என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    வேதாரண்யம் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம்-நாகக்குடையான் இணைப்பு சாலை ஏரஞ்சன் காட்டு பகுதியில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக 9 அடி சாலையாக உள்ள இந்த சாலை இரு கிராமங்களையும் இணைக்கும் சாலை ஆகும். 

    இந்த சாலை வழியாக விவசாயம் செய்வதற்கு தேவையான உரம், பூச்சிமருந்து மற்றும் இடுபொருட்களை எடுத்து செல்லவும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லவும், பள்ளி குழந்தைகள் வேனில் சென்று வரவும் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்தது. தற்போது திடீரென்று அந்த பாதையை தனிநபர் வேலி வைத்து அடைத்து வைத்துவிட்டார். 

    இதனால் பொது மக்கள், விவசாயிகள் அவதி படுகின்றனர். இச்சாலை தற்போது கத்தரிப்புலம் ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இதுகுறித்து வேதாரண் யம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வி அடைந்தது விட்டது.
     
    எனவே பொதுமக்கள் மாணவர்கள் விவசாயிகள் நலன்கருதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தொடக்கி வைத்தார்.
     
    இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் ரூ.16 லட்சம் செலவில் அமல்படுத்தப்பட்டு நூறு நாள் வேலைவாய்ப்பு மூலம் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கபட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கிராம பழமுதிர்சோலையை உருவாக்கவும் மா, புங்கை, வேம்பு, தென்னை உள்ளிட்ட பலவகையான மரங்களும் நடப்பட்டுள்ளன.
     
    இதனை பாதுகாத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பதற்கு ஏதுவாக கோவில் வளாகத்தின் அருகிலேயே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கபட்டும் என்று ஊராட்சி மன்றத்தலைவர் ராமையன் தெரிவித்தார்.
    நாகூரில் சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் சிவாஜிநகரை சேர்ந்தவர் சபீர்அகமது (வயது 45). இவர் தனது மகன் முகமதுஅமானை (15) அழைத்து கொண்டு நாகை மாவட்டம் நாகூருக்கு சுற்றுலா வந்தார்.

    இதற்காக அவர் நாகூரில் தங்கியிருந்து தர்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மகனை அழைத்து கொண்டு சென்றார். இன்று அவர் நாகூர் கடலில் முகமதுஅமானுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த அலையில் தண்ணீரில் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    தத்தளித்த நிலையில் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி சபீர்அகமது, முகமது அமான் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    வேதாரண்யத்தில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதி நாகை சாலையில் வசிப்பர் சபீர்அகமது (30). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இரவு தனது ஆட்டோவை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார். 

    அதிகாலை பார்க்கும் போது ஆட்டோவை காணவில்லை.

    இது குறித்து அவர் வேதாரண்யம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி உட்பட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகை செம்போடை ரோட்டில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டபோது ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றார். 

    அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் மணிவேல் (28) என்பதும், திருக்குவளை வட்டம், பாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    இவர் ஓட்டி வந்த ஆட்டோ தோப்புத்துறை பகுதியில் திருடப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிவேலை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். 

    கடந்த ஆண்டு இதே மணிவேல் வேறொரு ஆட்டோவை வேதாரண்யத்தில் திருடி திருச்சி&தூவாக்குடி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு மறைவாக நின்றபோது ஆட்டோ சங்கத்தினர் சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார்கள் சென்று மீட்டு வந்தனர்.
    தெற்கு பொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி காய்கறிகளால் சண்டிஹோமம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய் கீரை, பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய், வாழை, கரும்பு, கொய்யா உள்ளிட்ட 3 முதல் 4 டன் காய்கறிகள் கொண்டு 2000 லிட்டர் நெய் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு வேள்வி நடைபெற்றது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் சுற்றியுள்ள திருவாரூர், கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும், இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டி தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    யாகத்தில் வைக்கப் பட்டுள்ள கடல்நீர் பூஜைக்கு பிறகு செல்லி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் லாரியில் தூங்கிய டிரைவர் திடீரென்று மரணமடைந்தார்.
    வேதாரண்யம்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்கா மணத்தான் நல்லார் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). லாரி டிரைவர். 

    இவர் உப்பு லோடு ஏற்றுவதற்காக நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வந்தார். இரவு நேரமாகி விட்டதால் லாரியை நாகை சாலையோரம் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார். 

    காலையில் உப்பு ஏற்றுவதற்காக அவரை லாரி ஷெட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டும் முடியவில்லை. இதையடுத்து நேரில் சென்று பார்த்த போது லாரியில் செந்தில்குமார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமார் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியில் செந்தில்குமார் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவியளிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு 199-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றுசேர்ந்து காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் ரூ.7,27,500 குடும்பத்திற்கு வழங்கினர்.

    வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு வைத்தியார்காடு பகுதியை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜா (வயது 51). இவர் கடந்த மாதம் 10ந் தேதி இறந்துவிட்டர் 

    இவரது குடும்பத்திற்கு 93-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சிறப்பு உதவி காவலர்கள் சுமார் 4000 ஆயிரம் பேர் சேர்ந்து ரூ.7, 27,500 ரூபாயை அவரது மனைவி ஜெயலட்சுமியிடம் வழங்கினர்.

    மேலும் நாகை மாவட்ட சிறப்பு உதவி காவலர்கள் சார்பாக ரூ.80 ஆயிரமும் வழங்கபட்டது. 

    நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட காக்கும் கரங்கங்கள் காவலர்கள் கலந்து கொண்டனர் 

    இதேபோல் மதுரை, பெரம்பலூர் விருதுநகர், கோயம்புத்தூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இறந்த சிறப்பு உதவிகாவலர்களின் குடும்பத்திற்கு காக்கும் கரங்கள் சர்பாக 36 லட்சத்து 41 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது என காக்கும் கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
    வேகம் அதிகரிப்பதற்கான பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின்சார ரெயில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு தினந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வர். 

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2010 டிசம்பர் 20-ம் தேதி வேளாங்கண்ணிக்கும் நாகப்பட்டினத்திற்கும் அப்போதைய தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து நாகையிலிருந்து 
    சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலான பகுதிகளில், மண்ணில் உரிய உறுதித் 
    தன்மை இல்லை என்பதால் இத்தடத்தில் இயங்கும் ரயில்களுக்கு 
    அதிகபட்சம் வேகம் 30 கி.மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    30 கி.மீட்டர் வேகம் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், மண்ணின் உறுதித் தன்மையற்ற காரணத்தால், இத்தடத்தில் 15 முதல் 20 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. 

    இதனால், நாகையிலிருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள வேளாங்கண்ணியைச் சென்றடைய ஒவ்வொரு ரயிலுக்கும் சுமார் 30 முதல் 40 நிமிடம் தேவைப்பட்டது. 

    இதனால், இத்தடத்திலான ரயில் சேவை துரித போக்குவரத்துக்குரியதாக இல்லை.

    இது குறித்த கோரிக்கைகள்படி, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டது. 

    ஏறத்தாழ சுமார் 5 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றுள்ள இப்பணி, அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக இத்தடத்திலான இருப்புப் பாதையில் கருங்கல் பேக்கிங் பணிகள் நிறைவடைந்தன.

    இந்த நிலையில், நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் நேற்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. இருப்பு பாதைகளில் புழுதி பறந்தது. 

    தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் தீபக் நாராயண காட்டோ தலைமையில் தென்னக ரயில்வே அதிகாரிகள். பங்கேற்றனர்.

    இந்த வேகச் சோதனைக்கு பிறகு, நாகை - வேளாங்கண்ணி தடத்தில் ரயில்கள் சுமார் 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

    மேலும், பொது முடக்கம் காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் முடங்கியிருக்கும் வேளாங்கண்ணி ரயில் சேவையும், இந்த சோதனைக்கு பின்னர் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து 
    445 மையங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தை சார்ந்த 60 ஆயிரத்து 
    853 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது 

    அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார 
    நிலையமும், வேளாங்கண்ணி பேரூராட்சி இணைந்து வேளாங்கண்ணியில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

    பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள், 
    மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் போலியோ 
    சொட்டு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். 

    இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வேளாங்கண்ணி பேராலயம், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது

    முகாமில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மற்றும் ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஆத்மா உறுப்பினர் மரிய சார்லி, மருத்துவர் விக்னேஸ்வர், சுகாதார ஆய்வாளர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என வேளாங்கண்ணியை சேர்ந்த மாணவி கூறியுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் 3-ம் ஆண்டு பயின்று வரும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியா உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறியுள்ள வின்சியா, குடியிருப்புகளின் சுரங்கங்கள், சப்வே, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார். தான் தங்கி இருக்கும் பகுதியில் சிக்கியுள்ள 8 ஆயிரம் இந்திய மாணவர்களையும், உக்ரைன் நாடு முழுவதுமுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    நாகை அருகே செல்லி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத சுவர்ணபுரீஸ்வரர் மற்றும் செல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மகா சண்டி ஹோமம் உற்சவத்தை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து, மஹாதீபாராதனை காட்டப்பட்டன. தொடர்ந்து லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனையும், முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. 

    இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    ×