என் மலர்
நாகப்பட்டினம்
நாகையில் சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலியானார்
நாகப்பட்டினம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியை சேர்ந்த ராமஜெயம் என்பவரது மகன் அருள்மொழி (வயது 35). அறுவடை எந்திர டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் நாகை, திட்டச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அருள்மொழி, தனது மோட்டார் சைக்கிளில் புத்தூர் ரவுண்டானாவில் இருந்து திட்டச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
பாலையூர் அருகே எதிரே காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள், அருள்மொழி மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில் சாராய மூட்டைகளுடன் வந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. சாராயம் கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில், படுகாயம் அடைந்த அருள்மொழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருள்மொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்தி வந்து விபத்தை ஏற்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேரடி நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என நாகை மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் அவசரகதியில் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்குவளை, சுந்தர பாண்டியம், வாழக்கரை, மீனம்ப நல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் வெகுவாக முடங்கியுள்ளன.
வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அறுவடை எந்திரங்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் கடந்த 2&ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட 186 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப் படாமல், நெல் மூட்டைகள் அனைத்தும் தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் மந்தமான வானிலை நிலவி வருகிறது.
கனமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இன்று 4&வது நாளாக கொள்முதல் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது.
மழை பாதிப்பு கருத்திற் கொண்டு அரசு கொள்முதல் நிலையங்களில் பணியை தொடங்கும் பொழுது தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முதலாவதாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் மார்ச் மாதத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் தாளடி நெற்பயிர்கள் சாய தொடங்கி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கள்ளன் என படத்திற்கு பெயரிட்டு சமுதாய மக்களை இயக்குநர் கரு.பழனியப்பன் சீண்டுகிறார் என்று கூறி அவருக்கு முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் கூறியிருப்பதாவது:-
திரைப்பட இயக்குனரும், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ள கரு.பழனியப்பன் நடிப்பில் கள்ளன் என்ற பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் 4 குற்றவாளிகள் காவல்துறையால் கைகட்டி உட்கார வைக்கப்பட்டுள்ளதாக காட்சியமைக்கப்பட்டு, அந்த படத்துக்கு தமிழகத்தின் போர்க்குடி சமூகமாகவும், பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றாகவும் விளங்குகிற கள்ளர் இன மக்களின் சாதிப்பெயரை குறிக்கும் வகையில் கள்ளன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டு சாதிக்கலவரத்தை, வன்முறையை தூண்டும் வகையில் படக்குழுவினர் உள்நோக்கத்துடன் பெயர் வைத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய தலைப்பை வைத்து பிரச்சினைகளை தூண்டி அதனால் வரும் நெகட்டிவ் பப்ளிசிட்டியால் படத்துக்கு விளம்பரம் தேடும் மலிவான செயல் திரைத்துறையில் சமீபத்தில் நடந்து வருகிறது.
இதற்காக கள்ளர் சமுதாய மக்களை சீண்டினால் அதற்கான எதிர்விளைவுகளை படக்குழுவினர் சந்திக்க நேரிடும். இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த படத்தின் தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்று இந்த படக்குழுவினரை வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.
அன்னப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகா¤ல் அமைந்துள்ளது பூர்ண புஷ்கலம்பா சமேத அன்னப்ப சுவாமி கோயில். இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.
மாசி மாத அமாவாசையையொட்டி அன்னப்ப சுவாமிக்கு பால், சந்தனம், திரவியங்கள், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனைதொடர்ந்து நாகை மாவட்ட விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல்வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.
அறுவடை செய்து உளர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும், மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மதியம் நாகை மாவட்டத்தில் லேசான மழை பெய்ய தொடங்கி உள்ளது.
வேதாரண்யம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வழியில் செண்பகராயநல்லூர்- மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை அங்கு வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அங்கு சுரங்கபாதை அமைக்க பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.
இங்கு சுரங்க பாதை அமைக்கப்படாவிட்டால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அகல ரயில்பாதை திட்ட பணி முடிவடையும் நிலையில் இப்பகுதிக்கு சுரங்கபாதை அமைத்து தரவேண்டும்.
