என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
வேதாரண்யத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருப்பம்புலம் கிராமம், திரௌபதையம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது போலீசாரை கண்டதும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அங்கிருந்த கருப்பம்புலத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 35), சரவணன் (38), பாரதிகுமார் (35), அருள்முருகன் (35) ஆகிய 4 பேரை கைது செய்து சூதாட்ட களத்தில் கிடந்த ரூ.23 ஆயிரம் ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள் மற்றும் சீட்டுகளை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மேலும் தப்பியோடிய மருதூரைச் சேர்ந்த உத்திராபதி, வீரையன், கருப்பம்புலத்தைச் சேர்ந்த முத்து, தென்னம்புலத்தைச் சேர்ந்த லெனின் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
Next Story






