என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் உட்கோட்டத்தை சேர்ந்த பெண் போலீசார் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் உட்கோட்டத்தை சேர்ந்த பெண் போலீசார் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் காவல் துணை காண்காணிப்பார் முருகவேல் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கோட்டாட் சியார் துரைமுருகன், தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் வேதையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி துணைத்தலைவர் மங்களநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி வேதாரண்யம் சரகத்தை சேர்ந்த தலைஞாயிறு, வாய்மேடு, கரியாப்பட்டினம், வேதாரணியம், வேட்டைக் காரனிருப்பு மற்றும் பெண்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மலர்கொடி, சுப்ரியா, கன்னிகா, நாகலெட்சுமி ஆகியோர் தலைமையில் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி மகளிர் தின விழாவை கொண்டாடினர்.

    மேலும் மகளிரின் சிறப்புகள் பற்றி பேசினார் பின்பு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு பரிசுகள் வழங்கபட்டது.
    உக்ரைனில் இருந்து திரும்பிய வேதாரண்யம் மாணவர் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வந்துள்ளேன் என பேட்டியளித்துள்ளார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மகன் அகத்தியன். இவர்  உக்ரைன் நாட்டு அதிபர் மாளிகையில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள கார்க்யூ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.பிஎஸ் பட்டப் படிப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அதிபர் மாளிகை அருகே உள்ள  பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எங்கும் செல்லமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
     
    இந்நிலையில், மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால், உக்ரைனில் இருந்து அழைத்து வர பட்ட அகத்தியன் புதுதில்லி அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சென்னை வழியாக இன்று சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.

    இது குறித்து மாணவர் அகத்தியன் கூறும்போது:-

    மிகப் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி ஊர் திரும்பியுள்ளேன். நான் உயிருடன் திரும்பியதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைன் நாட்டில் இருந்து ஊர் திரும்ப 5 நாட்கள் பதுங்கு குழியில் ஒரு வேளை உணவருந்தினேன்.  ரயிலின் கழிவறையில் 26 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தேன்.
     
    என்னை போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டும். 

    எனது கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் உக்ரையின் பல்கலைக் கழகத்தில் உள்ளது. தற்போது என்னை போன்ற மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் உக்ரைனில் படித்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
     
    வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் உதயம் முருகையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மாணவர் அகத்தியனை பார்த்து நலம் விசாரித்தனர். 

    அகத்தியன் அண்ணன் பாலாஜி சீனாவில் மருத்துவம் படிப்பதற்காக சென்று இரண்டு ஆண்டுகள் படித்த கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்பினார். 

    மீண்டும் படிப்பைத் தொடர சீனா அரசு விசா கொடுக்க மறுப்பதால் அவரது படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகி உள்ளது.

    ஒரே வீட்டில் வெளிநாட்டில் இரண்டு மகனை மருத்துவம் படிப்பிற்காக அனுப்பிய நிலையில் இரண்டு மகன்களும்  படிப்பை தொடரமுடியாமல் சொந்த ஊர் திரும்பி இருப்பது பெற்றோரிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    துப்பாக்கிச்சூட்டில் பலியான ராணுவ வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு 
    இடையே நடைபெற்ற துப்பாக்கி சூடு மோதலில் நாகை மாவட்டம் கீழையூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ராணுவ வீரர் ஞானசேகரன் (வயது 45) சம்பவ இடத்திலேயே பலியானார். 

    தகவலறிந்த மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கதறி அழுதனர். 

    ஞானசேகரன் உடலை உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    இச்சம்பவத்தால்  அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    ஆறுகாட்டுதுறையில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரமன்ற தலைவராக கடந்த 4&ந் தேதி தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி பதவி ஏற்றார். பதவி ஏற்ற இரண்டு நாளில் மீனவ கிராம மக்களின் கோரிக்கை ஏற்று முதல் பணியாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழிகாட்டுதலுடன் போக்குவரத்து துறை அமைச்சருடன் பேசி 15 ஆண்டுகளாக அரசு பஸ் செல்லாத ஆறுகாட்டுதுறை கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கபட்டது.

