என் மலர்tooltip icon

    மதுரை

    • தீ விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
    • 6 பேர் விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடந்த தீ விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். இந்த விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இதில் 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

    காயமடைந்த 20 பேரில் 2 பேர் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    • ரெயிலில் ரெயில்வே விதியை மீறி சுற்றுலா பயணிகள் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை எடுத்து வந்தது எப்படி?
    • பொதுவாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுற்றுலா ரெயிலில் 2 பெட்டிகள் மதுரை ரெயில் நிலையத்துக்கு முன்னதாகவே 1 கிலோ மீட்டர் தொலைவில் பிரித்து தனி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிக களைப்புடன் அயர்ந்து தூங்கினர். சிலர் காலை கடன்களை முடிப்பதற்காக ரெயில் பெட்டிகளில் இருந்து இறங்கி நின்றனர்.

    இந்த நிலையில் சிலர் டீ, காபி கேட்டதால் அடுப்புகள் பற்ற வைக்கப்பட்டன. இந்த நேரத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த இன்னொரு சிலிண்டரும் வெடித்துச் சிதறியதால் ரெயில் பெட்டி முழுவதும் தீயில் கருகி சாம்பலானது.

    பயணம் செய்த சிலர் அலறியடித்து உயிர் தப்பிய நிலையில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தென்னக ரெயில்வே முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க மளிகை பொருட்கள், சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வருவது வழக்கம். ஆனால் ரெயில்வே விதிப்படி ரெயில் பெட்டிக்குள் தீப்பற்றக்கூடிய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் பயணிகள் ஈடுபடக்கூடாது என்பது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக இந்த ரெயில் பெட்டிகளில் தான் இவர்கள் சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்படியே மதுரையிலும் சமையல் செய்ய தீப்பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆனால் இந்த ரெயிலில் ரெயில்வே விதியை மீறி சுற்றுலா பயணிகள் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை எடுத்து வந்தது எப்படி?

    இதனை ரெயில்வே அதிகாரிகள் கண்காணிக்க தவறி விட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக ரெயிலில் பயணிகள் ஏறும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் எடுத்து வருகிறார்களா? என்பதை ரெயில்வே ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த சுற்றுலா பயணிகளை சம்பந்தப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கண்காணிக்க தவறிவிட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் வெடித்துச்சிதறியது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சிலிண்டர்கள் எங்கு வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் பொது இடங்களிலோ, எளிதில் தீப்பற்றக் கூடிய பகுதிகளிலோ இந்த சிலிண்டர்களை வைத்து அடுப்புகள் பற்ற வைக்கக்கூடாது. ரெயில் பெட்டிக்குள் எவ்வித அனுமதியும் இன்றி ரெயில்வே விதிகளை மீறி கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்தது தான் இந்த தீ விபத்துக்கான முழு காரணம் என்றும் சுற்றுலா பயணிகளின் விதிமுறை மீறல் காரணமாக இந்த கொடூர தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரெயில் பெட்டியில் தீ விபத்து நடந்த சம்பவம் ரெயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு தள்ளி நடைபெற்றதால் மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல ரெயில்கள் தப்பின. பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது. 

    • சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக நின்றிருந்த அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது.
    • பஸ்சில் பயணம் செய்த ஆனந்த், பிரகாஷ், தனுசு, ராஜேஷ், ராஜா, அந்தோணி உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    தூத்துக்குடி மாவட்டம் நான்குமாவடியில் ஜெபக்கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக திருச்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் நான்குமாவடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் இருந்து நேற்று இரவு நான்குமாவடிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இன்று அதிகாலை அருப்புக்கோட்டை பைபாஸ் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பஸ்சில் பழுது ஏற்பட்டது. இதனால் பஸ்சை டிரைவர் கிருஷ்ணன் சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

    அப்போது அதே சாலையில் சென்னை குன்றத்தூரில் இருந்து தனியார் விளம்பர கம்பெனிக்கு சொந்தமான சரக்கு லாரி விளம்பர பதாகை கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.

