என் மலர்tooltip icon

    மதுரை

    • வேலைக்கு சென்று திரும்பிய சக்திமோகனும், கார்த்திக்கணேசனும் மது அருந்தி விட்டு இரவு ஒரு மணிளவில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
    • நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன் குறிச்சி கிராமம் ஆவுடையார்புரத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் சக்திமோகன் (வயது 48). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் ஆகும்.

    சக்திமோகனுக்கு அவரது அக்காள் மகளை திருமணம் செய்து வைத்து ஒரு மகன் உள்ள நிலையில் சக்தி மோகன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி கணவரை பிரிந்து குழந்தையுடன் மதுரையில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் தனியாக இருந்த சக்திமோகன் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இதேபோல் தேவன் குறிச்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் மகன் கார்த்திக் கணேஷ் (29) என்பவரும் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் இருவரும் நண்பர்களாகி ஒன்றாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

    இதற்கிடையே இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திவிட்டு அடிக்கடி போதையில் சண்டையிட்டு கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை சக்திமோகன் அவரது உறவினரான கருணாகரன் என்பவரிடம் இருவரும் மதுரை திருநகர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்று திரும்பிய சக்திமோகனும், கார்த்திக்கணேசனும் மது அருந்தி விட்டு இரவு ஒரு மணிளவில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார்த்திக் கணேஷ், தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி சக்திமோகனிடம் கேட்டுள்ளார். ஆனால் சக்தி மோகன் பணம் தர மறுத்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் கணேஷ், சக்திமோகனின் முகத்திலும் நெஞ்சிலும் மாறி மாறி கைகளால் குத்தியுள்ளார். இதில் மூர்ச்சையாகி சக்திமோகன் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட கார்த்திக்கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சக்திமோகனின் உறவினர் கருணாகனுக்கு தெரிவித்தனர்.

    அவர் வந்து பார்த்தபோது சக்திமோகன் இறந்து கிடந்தார். இதையடுத்து கருணாகரன் டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விடிரைந்து வந்த போலீசார், சக்திமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக் கணேசை தேடி வருகின்றனர்.

    கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மது அருந்தி விட்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் தடய அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடய அறிவியல் துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற "பாரன்சிக் பீயூசன்-2023" என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரது ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக அரசு மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் ஹசன் சாதலி கலந்து கொண்டு பேசுகையில், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களும் தொழில்நுட்ப ரீதியாக பெருகிவிட்டபடியால், தடய அறிவியல் துறையினரின் தேவை அதிகமாக உள்ளது.

    சைபர் கிரைம் போன்ற குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதற்கு தடைய அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். ஆகவே மாணவர்கள் தடய அறிவியலின் அனைத்து துறையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.

    மதுரை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசி ரியர் டாக்டர் சதாசிவம், தியாகராஜர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் டாக்டர் சாய் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த வர்களுக்கும், போஸ்டர்கள் மூலம் சிறந்த விளக்கத்தினை அளித்த மாணவ-மாணவிக ளுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.

    நிகழ்ச்சியை 3-ம் ஆண்டு மாணவி வர்ஷா மற்றும் அஸ்மா பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நிவேதிதா மனோகரன், ஜிஞ்சு மரியம் இமானுவேல், வினிஸ்மா, பிரிசில்லா ஜோஸ்லின் டேனியல், ஜெயஸ்ரீ, கங்கா பிரசாத், அலி பாத்திமா, ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 85 பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் பிரிசில்லா நன்றி கூறினார்.

    • எழுமலை-சின்னகட்டளை பகுதிகளில் 17-ந் ேததி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் வெங்க டேசுவரசன் தெரிவித்துள் ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட எழுமலை, சின்னகட்டளை துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டி நாயக்கனூர், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறை பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல் நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்து வார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை செயற் பொறியாளர் வெங்க டேசுவரசன் தெரிவித்துள் ளார்.

    • வாடிப்பட்டி அருகே ஆதிஅய்யனார் கோவிலில் நடந்த புரட்டாசி பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான்-மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாள் ஆதி அய்யனார் சந்தன காப்பு அலங்காரத்திலும், 2-ம் நாள் வெள்ளிகாப்பு அலங்காரத்திலும் காட்சி அளித்தார். முதல் நாளில் அய்யனார் கோவில் வீட்டில் இருந்து பொட்டி எடுப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது பொதுமக்கள் வாழை பழங்களை சூறை யிட்டனர்.

