என் மலர்
நாகப்பட்டினம்
- காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும்.
- கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
நாகப்பட்டனம்:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வணிக சங்கங்கள், சேவை சங்கங்கள், லயன்ஸ் கிளப், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம், நாகை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம், நாகை இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம், மீனவ கிராம பஞ்சாயத்தாரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உடனடியாக காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கோஷங்கள் எழுப்பினர்.
- தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
- தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சயன் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் கதிரவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி, 3 லட்சம் பணம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20 ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 39 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி டி.வி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்நிலையில் கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி, நாகை செக்கடி தெருவை சேர்ந்த கொறசேகர், நாகை சிவன் தெற்கு வீதியை சேர்ந்த தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்ட 4பேர் கொண்ட போலீசார் அதிரடியாக கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகப்பன்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தொட ர்புடைய கொறசேகர் என்பவர் மீது அண்மை யில் குண்டாஸ் சட்டம் பாய்ந்திருப்பதும் குறிப்பி டத்தக்கது.
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
- மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.மேகநாதன், எஸ்.துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் கண்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஜி.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் ப.அருள்விழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.
- நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகள் ஷகிலாவிற்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த குமார் -விஜயா இவர்களின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தி, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கிய பெண்ணின் குடும்பத்தாரை ஏமாற்றி வரும் சரவணன் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் பெண் சகிலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நிச்சயம் முடிந்த பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் தலைமறைவான நபரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.
- அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலக வளாகத்தில் 76 வகையான மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது
விழாவில் கோட்டாட்சியர்பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் வேதையன் வரவேற்றார்.விழாவில் அலுவலக வளாகத்தில் வல்லாரை, கருசலங்கண்ணி சித்தரத்தை, மலைவேம்பு, மின்னல் கீரை, நித்திய கல்யாணிமருதோன்றி உட்பட 76 வகையான மூலிகை செடிகளையும், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நட்டும், மூலிகைகளின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகளையும் வழங்கினார்
பின்பு 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற நகல், குடும்ப அட்டையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கமலா அன்பழகன், ஊராட்சி ஒன்றியஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரமன்றதலைவர் புகழேந்தி, மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார்மூ லிகை பண்ணையாளர் புஷ்பவனம்ஹரிகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.விழா முடிவில்துணை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.
வழக்கமாக தாசில்தார் அலுவலகங்களில் பெயரளவிற்கு புங்கை உள்பட ஒரு சில மரங்கள் நடப்படுவது வழக்கம் மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது சிறு செடிகளை நடுவார்கள் அதன் பிறகு அதையாரும் கண்டுகொள்ளமாட்டர்கள் மீண்டும் அதிகாரிகள் வரும்போது அதே இடத்தில் மீண்டும் மரம் நடும் விழா நடைபெறுவது அனைத்து அலுவலகத்திலும் நடைபெறுவது வழக்கம்
ஆனால் அதற்கு நேர்மாறாக இவ் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்
இந்த மூலிகை தோட்டத்தை அலுவலகம் வரும் பொதுமக்கள் பார்த்து வியந்து பாராட்டி செல்கின்றனர் தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.
மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் மூலிகை செடியின் பயன்பாட்டை அறிந்து அதனை தங்களின் வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செயல்பட துணை வட்டாட்சியரின் செயலை ஒவ்வொரு அலுவலகத்தில் பின்பற்றினால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சென்றால்நோயற்ற வாழ்வை நோக்கிச் .தமிழகம்செல்லும் என்பதில் ஆச்சரியமில்லை.
- கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
- வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுதொகையும்,சுழற்கோப்பையும் வழங்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமழை மா.சு.மணிநினைவு கபாடி கழகம் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடக்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
போட்டிகளில் முதல் பரிசு ரூ. 30,099 நாகப்பட்டினம் அணியினரும், இரண்டாவது பரிசு ரூ. 25,099 ஆறுகாட்டுத்துறை அணியினரும், மூன்றாவது பரிசு ரூ. 20,099 வடமழை மா.சு.மணி நினைவு கபாடி கழகத்தினரும், நான்காம் பரிசு ரூ. 15,099 அக்கரைப்பேட்டை அணியிணரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையோடு சுழற்கோப்பையும் வழங்கபட்டது. விழாவின் முடிவில் கவி இளவரசன் நன்றி கூறினார்.
- ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ஒரு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும்.இந்தியாவில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி எழுதுவதை நோக்கமாக கொண்டு ஒரே அணியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
- கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.
நாகப்பட்டினம்:
திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டார–வாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜ–புரம், ஆலத்தூர், திருச்–செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் வாயிலாக கிராமங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பி டப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
- ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூரில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ள ஜனாதிபதி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். 'அக்னிபாத்' திட்டம் மோசடி திட்டம்.
இந்த திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும். அதனால்தான் இந்த திட்டத்தை பா.ஜ.க. கூட்டணியை தவிர மற்ற அனைவரும் எதிர்க்கின்றனர்.
ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க.வை பா.ஜ.க. தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி அதை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஒரு மாற்று அணி வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே உஷா ராணியின் கால் சிக்கிக்கொண்டது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து எந்திரத்தின் உதவியுடன் உஷா ராணியின் காலை வெளியே எடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போது ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படும்.
ஆஸ்பத்திரிக்குள் செல்ல 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நுழைவு வாயில்களில் கால்நடைகள் நுழையாதபடி அகழி அமைத்து அதன் நடுவே இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காரைக்காலை சேர்ந்த உஷா ராணி என்பவர் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே உஷா ராணியின் கால் சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் அவரால் காலை எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து எந்திரத்தின் உதவியுடன் உஷா ராணியின் காலை வெளியே எடுத்தனர். இதில் காயமடைந்த உஷாராணி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது.
- பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரணயம்அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சி யில் பெரியகோவில்பத்து கண்எறிந்தான்கட்டளை பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கபட்டு வந்தது. ஆனால் இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களாக முற்றிலும் வரவில்லை
இதனால் பொதுமக்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர் .பல முறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிதண்ணீர் வழங்க வில்லை இதை கண்டித்தும் குடிதண்ணீர் கேட்டும்பெண்கள் காலிகு டங்களுடன் சாலைமறியல் ஈடுபட்டனர்.
சாலைமறியலில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏரளமான பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீர் கேட்டு முழக்கமிட்டனர்.கடந்த ஒரு மணி நேரமாக குடிநீர் அதிகாரிகள் வராத தால் போலீசார் சமாதானம் செய்தும் ஏற்காமல்சாலை யில் அமர்ந்து தொட ர்ந்து மறியலில்ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை யைமறியலால் வேதார ண்யத்தில் இருந்து பிராந்தியங்கரை வழியாக திருத்துரைப்பூண்டு செல்லும் ஒரே ஒரு பேரு ந்தை மறியல் செய்து சாலையில் அமர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடு பட்டு வருகின்றனர்.






