என் மலர்
கிருஷ்ணகிரி
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் தொற்று உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் தனது தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்து வந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து செல்லக்குமார் எம்.பி., சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,41,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,307-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,47,591 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,256 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கி, வங்கி மேலாளர்கள் மூலமாக தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இதில் தகுதியற்ற 8,408 பயனாளிகளில், இதுவரை 3,007 பயனாளிகளிடமிருந்து ரூ. 1 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து உதவி தொகையை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வசூல் செய்து, அரசுக்கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை சேர்த்து, தவறுதலாக பயனடைந்த தனிநபர்கள், கணினி மையங்கள் குறித்து ஒரு முழுமையான விசாரணை செய்து, அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 2 ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஒரு தனி நபர் என 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது பெயர், விபரம் வெளியிடப்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,29,416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,154-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,45,606 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,916 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,016 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர்.






