என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகள்.
நாகையில் கடல் அட்டைகள் பறிமுதல்
நாகை அக்கரைப்பேட்டையில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்ட கடல் அட்டைகள், கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பழைய கட்டிடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆனந்தம் (வயது 51) என்பவர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் நேரடி பார்வையில் நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த வடிவேல், இளங்கோவன், வெங்கடேஷ் மற்றும் முதன்மை காவலர்கள் சுந்தரேசன், ஏங்கெல்ஸ், சசிகுமார், பாலு ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடை உள்ள சுறா மீனின் இறக்கைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரை ஆகியவற்றையும் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்பு பொருட்களை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story