    அந்த சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக நின்றிருந்த அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதில் சரக்கு வாகனத்தில் கிளீனராக வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜ கரு இஸ்லாம் (வயது 19) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    பஸ்சில் பயணம் செய்த சிவகங்கையைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 49) படுகாயமடைந்தார். அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த ஆனந்த், பிரகாஷ், தனுசு, ராஜேஷ், ராஜா, அந்தோணி உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்தனர். அவர்கள் காயப்பட்டவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அரசு பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் பெட்டி தனியாக நிறுத்து வைத்திருந்த போது தீ விபத்து
    • சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

    மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது, சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
    • சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

    இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகிறது.

    அதன்படி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17-ந்தேதி புறப்பட்ட சுற்றுலா ரெயிலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். வட மாநிலத்தவர்கள் ரெயிலில் பயணம் மேற்கொள்ளும்போது விதிகளை மீறி ரெயில் பெட்டியிலேயே கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதன்படி இந்த சுற்றுலா ரெயிலிலும் பயணிகள் ரெயிலுக்குள் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தடைந்த ரெயில் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றடைந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். பின்னர் இரவு ரெயில் மூலம் அவர்கள் மதுரைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை சுற்றுலா ரெயில் மதுரை வந்தடைந்தது. இணைப்பு ரெயில் வந்தபிறகு ராமேசுவரத்துக்கு சுற்றுலா ரெயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குள் சுற்றுலா பயணிகள் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    இன்று காலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை வழியாக ரெயில்கள் வரும் என்பதால் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த சில பயணிகள் ரெயிலிலேயே தூங்கினர்.

    மற்றவர்கள் இறங்கி ரெயில் நிலையத்திற்குள் வந்து பிளாட்பாரத்தில் ஓய்வெடுத்தனர். இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் ரெயிலில் இருந்த சிலர் டீ தயாரிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்ததாக தெரிகிறது.

    அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தீ ரெயில் பெட்டியில் பரவ தொடங்கியது. கரும்புகையால் ரெயிலுக்குள் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கினர். இதற்கிடையில் ரெயில் பெட்டியில் தீ மளமள வென பரவ கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது. மேலும் அருகில் இருந்த பெட்டிக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் திடீர்நகர், தல்லா குளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ரெயில் பெட்டியில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில் கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரெயில்வே, மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.

    மேலும் தீயணைப்பு வீரர்கள் ரெயில் பெட்டியின் அவசர வழியை உடைத்து உள்ளே சென்று சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாகினார். அவர்களது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்களின் விபரம் உடனடியாக முழுமையாக தெரியவில்லை. தீ விபத்து நடந்தபோது 20-க்கும் மேற்பட்டோர் ரெயில் பெட்டியில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் 9  பேர் இறந்த நிலையில் மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.

    இந்த தீ விபத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதமானது. மற்றொரு பெட்டி பாதி எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர். அதன்பின் ரெயில் பெட்டியில் சிக்கியவர்களை காயங்களுடன் மீட்டு ரெயில்வே மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை ரெயில்வே கோட்ட மேலா ளர் அனந்த் பத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி னர்.

    தீ விபத்தில் உத்தரபிர தேசம் லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த சப்தமன்சிங் (வயது 65), மிதிலேஸ்வரி (64) ஆகிய 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றவர்களின் விபரம் தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலுவலக நேரங்களில் காளவாசல், அரசரடி சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
    • இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரின் மிக முக்கிய சிக்னல்களில் ஒன்று காளவாசல். மதுரையின் நான்கு புறங்களிலும் இருந்தும் வரும் வாகனங்களின் முக்கிய சந்திப்பாக காளவாசல் சந்திப்பு உள்ளது.

    பைபாஸ் ரோட்டில் அமைந்திருப்பதால் எந்த நேரத்திலும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக மேற்கு பகுதிகளில் இருந்தும், பெங்களூர் 4 வழிச்சாலை யில் இருந்தும், அச்சம்பத்து, துவரிமான் வழியாக வரும் வாகனங்கள் காளவாசல் சந்திப்பை கடந்தே நகருக் குள் செல்ல வேண்டும்.

