என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் சிலை
    X
    அம்மன் சிலை

    சாலை ஓரம் இருந்த அம்மன் சிலை

    வேதாரண்யம் அருகே சாலை ஓரம் அம்மன் சிலையை யாரா வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்  தூண்டி காரன் கோவில் எதிரே சாலையின் தென்புறம் உள்ள குதிரை சிலையின் கீழே சுமார் அரை அடி உயரம் கொண்ட வெண்கலத்தினால் ஆன மாரியம்மன் சிலை ஒன்று இருந்தது. 

    இந்த அம்மன் சிலையை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என தெரியவில்லை. வேதாரண்யம் இன்ஸ்பெக்டர்  சுப்ரியா  விசாரணை செய்தார்  பின்பு சிலையினை தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபால கிருஷ்ணன் எடுத்துச் சென்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைத்துள்ளார்.
    Next Story
    ×