என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் மருந்தகத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    X
    தனியார் மருந்தகத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    மருத்துவர்கள் அனுமதியின்றி விற்ற கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்

    நாகையில் மருத்துவர்கள் அனுமதியின்றி விற்ற கருக்கலைப்பு மாத்திரைகளை சுகாதார துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாகப்பட்டினம் புத்தூரில் உள்ள கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்து வாங்குவது போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, ரூ.390 மதிப்புள்ள கருக் கலைப்பு மாத்திரைகளை ரூ-.2500&க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார். 

    அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்தக உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மருந்து வாங்குவது போல சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×