search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசூர் கொள்ளை"

    ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு மர்ம நபர்கள் இவரது நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே இருந்த 48 ஆயிரத்து 594 மீட்டர் காப்பர் வயர்கள், 200 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.

    இந்த நிலையில், நிறுவனத்தில் பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அதில் 5 கைரேகைகளை போலீசார் அங்கிருந்து பதிவு செய்து கொண்டனர்.

    எனவே இந்த திருட்டில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர், டிச.19-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள திரிவேணி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அப்போது அவர்கள் கவிதாவை மிரட்டி ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவம குறித்து கவிதா ஓசூர் டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×