search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி லீலாவதி (வயது 45). அண்ணாத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாதுரை மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை மனைவி தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த லீலாவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×