search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி மாவட்டம்"

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பனி வாட்டி வதைத்து வருகிறது.

    போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பனி மூட்டம் மற்றும் குளிர் மாறி, மாறி வந்தநிலையில் இன்று காலை சுமார் 16 டிகிரி அளவில் போச்சம்பள்ளி பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைகளை வைத்து நேருப்பூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். போச்சம்பள்ளி பகுதிகளில் பெரும்பாலும், நீர் நிலைகள் மற்றும் தென்னந்தோப்புகள் இருப்பதால் கடுமையான குளிர்ஏற்பட்டு சீதோஷ்ண நிலை மாறி உள்ளதால் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதம் சளி, ஜொரம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற குவிந்து வருகின்றன.

    சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் நாளுக்குநாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது.

    இரவு 12 மணி முதல் காலை 10 மணி வரை அதிக குளிர் நிலவி வருவதால் அதிகாலை 4, 5 மணிக்கு திறக்கப்படும் டீகடை, காய்கறி கடை, மளிகை கடை வியாபாரிகள் தாமதமாக தங்கள் கடைகளை திறந்து, வேலைகளை செய்து வருகின்றனர். கடும்குளிர் என்பதால் சொட்டர், குல்லா, அணிந்து செல்கின்றனர். கால், கைகள் மறைக்கப்படாத பகுதியில் குளிரினால் விரைப்பு ஏற்பட்டு வாகனம்கூட இயக்க முடியவில்லை எனவும், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

    மேலும், சூளகிரி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவும் இந்தது.

    சூளகிரி சந்தை வீதியில் புதன்கிழமைதோறும் கோழி, ஆடுசந்தை நடைபெறுவது வழக்கம். அதிகாலை 5 மணிக்கே கூடும் இந்த சந்தை இன்று கடும் பனியின் காரணமாக காலை 8 மணிக்கு பிறகு தான் கூடியது. எனவே தாமதமாக கோழிகள், ஆடுகள் கொண்டு வரப்பட்டன. #tamilnews
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று வெளியிட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 82 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 52 ஆயிரத்து 72 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 988 பேரும், 3-ம் பாலின வாக்காளர்கள் (இதரர்) 213 பேரும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 1850 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு பொதுமக்கள் சென்று தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம். 1.1.2019-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி 1.9.2018 முதல் 31.10.2018 -ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாட்களில் பெறப்படும்.

    மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம்.

    மேலும் இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், தனி தாசில்தார் தணிகாசலம், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

    கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் மின்சார பராமரிப்பு பணிகள் என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மாலை 5 மணிக்கு பிறகும் நகரில் மின்சாரம் வரவில்லை. இரவு 10.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது.

    அதன் பிறகும் இரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    தளி-40, ராயக்கோட்டை-29, தேன்கனிக்கோட்டை-18, சூளகிரி-14, ஓசூர்-9, பாரூர்-8.60, ஊத்தங்கரை-8.20, நெடுங்கல்-8, கிருஷ்ணகிரி-7, போச்சம்பள்ளி-4.90, பெனுகொண்டாபுரம்-3.20 என மொத்தம் 149.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
    ×