    2-ம் நாள் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் உள்ள நடுக்கல் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் வணங்கி சென்றனர். 2 நாள் திரு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வழக்கமாக 2-ம் நாள் திருவிழாவில் மஞ்சு விரட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போலீசார் அனுமதி அளிக்காததால் மஞ்சு விரட்டு நடக்கவில்லை. இதனால் மாடு வளர்ப்போர், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இனி மேலாவது வரும் திருவிழா வில் மஞ்சுவிரட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

    • எனது குடும்ப கோவில்-நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று ரஜினி மன்ற பிரமுகர் போலீசில் புகார் செய்தார்.
    • இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

    மதுரை

    மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் பாலநமச்சிவாயன். ரஜினி மன்ற நிர்வாகியான இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சத்திரக் குடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்களது குடும்பத்திற்கு சொந்தமாக பூர்வீகமான குமர கடவுள் சிலை, கிரீடம் மற்றும் எனது தாத்தாவின் சமாதி ஆகியவை முது குளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் கருப்ப பிள்ளை மடம் என்ற பெயரில் உள்ளது.

    இங்கே பொதுமக்கள் வழிபாடு எதுவும் இல்லை. எங்கள் குடும்ப வழிபாடு மட்டுமே நடந்து வருகிறது. இது தனியார் கோவில். தனியார் சொத்து என்ப தற்கான உரிமை கோரி முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் இருந்து வரும் நிலையில் பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோவில் மற்றும் இடத்தை அப கரிக்கும் நோக்கில் அதன் சாவியை கேட்டு மிரட்டு கிறார்கள். சாவியை தரா விட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என்றும் வழக்கு நிலுவையில் இருப் பதையும் பொருட்படுத்தா மல் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

    யாரோ தூண்டுதலின் பேரில் எங்களது குடும்ப கோவில், நகை மற்றும் இடத்தை அபகரிக்க இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகள் முயற்சிக்கிறார்கள். எனவே இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்க ளுக்கு உரிய சட்டப் பாது காப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது55). வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் முகவராக இருந்து வந்தார். இவரது குலதெய்வ கோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளது.

    இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து வாடகை காரில் கருப்பசாமி, அவரது மனைவி தனலட்சுமி (50), மகள் சீதாலட்சுமி (20) ஆகியோர் புறப்பட்டனர்.

    காரை மதுரை தோப்பூரைச் சேர்ந்த பால்பாண்டி (50) என்பவர் ஓட்டி சென்றார். வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நகரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

    இதில் காருக்குள் இருந்த கருப்பசாமி, கார் டிரைவர் பால்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஏட்டு சுந்தர பாண்டி விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி இருந்த கருப்பசாமி, பால் பாண்டியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் அறிவானந்தபாண்டியன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் அறிவுச்சுடர் கே.அறிவானந்த பாண்டியனின் 63-வது பிறந்த நாள் விழா பேரவை யின் அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    நாகமலை, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும், தெப்பக்குளம் அய்ய நாடார் ஜெயலெட்சுமி அம்மாள் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து காமராஜர் அறநிலையத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடை பெற்றது. 12 மணிக்கு தெற்குவாசலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரவையின் துணைத்தலைவர் கே.மதனகோபால். பொதுச்செயலாளர் வி.பி.மணி, பொருளாளர் பா.குமார், மாநகர் தலைவர் எஸ்.எம்.மகராஜன், துணைத்தலைவர்கள் எம்.என்.ரவி, ஜி.முத்து. செயலாளர் ஏ.மதிவாணன், துணைச்செயலாளர் ஜி.பி.பாண்டி.

    மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி துணைத் தலைவர் பி.செந்தில் குமார், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிர மணியன்.

    ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்கு லேசன் பள்ளி தலைவர் ஆர். கணேசன், செயலாளர் கே.ஆனந்த், இணைச்செய லாளர் ஒய். சூசை அந்தோணி, பேரவையின் கிழக்குத் தொகுதி கதிர்வேல், முருகேச பாண்டியன், ரவிச் சந்திரன், டேனியல், கிருஷ் ணன். மணிக்குமார், மாரி யப்பன், ராஜா, மதியழகன், காமராஜ்பாபு, மத்திய தொகுதி டி.கார்த்திகை செல்வம், கணேசன், ஜவஹர். பாலன், காசி, பெத்தராஜன்.

