search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குத்தாலம் அருகே பாம்பு கடித்து பெண் பலி

    குத்தாலம் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வாளவராயன் குப்பம் மேல தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் கடந்த 7-ந் தேதி மாலை தனது வயலுக்கு சென்ற போது பாம்பு கடித்து விட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×