என் மலர்
மயிலாடுதுறை
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மயிலாடுதுறையில் 73.38 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
மயிலாடுதுறை- 70.17%
பூம்புகார்- 75.39%
சீர்காழி - 74.60%
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அ.தி.மு.க. நிர்வாகி. தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவரான இவரது வீட்டுக்கு நேற்று இரவு திடீரென வருமான வரித்துறையினர் வந்தனர். உங்கள் வீட்டை சோதனை செய்ய போகிறோம் என கூறி கதவை அடைத்தனர்.
இதையடுத்து வீட்டில் பல்வேறு அறைகளில் சோதனை செய்தனர். இதில் சில ஆவணங்கள் மற்றும் பார்சல்களை கைப்பற்றினர் பின்னர் அங்கிருந்து சென்றனர்.
இதேப்போல் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி அருணாசலம் மற்றும் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும் செம்பனார்கோவில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான ஜனார்த்தனம் ஆகிய 2 பேர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதிலும் சில ஆவணங்கள், பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் 3 வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் என்ன இருந்தது என்பது குறித்து தகவல் இல்லை.
தொடர்ந்து அடுத்தடுத்து பூம்புகார் தொகுதியை சேர்ந்த 3 அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