    ரவி, சந்திரசேகர். மேற்குத்தொகுதி ஏ.சிவக்குமார், ஜெய்சங்கர், சங்கர், ரவி, ராமலிங்கம். தினேஷ். முத்துராஜ். வடக்கு தொகுதி ஆர்.காசி விஸ்வநாதன், வேலாயுதம். கணேசன் தெற்கு தொகுதி நாகசேகர், வெங்கடேஷ், சுரேஷ், சரவணக்குமார், தன்ராஜ். முருகேசன், முருகானந்தம். விஜய பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புனித மண் டெல்லி செல்கிறது
    • பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    மதுரை

    நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் என்ற பெயரில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுடெல்லியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவிற்கு நாடு முழுவதும் தியாகிகள் வாழ்ந்த பகுதிகளில் மண் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் இருந்து தியாகிகள் வாழ்ந்த இடங்களில் புனித மண் கலசங்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த மண்ணை ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அந்த கலசத்தை கொண்டு வருவர். பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    வருகிற 28-30-ந் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75 ஆயிரம் கலசங்களில் கொண்டு செல்லப்படும் மண் சேர்க்கப்பட்டு பூங்காவில் வைக்கப்படும்.

    மதுரையில் நடைபெற்ற புனித மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார், அனில்குமார், தேசிய சேவை தொண்டர்கள் மீனாட்சி, பிரியங்கா, அபிதா, மணிமொழி, தனசேகரன், கணேசன், ராகவ், என்.எம்.ஆர்.மதுரை காந்தி கல்லூரி முதல்வர் கோமதி, மகிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள்.
    • வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெயஆனந்த் என்ற கர்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் கட்டிடம் குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துக்களை நான் பதிவு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சம்பந்தமாக என்னிடம் முறையான விளக்கம் கேட்கப்படவில்லை.

    எனது வாழ்வாதாரமே கோவிலில் அர்ச்சகர் பணியை வைத்து தான் உள்ளது. என்னுடைய சமூக வலைதள கருத்துக்கள் தவறு என்று நான் பதிவிட்டும் அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் ஒன்றும் நீங்கள் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது. கோவில் குறித்த இந்த மாதிரி பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்கும்.

    கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள். அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பியதோடு, கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பின்னர் மனுதாரரை இந்து சமய அறநிலையத்துறையின் இடைக்கால பணி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    • இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள்.
    • சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

    மதுரை

    இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூடலழகர் பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூடலழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளிலும் பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.

    அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். இதனால் அழகர் கோவில் பகுதியில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் யோகநரசிங்க பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில், கைத்தறிநகர் பாலாஜி வெங்கடேசுவர பெருமாள் கோவில், முனிச்சாலை பாலாஜி வெங்கடேசுவர பெருமாள் கோவில், காமராஜர் சாலை ஆஞ்சநேயர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

    மதுரை

    மூவேந்தர் முன்னேற்ற கழக இணை தலைவர் டி.ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தவர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு திருமங்க லத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவ லகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், உணவு பொருட்கள், வேஷ்டி,சேலை உள்ளிட்டவைகளை சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்குகிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறு கிறது.

    இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார், தாரணி, ஹனிகா, கரிகால் சோழன், வேதாந்த், ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
    • வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் அறிவுறுத்த லின் படி வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடை பெற்றது. செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    கூட்டத்தில் விக்கிர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மற்றும் ஜென ரேட்டர் வசதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு ஏ.சி., சுகாதார ஆய்வாளருக்கு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு கணினி வழங்குதல் மற்றும் செல்லம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், நாட்டாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பேருந்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள், செல்லம்பட்டி, நாட்டாபட்டி, தும்மக்குண்டு, விக்கிரமங்கலம் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் மருத்து வமில்லா மேற்பார்வை யாளர், கோவிலாங்குளம், முதலைக்குளம் ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், பாண்டி, வாய்ஸ் டிரஸ்ட் தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.

    ×