என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே சுரங்கபாதை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செண்பகராயநல்லூரில் ரெயில் சுரங்கபாதை அமைக்கக்கோரி சாலை மறியல்
செண்பகராயநல்லூரில் ரெயில் சுரங்கபாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வழியில் செண்பக ராயநல்லூர் சனிசந்தை &மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்லவேண்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப் பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.
இதனை கண்டித்து கரியாப் பட்டினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ராஜசிம்மன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கரியாப்பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கப் படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story






