என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
குளிக்கும்போது மாணவியை படம் பிடித்தவர் உள்பட 2 பேர் கைது
மயிலாடுதுறையில் குளிக்கும்போது மாணவியை படம் பிடித்தவர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் வினோத்கண்ணா, செல்போன் மூலம் குளிக்கும்போது படம் எடுத்துள்ளார். இதனை கண்ட அந்த மாணவியின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினோத் கண்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
வினோத்கண்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவி மயிலாடுதுறை தருமபுரம் சாலை ஆலமரத்தடியை சேர்ந்த நடராஜன் மகன் நவீன் என்பவருடன் நெருங்கி பழகுவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து வினோத்கண்ணா அந்த மாணவியை குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் (வயது 23), வினோத் கண்ணா (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story