search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

    • 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    • கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டார–வாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜ–புரம், ஆலத்தூர், திருச்–செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் வாயிலாக கிராமங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பி டப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×