என் மலர்
கிருஷ்ணகிரி
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை கண்டித்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வற்புறுத்தியும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் ஆகிய இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை சுகுமார் (46) ஒட்டினார்.
நேற்று இரவு 9 மணியளவில் பஸ், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் வேட்டையம்பட்டி ஏரிக்கரை அருகே சென்ற போது 2 பேர் திடீரென வழிமறித்து பஸ் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசினர். இதில் கண்ணாடி நொறுங்கி சேதமானது.
இதுகுறித்து பஸ் டிரைவர் சுகுமார், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் கண்ணாடியை உடைத்தது, ஆலமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த ரவி (33), வேட்டையம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (32) ஆகியோர் என தெரிய வந்தது. 2 பேரும் கட்டிட மேஸ்திரிகள் ஆவர்.
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் அதற்து எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர்.
வன்னியர்களுக்கு 1.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தருமபுரி 4 ரோடு, நல்லம்பள்ளி, ஏரியூர், பொம்மிடி, இண்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், மற்றும் சாலைமறியல் செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஆனைக்கட்டி, பொன்னூத்து அம்மன் கோவில், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடி வாரப்பகுதிகளிலுள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன.
காட்டு யானைகள் ஊருக்குள்புகுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கணபதி நகர், கிரீன் பீல்டு, லட்சுமி நகர், ரேனுகாபுரம் பகுதிகளில் கடந்த 29-ந் தேதி அதிகாலையில் வந்த ஓற்றை காட்டு யானை அந்த பகுதிகளில் சுற்றி சுற்றி வந்துள்ளது. மேலும் அங்கு புதியதாக கட்டப்பட்டு கிரகபிரவேசம் செய்யப்பட்ட வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனையும் அந்த யானை பிடிங்கி தின்றுள்ளது. அங்குள்ள குப்பை மேட்டை ஆய்வு செய்துள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர். தெருக்களில் உலா வந்த யானை அங்குள்ள ஒரு சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2 முறை யானை வந்ததால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் மேல்மொணவூர் முகாமை சேர்ந்த லூட்சு மேரி என்பவர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
கடந்த 31 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம். நீண்டகாலமாக எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சொந்த வீடு என்பது எங்களுக்கு பெரும் கனவாக உள்ளது. சரியான வீடு வசதி இல்லாததால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். 4 அல்லது 5 பேர் உள்ள குடும்பங்களில் படுக்க கூட இடமில்லை.
சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாததால் விறகு அடுப்பில் சமையல் செய்து பெண்கள் தவிக்கிறார்கள். எங்களுக்கு வீடு, கியாஸ் இணைப்பு போன்றவை கிடைக்க உள்ளது.
வீடு கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் உங்களில் ஒருவர் என கூறியது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் பாதியில் படிப்பை நிறுத்தியவள். வசதி இல்லாததால் பலர் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
தற்போது பணபலன் அதிகமாக உள்ளதால் கல்வி செலவை அரசே ஏற்கும் என்பதால் இலங்கைத் தமிழர்கள் பலர் படிக்க முடியும். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.






