என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.
    X
    நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.

    வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வு

    மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார் மற்றும் மயிலாடுதுறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட கலெக்டருமான பிரவீன் நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர், தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள சி.சி.டி.வி. மூலம் திரையில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டார். மேலும் வேட்பாளர்களுடைய முகவர்களின் அடையாள அட்டையை வாங்கி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் அனுமதி பாஸ் பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு ஷிப்ட் கணக்கில் ஒருவர் மட்டுமே இங்கு தங்க முடியும் என்றார்.

    தொடர்ந்து சீர்காழி, பூம்புகார் ஆகிய பகுதிகளின் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறைகளை கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் பாலாஜி, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×