசாரணை செய்தார்  பின்பு சிலையினை தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபால கிருஷ்ணன் எடுத்துச் சென்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைத்துள்ளார்.
    இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    வேதாரண்யம் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம்-நாகக்குடையான் இணைப்பு சாலை ஏரஞ்சன் காட்டு பகுதியில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக 9 அடி சாலையாக உள்ள இந்த சாலை இரு கிராமங்களையும் இணைக்கும் சாலை ஆகும். 

    இந்த சாலை வழியாக விவசாயம் செய்வதற்கு தேவையான உரம், பூச்சிமருந்து மற்றும் இடுபொருட்களை எடுத்து செல்லவும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லவும், பள்ளி குழந்தைகள் வேனில் சென்று வரவும் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்தது. தற்போது திடீரென்று அந்த பாதையை தனிநபர் வேலி வைத்து அடைத்து வைத்துவிட்டார். 

    இதனால் பொது மக்கள், விவசாயிகள் அவதி படுகின்றனர். இச்சாலை தற்போது கத்தரிப்புலம் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இதுகுறித்து வேதாரண் யம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வி அடைந்தது விட்டது.
     
    எனவே பொதுமக்கள் மாணவர்கள் விவசாயிகள் நலன்கருதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தொடக்கி வைத்தார்.
     
    இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் ரூ.16 லட்சம் செலவில் அமல்படுத்தப்பட்டு நூறு நாள் வேலைவாய்ப்பு மூலம் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கபட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கிராம பழமுதிர்சோலையை உருவாக்கவும் மா, புங்கை, வேம்பு, தென்னை உள்ளிட்ட பலவகையான மரங்களும் நடப்பட்டுள்ளன.
     
    இதனை பாதுகாத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பதற்கு ஏதுவாக கோவில் வளாகத்தின் அருகிலேயே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கபட்டும் என்று ஊராட்சி மன்றத்தலைவர் ராமையன் தெரிவித்தார்.
    நாகூரில் சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் சிவாஜிநகரை சேர்ந்தவர் சபீர்அகமது (வயது 45). இவர் தனது மகன் முகமதுஅமானை (15) அழைத்து கொண்டு நாகை மாவட்டம் நாகூருக்கு சுற்றுலா வந்தார்.

    இதற்காக அவர் நாகூரில் தங்கியிருந்து தர்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மகனை அழைத்து கொண்டு சென்றார். இன்று அவர் நாகூர் கடலில் முகமதுஅமானுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த அலையில் தண்ணீரில் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    தத்தளித்த நிலையில் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி சபீர்அகமது, முகமது அமான் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    வேதாரண்யத்தில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதி நாகை சாலையில் வசிப்பர் சபீர்அகமது (30). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இரவு தனது ஆட்டோவை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார். 

    அதிகாலை பார்க்கும் போது ஆட்டோவை காணவில்லை.

    இது குறித்து அவர் வேதாரண்யம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி உட்பட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகை செம்போடை ரோட்டில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டபோது ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றார். 

    அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் மணிவேல் (28) என்பதும், திருக்குவளை வட்டம், பாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    இவர் ஓட்டி வந்த ஆட்டோ தோப்புத்துறை பகுதியில் திருடப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிவேலை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். 

    கடந்த ஆண்டு இதே மணிவேல் வேறொரு ஆட்டோவை வேதாரண்யத்தில் திருடி திருச்சி&தூவாக்குடி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு மறைவாக நின்றபோது ஆட்டோ சங்கத்தினர் சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார்கள் சென்று மீட்டு வந்தனர்.
    தெற்கு பொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி காய்கறிகளால் சண்டிஹோமம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய் கீரை, பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய், வாழை, கரும்பு, கொய்யா உள்ளிட்ட 3 முதல் 4 டன் காய்கறிகள் கொண்டு 2000 லிட்டர் நெய் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு வேள்வி நடைபெற்றது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் சுற்றியுள்ள திருவாரூர், கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும், இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டி தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    யாகத்தில் வைக்கப் பட்டுள்ள கடல்நீர் பூஜைக்கு பிறகு செல்லி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் லாரியில் தூங்கிய டிரைவர் திடீரென்று மரணமடைந்தார்.
    வேதாரண்யம்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்கா மணத்தான் நல்லார் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). லாரி டிரைவர். 

    இவர் உப்பு லோடு ஏற்றுவதற்காக நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வந்தார். இரவு நேரமாகி விட்டதால் லாரியை நாகை சாலையோரம் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார். 

    காலையில் உப்பு ஏற்றுவதற்காக அவரை லாரி ஷெட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டும் முடியவில்லை. இதையடுத்து நேரில் சென்று பார்த்த போது லாரியில் செந்தில்குமார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமார் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியில் செந்தில்குமார் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×