    இந்த புதிய பஸ்சை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட தி.மு.க செயலாளருமான கவுதமன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தினமும் இந்த பஸ் 3 முறை இயக்கபடும் என்றும், பின்னர் 6 முறை இயக்கபடும் எனவும் போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இதனை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அன்பரசு, நகரமன்ற உறுப்பினர்கள் இமயா, இளவரசி, அன்னலெட்சுமி, பாலசுப்பிரமணியன், அம்சவள்ளி, ராஜீ, அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் மகேந்திரகுமார், வேதாரண்யம் அரசுபோக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ்குமார், ஆறுகாட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள் முருகன், கார்த்தி, மயில்வாகன் கரிகாலன், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் ஹரிகிருஷ்ணமூர்த்தி, செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    புஷ்பவனத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 50&க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து  விலகி தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான கவுதமன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், திருமருகல் ஒன்றிய தி.மு.க செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளரும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளருமான லோகநாதன், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மீனவர் அணி சேகர், ரமேஷ் குமார் மற்றும் வார்டு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    வீட்டிற்கு செல்ல நடைபாதை வேண்டி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் தாலுக்கா, தேவூர் கிராமத்தில் சுரேஷ்&அமுதா தம்பதியினர் தனது 2 குழந்தைகளோடு வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதனிடையே, அப்பகுதியில் வசிக்கும் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அவருடைய உறவினர்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தங்களுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் சுரேஷ் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையம், அறநிலையத் துறை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்து வந்துள்ளனர்.

    ஆனால், புகார்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செந்தமிழ்செல்வி, நேற்று காலை அதே பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை ஆக்கிரமித்து கொட்டகை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
     
    தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து, அக்குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.  பின்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்ட கலெக்டர், சம்மந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    வேதாரண்யத்தில் பசுமாடு திடீரென இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் குமார் (51). இவர் கடற்கரையில் சாலையில் உள்ள தனது கொட்டகையில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். கடந்த 4ம் தேதி இரவு அங்கு பசுமாட்டை கட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

    நேற்று அதிகாலை மாட்டுக் கொட்டகைக்கு சென்று பார்த்த போது மாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.
    இது குறித்து குமார் வேதாரண்யம் போலீசில் புகா£¢ செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். 

    இறந்த மாட்டின் விலை ரூ.40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
    வேதாரண்யத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்ட முதலியார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (53) என்பவர் இந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

    இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினாராம். இது பற்றி சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் போல் வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி வழக்கு பதிவு செய்து அசோகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்.
    வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன். இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது.
    பிரியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் மனமுடைந்த பிரியா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். 

    இதில் பலத்த தீக்காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். புகாரின் பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் நாகை ஆர்.டி.ஓ தனி விசாரணை செய்து வருகிறார்.

    வேதாரண்யத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்படவுள்ள இடத்தில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு நடத்தினார்.
    வேதாரண்யம்:

    தமிழக அரசின் சார்பில் வேதாரண்யத்தில் ஒரு கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமையவுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இடத்தை ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன் ஆய்வு செய்தார்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை அனைத்து அடிப்படை வசதிகளுடன் நகர பகுதியில் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

    இத்தகவல் அறிந்த தமிழக முதல்வர் வேதாரண்யம் நகர பகுதியில் மூன்றடுக்கு கொண்ட கட்டிடத்தில் தங்கும் விடுதி, படிப்பகம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டுமான பணிக்கு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    இவ்விடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் மாநில திமுக விவசாய அணி செயலாளருமான மதிவாணன் ஆய்வு செய்தார். ஆய்வுவின் போது வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, வார்டு உறுப்பினர் ரம்யா, வழக்கறிஞர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து அரசின் ஆதிதிராவிட மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ஆதிதிராவிட மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.
    வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் இன்று 3-&வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

    கடல் சீற்றமாக இருப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து வீட்டில் முடங்கி உள்ளனர்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம் நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலம். இங்கு அகத்திய மாமுனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். இங்கு வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

    இங்கு ருத்ரா அபிஷேகத்தை யொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு திரவியங்கள், பழவகைகள் வைத்தும், குடங்கள் வைத்தும் வேதமந்திரங்கள் ஓதப்பட்டது. 

    பின்பு குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    ×