இல்லையென்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வேதாரண்யம் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் விரைவில் நடத்த உள்ளோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
நாகையில் மருத்துவர்கள் அனுமதியின்றி விற்ற கருக்கலைப்பு மாத்திரைகளை சுகாதார துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாகப்பட்டினம் புத்தூரில் உள்ள கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்து வாங்குவது போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, ரூ.390 மதிப்புள்ள கருக் கலைப்பு மாத்திரைகளை ரூ-.2500&க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார்.
அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்தக உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மருந்து வாங்குவது போல சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்டி அருகே வேப்பமரத்தில் பொங்கி வடியும் பாலை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.
இவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் போன்ற திரவம் நுரையுடன் பொங்கி வழிந்து வருகிறது. இது இனிப்புச்சுவையுடன் உள்ளது.
இதனை கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி முதியவர்கள் கூறும் போது, 50 ஆண்டுகளுக்கு மேலான மரங்களில் பால் போன்ற திரவம் எப்போதாவது வடியும்.
ஆனால், 2 ஆண்டுகளே ஆன சிறிய மரத்தில் பால் வடிவது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.
கரியாப்பட்டினம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் தீயில் கருகி 4 ஆடுகள் பலியாகின.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே உள்ள மருதூர் வடக்கு கிராமம் குட்டியாபிள்ளைக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். மாற்றுத் திறனாளியான இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கிராமத்தில் உள்ள இவரது கூரை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 4 ஆட்டு கிடா தீயில் கருகி பலியானது.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த வைக்கோல் போரில் பிடித்து முழுவதும் எரிந்த நிலையில் இரண்டு மாடுகள் தீக்காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து வந்த வாய்மேடு தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட வருவாய் துறையினர் அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.
வேதாரண்யத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருப்பம்புலம் கிராமம், திரௌபதையம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது போலீசாரை கண்டதும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அங்கிருந்த கருப்பம்புலத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 35), சரவணன் (38), பாரதிகுமார் (35), அருள்முருகன் (35) ஆகிய 4 பேரை கைது செய்து சூதாட்ட களத்தில் கிடந்த ரூ.23 ஆயிரம் ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள் மற்றும் சீட்டுகளை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மேலும் தப்பியோடிய மருதூரைச் சேர்ந்த உத்திராபதி, வீரையன், கருப்பம்புலத்தைச் சேர்ந்த முத்து, தென்னம்புலத்தைச் சேர்ந்த லெனின் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை செய்து வழிப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி பசுபதி செட்டியார் தோட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம் 3 நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்து சிறப்புற்று விளங்குகிறது.
இவ்வாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கம் பூஜிக்கப்பட்டு சிவ வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வந்திருந்த 508 பெண்களுக்கு அவர்களது பூஜையுடன் ருத்ராட்சம் மற்றும் ப்ருத்வி லிங்கமும் கொடுக்கப்பட்டு அவர்களது கையால் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் முதலில் விளக்கேற்றி கணபதி பூஜை தொடங்கி உலக அமைதிக்காகவும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்மா சாந்தி அடையும் இந்திய மாணவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி இந்தியா திரும்பவும் விவசாயம் செழிக்க வேண்டியும் அப்போது ப்ருத்வி லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் பெண்கள் மனமுருக பிரார்த்தனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை அதில் கலந்து கொண்ட பெண்கள் அவர்களது கையாலேயே ஆலயத்தின் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசர்ஜனம் செய்தனர். இதில் நாகை, நாகூர், தெத்தி, பால்பண்ணைசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 508 பெண்கள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ப்ருத்வி சிவலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
நாகை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி, வேட்டைக்காரன் இருப்பு, விழுந்தமாவடி, காமேஷ்வரம், பூவைத்தேடி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன.
கஜா புயல் தாக்கத்தின் போது லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் அழிந்து போன நிலையில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களே மிஞ்சின.
புயலுக்கு பிறகு மிஞ்சிய ஒரு சில தென்னை மரங்களையும் வண்டு தாக்கி கடுமையாக பாதித்தது. தற்போது தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்கியுள்ளது. வெள்ளை நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் கருக தொடங்கி விட்டன. மேலும் தென்னை மரங்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதால் தரம் குறைந்து தென்னை ஓலைகள் விழுந்து மரமும் பட்டுப்போய் விடுகிறது. தென்னை கீற்றுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வேளாண் துறை அதிகாரிகள் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






