என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
தீயில் கருகி 4 ஆடுகள் பலி
கரியாப்பட்டினம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் தீயில் கருகி 4 ஆடுகள் பலியாகின.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே உள்ள மருதூர் வடக்கு கிராமம் குட்டியாபிள்ளைக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். மாற்றுத் திறனாளியான இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கிராமத்தில் உள்ள இவரது கூரை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 4 ஆட்டு கிடா தீயில் கருகி பலியானது.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த வைக்கோல் போரில் பிடித்து முழுவதும் எரிந்த நிலையில் இரண்டு மாடுகள் தீக்காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து வந்த வாய்மேடு தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட வருவாய் துறையினர் அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.
Next Story






