என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடந்த 1008 சிவலிங்க பூஜை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை செய்து வழிப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி பசுபதி செட்டியார் தோட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம் 3 நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்து சிறப்புற்று விளங்குகிறது.
இவ்வாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கம் பூஜிக்கப்பட்டு சிவ வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வந்திருந்த 508 பெண்களுக்கு அவர்களது பூஜையுடன் ருத்ராட்சம் மற்றும் ப்ருத்வி லிங்கமும் கொடுக்கப்பட்டு அவர்களது கையால் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் முதலில் விளக்கேற்றி கணபதி பூஜை தொடங்கி உலக அமைதிக்காகவும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்மா சாந்தி அடையும் இந்திய மாணவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி இந்தியா திரும்பவும் விவசாயம் செழிக்க வேண்டியும் அப்போது ப்ருத்வி லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் பெண்கள் மனமுருக பிரார்த்தனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை அதில் கலந்து கொண்ட பெண்கள் அவர்களது கையாலேயே ஆலயத்தின் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசர்ஜனம் செய்தனர். இதில் நாகை, நாகூர், தெத்தி, பால்பண்ணைசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 508 பெண்கள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ப்ருத்வி சிவலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story






