என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தேன்கனிக்கோட்டையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேன்கனிக்கோட்டையில் பிரதமரின் வேளாண்மை நிதிஉதவி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பிரதம மந்திரி வேளாண்மை நிதிஉதவி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு ஏ.ஐ.கே.எஸ். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமப்பா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் வெங்கடேஷ், துணை செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் நிதிஉதவி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளுக்கான பழைய கடன்களை தள்ளுபடி செய்து உடனடியாக புதிய கடன்களை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story