    மேலும் கேரளா, கம்பம், தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு காளவாசல் சிக்னலை கடந்தே செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் முடக்குச்சாலையில் இருந்து காளவாசல் சிக்னல் வரை பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் சிக்னலின் அருகிலேயே ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் காளவாசல் சிக்னலில் கூட்டல் குறியீடு வடிவில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு பைபாஸ் ரோட்டில் மட்டும் சிக்னலை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பாலத்தை பயன்படுத்தும் வாகனங்களில் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் குறைவாகவே உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். சிக்னல் இருந்தபோதும் பாலத்தின் கீழ் பகுதியில் செல்வதையே வாகன ஓட்டிகள் விரும்பினர்.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முடக்குச்சாலையில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. இதை யடுத்து காளவாசல் சிக்னலில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு பொன்மேனி பைபாஸ்ரோட்டில் இருந்து குரு தியேட்டர் வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகும் பல வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருந்து பாதசாரிகள் செல்லும் பாதையில் சென்று ஆரப்பாளையம் ரோட்டிற்கு சென்று வருகின்றனர். இதனால் போக்கு வரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    மேலும் மேற்கு பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் காளவாசல் சிக்னலில் இருந்து இடதுபுறம் திரும்பி ஆரப்பாளையம்-செல்லூர் பாலம் வழியாகவும், மத்திய சிறைச்சாலை வழியாகவும் அரசு ஆஸ்பத்திரிக்கு எளி தாக செல்ல முடியும். ஆனால் அரசரடி சிக்னல் பகுதி குறுகியதாக இருப்பதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஆம்புலன்சுகள் சிக்னலை கடப்பது பெரும் சிரமமாக உள்ளது. சிக்னல் அருகே பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தை அப்புறப்படுத்தி அந்த பகுதியில் ஏற்படும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    மேலும் போக்குவரத்து போலீசார் சிக்னலை மாற்றியோ அல்லது வாகனங்களை ஒழுங்குப்படுத்தியோ ஆம்புலன்சுகளை கடந்து செல்ல வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் காளவாசலில் இருந்து மேற்கு பகுதி நோக்கி செல்லும் வாகனங்களை பொருத்தவரை காளவாசல் பஸ் நிறுத்தத்தை வெளியூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் பயன்படுத்துகின்றன.

    ஆனால் இங்கு இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையை அகற்றி விட்டதால் பஸ்களை எங்கு நிறுத்துவது என்பதில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது. இதனால் சிக்னல் வளைவில் (தேனி ரோட்டில்) அரசு மற்றும் தனியார் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை அங்கு போக்குவரத்தை கண்காணித்து வரும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.

    டிரைவர்கள் ஒவ்வொரு இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் எங்கு நின்று பஸ் ஏறுவது என தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிறுத்தும் இடங்களை மறித்து ஷேர்ஆட்டோக்கள் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காளவாசல் சிக்னலில் தனி போலீஸ் கண்காணிப்பு அறை இருந்தபோதும் 4 புறங்களிலும் வாகனங்களை கண்காணித்து ஒழுங்குப் படுத்தவேண்டி உள்ளதால் அவர்களும் சிரமத்திற் குள்ளாகின்றனர்.

    தொடர்ச்சியாக மைக்கில் அறிவிப்பு செய்தும் சிக்னல் அருகில் நின்றும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் நிலையிலும் பலர் விதிகளை மீறி சென்று போக்குவரத்து இடையூறு செய்கின்றனர்.

    தற்போது நடந்துவரும் பாலப்பணிகள் முடிவடையும் பட்சத்தில் அந்த சாலையில் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

    எனவே காளவாசல் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.   

    • முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 4,450 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி களில் காலை சிற்றுண்டி வழங்கும் விரிவாக்க திட்டம் இன்று தொடங்கப் பட்டது.

    மதுரை மாவட்டத்தில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அவர் மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களு டன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரரா கவன், துணை சேர்மன் கார்த்திக் ராஜா மற்றும் சோமசுந்தர பாண்டியன், பாலசுப்பிரமணியன், ஆசைக்கண்ணன், சிறைச்செல்வன், ஊராட்சித்தலைவர்கள் நியாயவதி மலை வீரன் சுரேந்திரன் சக்தி மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    இந்த காலை உணவு திட்டம் மதுரை மாவட்டத் தில் 420 கிராம ஊராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 949 அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கள்ளர் சீர் அமைப்பு பள்ளி, ஆதி திராவிடர் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையி லான என மொத்தம் 52298 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி மதுரை யாதவா கல்லூரி எதிர்ப் புறம் உள்ள சிறுதூர் கோபாலகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டியை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி திருமலா, பகுதி செயலாளர் சசிகுமார், திருப்பாலை ராமமூர்த்தி, லட்சுமணன், பால்செல்வி பால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி பள்ளி

    இதேபோல் மதுரை முத்தப்பட்டியில் உள்ள மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த் முன்னிலை வகித்தார். பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சியில் காலை உணவு திட்டம் 73 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 4,450 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    இந்த திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உப்புமா வகைகள், கிச்சடி வகைகள், பொங்கல் வகைகள், காய்கறி கிச்சடி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்படும்.

    • ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

    அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாபட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கோவி லாங்குளம் ஊராட்சிக் குட்பட்ட கருகப்பிள்ளை அரசு பள்ளியில் தலைவர் ஜெயந்தி முத்துராமன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தை களுக்கு உணவு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, ராமர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன் தொடங்கி வைத்தார்.இதில் துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உஷாதேவி, ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்காக தன்னார்வலர்களாக வந்த மூன்று பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    ஆ.கொக்குளம் ஊராட்சியில் தலைவர் நர்மதா கபி.காசிமாயன், கருமாத்தூர் ஊராட்சியில் தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், கிண்ணிமங்கலம் ஊராட்சியில் தலைவர் மயில்முருகன், கொ.புளியங்குளம் ஊராட்சியில் தலைவர் சிவகாமி தர்மர், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தி, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைவர் ஜெயபிரபு, கொடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் உமாதேவி திருக்குமரன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.

    கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.

    இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    • மதுரையில் 27-ந்தேதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாடு குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் மேலும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சி யுடன் பங்கேற்று சிறப்பிப் பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடக்கிறது.

    மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் செயலாளர், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்தனர்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செய லாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செய லாளர் பாலமுருகன், ராஜ்குமார், நாகரத்தினம், மாணவரணி பகுதி செய லாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திரு–மங் கலம் அருகே ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ–ரியில் ஓட்டல் மேலாண்மை, பி.பி.ஏ., ஏவியேசன், ஆஸ்பி–டல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. போன்ற பட்ட படிப்பு–களில் கேரள மாநிலம் மற் றும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

    வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனை–யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் ஓணம் பண் டிகை கல்லூரி வளாகத் தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங் கேற்ற அத்தப்பூ கோலப் போட்டி மற்றும் விளை–யாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. பின்னர் கேரள மாணவிகள் பங்கேற்ற திரு–வாதிரகாளி கேரள நடனம் மற்றும் பரத நாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், பண்டிகை கொண்டாட்டங்கள் பல் வேறு மக்களின் கலாச்சா–ரம் மற்றும் பண்பாட்டை உணரச் செய்யும் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்திய திரு–நாட்டில் ஒவ்வொரு பகுதி–களிலும் வெவ்வேறு வித–மான கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என் றும்,

    கேரள மாநிலத்தில் வசிக் கும் அனைத்து மக்களும் தங்களுடைய மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றாக கொண்டாட கூடிய பண்டி–கையாக ஓணம் பண்டிகை அமைந்துள்ளது என்றார்.

    பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக–ளுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாக மேலாண்மை துறை–யைச் சார்ந்த டாக்டர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், மனிதவள நிர்வாகி முகமது பாசில் உள்ளிட்டோரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரி–வித்து பேசினர்.

    விளையாட்டுப் போட்டி–களை பேராசிரியர்கள் வினிஷ்மா, பிரசில்லா, ஜெயஸ்ரீ, மேகலா, ஆர்த்தி, முத்துக்குமார், சுபாஷ் ஆகி–யோரும், கலை நிகழ்ச்சிகளை பேராசிரியர்கள் அன்புச் செல்வி, சீமாட்டி, மணிமே–கலை ஆகியோரும் அத்தப்பூ கோலப் போட்டிகளை பேராசிரியர்கள் நளாயினி, சுபஸ்ரீ ஆகியோரும், பேராசி–ரியர்கள் ராஜ்குமார், கார்த் திகா மற்றும் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. மாணவி திவ்யநாயகி ஆகியோர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கி–ணைப்பும் செய்தனர்.

    ஏவியேசன் துறை தலைவி டாக்டர் கார்த்திகா, பேராசிரியர்கள் சசிகலா மற்றும் ஜிஞ்சு மரியம் இமானுவேல் ஆகியோர் விருந்தினர்களை கவுரவித் தனர். இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்ட பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×