என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்னை மரம்
தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்குதல்
நாகை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி, வேட்டைக்காரன் இருப்பு, விழுந்தமாவடி, காமேஷ்வரம், பூவைத்தேடி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன.
கஜா புயல் தாக்கத்தின் போது லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் அழிந்து போன நிலையில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களே மிஞ்சின.
புயலுக்கு பிறகு மிஞ்சிய ஒரு சில தென்னை மரங்களையும் வண்டு தாக்கி கடுமையாக பாதித்தது. தற்போது தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்கியுள்ளது. வெள்ளை நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் கருக தொடங்கி விட்டன. மேலும் தென்னை மரங்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதால் தரம் குறைந்து தென்னை ஓலைகள் விழுந்து மரமும் பட்டுப்போய் விடுகிறது. தென்னை கீற்றுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வேளாண் துறை அதிகாரிகள் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






